حَدَّثَنَا مَالِكُ بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا ابْنُ عُيَيْنَةَ، أَنَّهُ سَمِعَ الزُّهْرِيَّ، يَقُولُ أَخْبَرَنِي الْحَسَنُ بْنُ مُحَمَّدِ بْنِ عَلِيٍّ، وَأَخُوهُ عَبْدُ اللَّهِ، عَنْ أَبِيهِمَا، أَنَّ عَلِيًّا ـ رضى الله عنه ـ قَالَ لاِبْنِ عَبَّاسٍ إِنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم نَهَى عَنِ الْمُتْعَةِ وَعَنْ لُحُومِ الْحُمُرِ الأَهْلِيَّةِ زَمَنَ خَيْبَرَ.
அலி (ரழி) அவர்கள் இப்னு அப்பாஸ் (ரழி) அவர்களிடம் கூறினார்கள்:
"கைபர் (போர்) காலத்தில் நபி (ஸல்) அவர்கள் (நிக்காஹ்) அல்-முத்ஆவையும், வீட்டுக் கழுதைகளின் இறைச்சியையும் தடை செய்தார்கள்."
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَزُهَيْرُ بْنُ حَرْبٍ، وَابْنُ، نُمَيْرٍ قَالَ زُهَيْرٌ حَدَّثَنَا سُفْيَانُ، بْنُ عُيَيْنَةَ حَدَّثَنَا عَمْرٌو، عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَالِمٍ، عَنْ أَبِيهِ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ يُصَلِّي بَعْدَ الْجُمُعَةِ رَكْعَتَيْنِ .
ஸாலிம் அவர்கள் தமது தந்தை (அப்துல்லாஹ் இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹு) அவர்களிடமிருந்து அறிவிக்கிறார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஜுமுஆ தொழுகைக்குப் பிறகு இரண்டு ரக்அத்கள் (சுன்னத்) தொழுவார்கள்.
சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் வழியாக நபி (ஸல்) அவர்களிடமிருந்து (அறிவிக்கப்பட்ட இந்த ஹதீஸ்), லைஸ் மற்றும் யூனுஸ் (ஆகிய அறிவிப்பாளர்கள்) அறிவித்த ஹதீஸைப் போன்றே (அமைந்துள்ளது).
அலி (ரலி) அவர்கள் கூறினார்கள்:
“கைபர் காலத்தில், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பெண்களுடனான முத்ஆவையும் (தற்காலிகத் திருமணத்தையும்), வீட்டில் வளர்க்கப்படும் கழுதைகளின் இறைச்சியை உண்பதையும் தடைசெய்தார்கள்.”