حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ حُمَيْدٍ، عَنْ أَنَسٍ، قَالَ لَمَّا قَدِمَ عَلَيْنَا عَبْدُ الرَّحْمَنِ فَآخَى النَّبِيُّ صلى الله عليه وسلم بَيْنَهُ وَبَيْنَ سَعْدِ بْنِ الرَّبِيعِ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم أَوْلِمْ وَلَوْ بِشَاةٍ .
அனஸ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அப்துர்-ரஹ்மான் (ரழி) (மக்காவிலிருந்து ஹிஜ்ரத் செய்து) எங்களிடம் வந்தபோது, நபி (ஸல்) அவர்கள் அவருக்கும் ஸஅத் பின் அர்-ரபீஉ (ரழி) அவர்களுக்கும் இடையில் சகோதரத்துவப் பிணைப்பை ஏற்படுத்தினார்கள். பிறகு (அப்துர்-ரஹ்மான் (ரழி) திருமணம் செய்துகொண்டு, அதன் அடையாளத்துடன் வந்தபோது) நபி (ஸல்) அவர்கள், "ஓர் ஆட்டைக் கொண்டாவது (திருமண) விருந்தளியுங்கள்" என்று கூறினார்கள்.
وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عُبَيْدٍ الْغُبَرِيُّ، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّ عَبْدَ الرَّحْمَنِ بْنَ عَوْفٍ، تَزَوَّجَ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم عَلَى وَزْنِ نَوَاةٍ مِنْ ذَهَبٍ . فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم أَوْلِمْ وَلَوْ بِشَاةٍ .
அனஸ் பின் மாலிக் (ரழி) அவர்கள் அறிவித்ததாவது: அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரழி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் வாழ்நாளில் ஒரு நவாத் எடையளவு தங்கத்தை (மஹராகக் கொடுத்து) திருமணம் செய்தார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவரிடம் கூறினார்கள்: ஓர் ஆட்டைக் கொண்டாவது (திருமண) விருந்தளியுங்கள்.