ஜுதாமா பின்த் வஹ்ப் அல்-அசதிய்யா (ரழி) அவர்கள் கூறினார்கள்: "நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறக் கேட்டேன்: 'பாலூட்டும் தாயுடன் தாம்பத்திய உறவு கொள்வதைத் தடை செய்ய நான் விரும்பினேன், ஆனால் பாரசீகர்களும் ரோமானியர்களும் (இதைச்) செய்வதை நான் கண்டேன், அது அவர்களின் குழந்தைகளைக் கொல்வதில்லை (என்பதால் நான் அதைத் தடை செய்யவில்லை).' மேலும் அஸ்ல் (தாம்பத்திய உறவின் போது விந்துவை கருப்பையில் செலுத்தாமல் வெளியேற்றுவது) பற்றி அவரிடம் கேட்கப்பட்டபோது, அவர் கூறக் கேட்டேன்: 'அது மறைமுகமாக (குழந்தைகளை) உயிருடன் புதைப்பதாகும்.'"