இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

2468ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ عُقَيْلٍ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ أَخْبَرَنِي عُبَيْدُ اللَّهِ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي ثَوْرٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ لَمْ أَزَلْ حَرِيصًا عَلَى أَنْ أَسْأَلَ عُمَرَ ـ رضى الله عنه ـ عَنِ الْمَرْأَتَيْنِ مِنْ أَزْوَاجِ النَّبِيِّ صلى الله عليه وسلم اللَّتَيْنِ قَالَ اللَّهُ لَهُمَا ‏{‏إِنْ تَتُوبَا إِلَى اللَّهِ فَقَدْ صَغَتْ قُلُوبُكُمَا‏}‏ فَحَجَجْتُ مَعَهُ فَعَدَلَ وَعَدَلْتُ مَعَهُ بِالإِدَاوَةِ، فَتَبَرَّزَ حَتَّى جَاءَ، فَسَكَبْتُ عَلَى يَدَيْهِ مِنَ الإِدَاوَةِ، فَتَوَضَّأَ فَقُلْتُ يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ مَنِ الْمَرْأَتَانِ مِنْ أَزْوَاجِ النَّبِيِّ صلى الله عليه وسلم اللَّتَانِ قَالَ لَهُمَا ‏{‏إِنْ تَتُوبَا إِلَى اللَّهِ‏}‏ فَقَالَ وَاعَجَبِي لَكَ يَا ابْنَ عَبَّاسٍ عَائِشَةُ وَحَفْصَةُ، ثُمَّ اسْتَقْبَلَ عُمَرُ الْحَدِيثَ يَسُوقُهُ، فَقَالَ إِنِّي كُنْتُ وَجَارٌ لِي مِنَ الأَنْصَارِ فِي بَنِي أُمَيَّةَ بْنِ زَيْدٍ، وَهْىَ مِنْ عَوَالِي الْمَدِينَةِ، وَكُنَّا نَتَنَاوَبُ النُّزُولَ عَلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَيَنْزِلُ يَوْمًا وَأَنْزِلُ يَوْمًا، فَإِذَا نَزَلْتُ جِئْتُهُ مِنْ خَبَرِ ذَلِكَ الْيَوْمِ مِنَ الأَمْرِ وَغَيْرِهِ، وَإِذَا نَزَلَ فَعَلَ مِثْلَهُ، وَكُنَّا مَعْشَرَ قُرَيْشٍ نَغْلِبُ النِّسَاءَ، فَلَمَّا قَدِمْنَا عَلَى الأَنْصَارِ إِذَا هُمْ قَوْمٌ تَغْلِبُهُمْ نِسَاؤُهُمْ، فَطَفِقَ نِسَاؤُنَا يَأْخُذْنَ مِنْ أَدَبِ نِسَاءِ الأَنْصَارِ، فَصِحْتُ عَلَى امْرَأَتِي، فَرَاجَعَتْنِي، فَأَنْكَرْتُ أَنْ تُرَاجِعَنِي، فَقَالَتْ وَلِمَ تُنْكِرُ أَنْ أُرَاجِعَكَ فَوَاللَّهِ إِنَّ أَزْوَاجَ النَّبِيِّ صلى الله عليه وسلم لَيُرَاجِعْنَهُ، وَإِنَّ إِحْدَاهُنَّ لَتَهْجُرُهُ الْيَوْمَ حَتَّى اللَّيْلِ‏.‏ فَأَفْزَعَنِي، فَقُلْتُ خَابَتْ مَنْ فَعَلَ مِنْهُنَّ بِعَظِيمٍ‏.‏ ثُمَّ جَمَعْتُ عَلَىَّ ثِيَابِي، فَدَخَلْتُ عَلَى حَفْصَةَ فَقُلْتُ أَىْ حَفْصَةُ، أَتُغَاضِبُ إِحْدَاكُنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم الْيَوْمَ حَتَّى اللَّيْلِ فَقَالَتْ نَعَمْ‏.‏ فَقُلْتُ خَابَتْ وَخَسِرَتْ، أَفَتَأْمَنُ أَنْ يَغْضَبَ اللَّهُ لِغَضَبِ رَسُولِهِ صلى الله عليه وسلم فَتَهْلِكِينَ لاَ تَسْتَكْثِرِي عَلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَلاَ تُرَاجِعِيهِ فِي شَىْءٍ وَلاَ تَهْجُرِيهِ، وَاسْأَلِينِي مَا بَدَا لَكِ، وَلاَ يَغُرَّنَّكِ أَنْ كَانَتْ جَارَتُكِ هِيَ أَوْضَأَ مِنْكِ وَأَحَبَّ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم ـ يُرِيدُ عَائِشَةَ ـ وَكُنَّا تَحَدَّثْنَا أَنَّ غَسَّانَ تُنْعِلُ النِّعَالَ لِغَزْوِنَا، فَنَزَلَ صَاحِبِي يَوْمَ نَوْبَتِهِ فَرَجَعَ عِشَاءً، فَضَرَبَ بَابِي ضَرْبًا شَدِيدًا، وَقَالَ أَنَائِمٌ هُوَ فَفَزِعْتُ فَخَرَجْتُ إِلَيْهِ‏.‏ وَقَالَ حَدَثَ أَمْرٌ عَظِيمٌ‏.‏ قُلْتُ مَا هُوَ أَجَاءَتْ غَسَّانُ قَالَ لاَ، بَلْ أَعْظَمُ مِنْهُ وَأَطْوَلُ، طَلَّقَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم نِسَاءَهُ‏.‏ قَالَ قَدْ خَابَتْ حَفْصَةُ وَخَسِرَتْ، كُنْتُ أَظُنُّ أَنَّ هَذَا يُوشِكُ أَنْ يَكُونَ، فَجَمَعْتُ عَلَىَّ ثِيَابِي، فَصَلَّيْتُ صَلاَةَ الْفَجْرِ مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم فَدَخَلَ مَشْرُبَةً لَهُ فَاعْتَزَلَ فِيهَا، فَدَخَلْتُ عَلَى حَفْصَةَ، فَإِذَا هِيَ تَبْكِي‏.‏ قُلْتُ مَا يُبْكِيكِ أَوَلَمْ أَكُنْ حَذَّرْتُكِ أَطَلَّقَكُنَّ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم قَالَتْ لاَ أَدْرِي هُوَ ذَا فِي الْمَشْرُبَةِ‏.‏ فَخَرَجْتُ، فَجِئْتُ الْمِنْبَرَ، فَإِذَا حَوْلَهُ رَهْطٌ يَبْكِي بَعْضُهُمْ، فَجَلَسْتُ مَعَهُمْ قَلِيلاً ثُمَّ غَلَبَنِي مَا أَجِدُ، فَجِئْتُ الْمَشْرُبَةَ الَّتِي هُوَ فِيهَا فَقُلْتُ لِغُلاَمٍ لَهُ أَسْوَدَ اسْتَأْذِنْ لِعُمَرَ‏.‏ فَدَخَلَ، فَكَلَّمَ النَّبِيَّ صلى الله عليه وسلم ثُمَّ خَرَجَ، فَقَالَ ذَكَرْتُكَ لَهُ، فَصَمَتَ، فَانْصَرَفْتُ حَتَّى جَلَسْتُ مَعَ الرَّهْطِ الَّذِينَ عِنْدَ الْمِنْبَرِ، ثُمَّ غَلَبَنِي مَا أَجِدُ فَجِئْتُ، فَذَكَرَ مِثْلَهُ، فَجَلَسْتُ مَعَ الرَّهْطِ الَّذِينَ عِنْدَ الْمِنْبَرِ، ثُمَّ غَلَبَنِي مَا أَجِدُ فَجِئْتُ الْغُلاَمَ‏.‏ فَقُلْتُ اسْتَأْذِنْ لِعُمَرَ‏.‏ فَذَكَرَ مِثْلَهُ، فَلَمَّا وَلَّيْتُ مُنْصَرِفًا، فَإِذَا الْغُلاَمُ يَدْعُونِي قَالَ أَذِنَ لَكَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم‏.‏ فَدَخَلْتُ عَلَيْهِ، فَإِذَا هُوَ مُضْطَجِعٌ عَلَى رِمَالِ حَصِيرٍ لَيْسَ بَيْنَهُ وَبَيْنَهُ فِرَاشٌ، قَدْ أَثَّرَ الرِّمَالُ بِجَنْبِهِ، مُتَّكِئٌ عَلَى وِسَادَةٍ مِنْ أَدَمٍ حَشْوُهَا لِيفٌ، فَسَلَّمْتُ عَلَيْهِ، ثُمَّ قُلْتُ وَأَنَا قَائِمٌ طَلَّقْتَ نِسَاءَكَ فَرَفَعَ بَصَرَهُ إِلَىَّ، فَقَالَ ‏"‏ لاَ ‏"‏‏.‏ ثُمَّ قُلْتُ ـ وَأَنَا قَائِمٌ أَسْتَأْنِسُ يَا رَسُولَ اللَّهِ، لَوْ رَأَيْتَنِي، وَكُنَّا مَعْشَرَ قُرَيْشٍ نَغْلِبُ النِّسَاءَ، فَلَمَّا قَدِمْنَا عَلَى قَوْمٍ تَغْلِبُهُمْ نِسَاؤُهُمْ، فَذَكَرَهُ، فَتَبَسَّمَ النَّبِيُّ صلى الله عليه وسلم، ثُمَّ قُلْتُ لَوْ رَأَيْتَنِي، وَدَخَلْتُ عَلَى حَفْصَةَ، فَقُلْتُ لاَ يَغُرَّنَّكِ أَنْ كَانَتْ جَارَتُكِ هِيَ أَوْضَأَ مِنْكِ وَأَحَبَّ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم ـ يُرِيدُ عَائِشَةَ ـ فَتَبَسَّمَ أُخْرَى، فَجَلَسْتُ حِينَ رَأَيْتُهُ تَبَسَّمَ، ثُمَّ رَفَعْتُ بَصَرِي فِي بَيْتِهِ، فَوَاللَّهِ مَا رَأَيْتُ فِيهِ شَيْئًا يَرُدُّ الْبَصَرَ غَيْرَ أَهَبَةٍ ثَلاَثَةٍ‏.‏ فَقُلْتُ ادْعُ اللَّهَ فَلْيُوَسِّعْ عَلَى أُمَّتِكَ، فَإِنَّ فَارِسَ وَالرُّومَ وُسِّعَ عَلَيْهِمْ وَأُعْطُوا الدُّنْيَا، وَهُمْ لاَ يَعْبُدُونَ اللَّهَ، وَكَانَ مُتَّكِئًا‏.‏ فَقَالَ ‏"‏ أَوَفِي شَكٍّ أَنْتَ يَا ابْنَ الْخَطَّابِ أُولَئِكَ قَوْمٌ عُجِّلَتْ لَهُمْ طَيِّبَاتُهُمْ فِي الْحَيَاةِ الدُّنْيَا ‏"‏‏.‏ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ اسْتَغْفِرْ لِي‏.‏ فَاعْتَزَلَ النَّبِيُّ صلى الله عليه وسلم مِنْ أَجْلِ ذَلِكَ الْحَدِيثِ حِينَ أَفْشَتْهُ حَفْصَةُ إِلَى عَائِشَةَ، وَكَانَ قَدْ قَالَ ‏"‏ مَا أَنَا بِدَاخِلٍ عَلَيْهِنَّ شَهْرًا ‏"‏‏.‏ مِنْ شِدَّةِ مَوْجَدَتِهِ عَلَيْهِنَّ حِينَ عَاتَبَهُ اللَّهُ‏.‏ فَلَمَّا مَضَتْ تِسْعٌ وَعِشْرُونَ دَخَلَ عَلَى عَائِشَةَ فَبَدَأَ بِهَا، فَقَالَتْ لَهُ عَائِشَةُ إِنَّكَ أَقْسَمْتَ أَنْ لاَ تَدْخُلَ عَلَيْنَا شَهْرًا، وَإِنَّا أَصْبَحْنَا لِتِسْعٍ وَعِشْرِينَ لَيْلَةً، أَعُدُّهَا عَدًّا‏.‏ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم ‏"‏ الشَّهْرُ تِسْعٌ وَعِشْرُونَ ‏"‏‏.‏ وَكَانَ ذَلِكَ الشَّهْرُ تِسْعٌ وَعِشْرُونَ‏.‏ قَالَتْ عَائِشَةُ فَأُنْزِلَتْ آيَةُ التَّخْيِيرِ فَبَدَأَ بِي أَوَّلَ امْرَأَةٍ، فَقَالَ ‏"‏ إِنِّي ذَاكِرٌ لَكِ أَمْرًا، وَلاَ عَلَيْكِ أَنْ لاَ تَعْجَلِي حَتَّى تَسْتَأْمِرِي أَبَوَيْكِ ‏"‏‏.‏ قَالَتْ قَدْ أَعْلَمُ أَنَّ أَبَوَىَّ لَمْ يَكُونَا يَأْمُرَانِي بِفِرَاقِكَ‏.‏ ثُمَّ قَالَ ‏"‏ إِنَّ اللَّهَ قَالَ ‏{‏يَا أَيُّهَا النَّبِيُّ قُلْ لأَزْوَاجِكَ‏}‏ إِلَى قَوْلِهِ ‏{‏ عَظِيمًا‏}‏ ‏"‏‏.‏ قُلْتُ أَفِي هَذَا أَسْتَأْمِرُ أَبَوَىَّ فَإِنِّي أُرِيدُ اللَّهَ وَرَسُولَهُ وَالدَّارَ الآخِرَةَ‏.‏ ثُمَّ خَيَّرَ نِسَاءَهُ، فَقُلْنَ مِثْلَ مَا قَالَتْ عَائِشَةُ‏.‏
அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்:

நபி (ஸல்) அவர்களின் மனைவியரில், எவர்கள் குறித்து அல்லாஹ், **"இன் ததூபா இலல்லாஹி ஃபகத் ஸகத் குலூபுகுமா"** (நீங்கள் இருவரும் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரினால் (நன்று); ஏனெனில் உங்கள் இருவரின் உள்ளங்களும் சாய்ந்துவிட்டன - அல்குர்ஆன் 66:4) என்று கூறினானோ அந்த இருவர் யார் என்று உமர் (ரலி) அவர்களிடம் கேட்க நான் நீண்ட காலமாக ஆவலுடனிருந்தேன்.

நான் அவர்களுடன் ஹஜ்ஜுக்குச் சென்றேன். (திரும்பும்போது) வழியில் அவர்கள் இயற்கை உபாதையை நிறைவேற்ற ஒதுங்கியபோது நானும் அவர்களுடன் (தண்ணீர்) பாத்திரத்துடன் ஒதுங்கினேன். அவர்கள் வந்து (இயற்கை உபாதையை முடித்தபின்), நான் அவர்களின் கைகளில் அப்பாதிரத்திலிருந்து தண்ணீரை ஊற்றினேன். அவர்கள் ஒளுச் செய்தார்கள். அப்போது நான், "அமீருல் முஃமினீன் அவர்களே! நபி (ஸல்) அவர்களின் மனைவியரில், எவர்களைக் குறித்து அல்லாஹ் **'இன் ததூபா இலல்லாஹி...'** (நீங்கள் இருவரும் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரினால்...) என்று கூறினானோ அந்த இரு பெண்கள் யார்?" என்று கேட்டேன்.

அதற்கு உமர் (ரலி), "இப்னு அப்பாஸே! உம்மைக் கண்டு நான் வியக்கிறேன்! அவர்கள் ஆயிஷாவும் ஹஃப்ஸாவும் ஆவர்" என்று கூறினார்கள். பிறகு உமர் (ரலி) அந்த ஹதீஸை (முழுமையாக) விவரிக்கலானார்கள்:

"நானும், அன்சாரிகளில் உள்ள என்னுடைய ஒரு அண்டை வீட்டாரும் மதீனாவின் மேட்டுப் பகுதியில் உள்ள பனூ உமைய்யா பின் ஸைத் குடியிருப்புப் பகுதியில் வசித்து வந்தோம். நாங்கள் முறை வைத்துக்கொண்டு நபி (ஸல்) அவர்களிடம் சென்று வருவோம். ஒரு நாள் அவரும், ஒரு நாள் நானும் செல்வோம். நான் இறங்கிச் சென்றால், அன்றைய தினத்தில் அருளப்பட்ட வஹி (வேத அறிவிப்பு) மற்றும் இதர செய்திகளுடன் அவரிடம் வருவேன். அவர் சென்றால் அவரும் அவ்வாறே செய்வார்.

நாங்கள் குறைஷிக் கூட்டத்தினர்; பெண்களை ஆளக்கூடியவர்களாக இருந்தோம். ஆனால் நாங்கள் அன்சாரிகளிடம் வந்தபோது, அவர்கள் தங்கள் பெண்களிடம் அடங்கிப் போகக்கூடிய கூட்டத்தினராக இருந்தனர். எங்கள் பெண்கள் அந்த அன்சாரிப் பெண்களின் ஒழுக்கத்தை (பழக்கவழக்கங்களை) எடுத்துக்கொள்ளத் தொடங்கினர். ஒருமுறை நான் என் மனைவியிடம் சத்தமிட்டேன். அவள் என்னிடம் எதிரத்துப் பேசினாள். அவள் என்னை எதிரத்துப் பேசுவதை நான் வெறுத்தேன். அதற்கு அவள், 'நான் உங்களை எதிரத்துப் பேசுவதை ஏன் மறுக்கிறீர்கள்? அல்லாஹ்வின் மீதாணையாக! நபி (ஸல்) அவர்களின் மனைவியர் அவர்களை எதிர்த்துப் பேசுகிறார்கள். இன்னும் அவர்களில் ஒருவர் (ஹஃப்ஸா), அந்த நாள் முழுதும் இரவு வரை அவர்களைப் பிரிந்து இருக்கிறார்கள் (பேசுவதில்லை)' என்று கூறினாள்.

இது எனக்குத் திடுக்கத்தை ஏற்படுத்தியது. நான், 'அவர்களில் எவர் அப்படிச் செய்தாரோ அவர் நஷ்டமடைந்துவிட்டார்' என்று கூறிவிட்டு, என் ஆடையை அணிந்துகொண்டு (என் மகள்) ஹஃப்ஸாவிடம் சென்றேன். 'ஹஃப்ஸாவே! உங்களில் ஒருவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைக் கோபப்படுத்திவிட்டு, அன்று இரவு வரை அவர்களைப் பிரிந்திருக்கிறாரா?' என்று கேட்டேன். அவர், 'ஆம்' என்றார். நான், 'அவர் நஷ்டமடைந்துவிட்டார்; தோல்வியுற்றுவிட்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் கோபத்திற்காக அல்லாஹ் கோபம் கொள்வதிலிருந்து, அதனால் நீ அழிந்து போவதிலிருந்து நீ அச்சமற்று இருக்கிறாயா? அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அதிகம் கேட்காதே! எந்த விஷயத்திலும் அவர்களை எதிர்த்துப் பேசாதே! அவர்களைப் புறக்கணிக்காதே (பேசாமல் இருக்காதே)! உனக்குத் தோன்றியதை என்னிடம் கேள். உன்னுடைய தோழி (ஆயிஷா), உன்னைவிட அழகானவராகவும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு மிகவும் விருப்பமானவராகவும் இருப்பது உன்னை ஏமாற்றிவிட வேண்டாம்' என்று கூறினேன். (இங்குத் தோழி என்று ஆயிஷாவைக் குறிப்பிடுகிறார்).

கஸ்ஸான் கூட்டத்தார் நம் மீது படையெடுப்பதற்காகத் (தங்கள் குதிரைகளுக்கு) லாடம் கட்டிக்கொண்டிருக்கிறார்கள் என்று நாங்கள் பேசிக்கொண்டிருந்தோம். என்னுடைய தோழர், அவருடைய முறை வந்த நாளில் சென்றுவிட்டு, இரவில் திரும்பி வந்து என்னுடைய கதவை மிக வேகமாகத் தட்டினார். 'அவர் தூங்கிக் கொண்டிருக்கிறாரா?' என்று கேட்டார். நான் திடுக்கிட்டு அவரிடம் வெளியே வந்தேன். அவர், 'மிகப் பெரிய விபரீதம் நடந்துவிட்டது' என்றார். நான், 'என்னது? கஸ்ஸான் கூட்டத்தார் வந்துவிட்டார்களா?' என்று கேட்டேன். அவர், 'இல்லை, அதைவிடப் பெரியதும் கொடுமையானதுமாகும்; அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தங்கள் மனைவியரை விவாகரத்துச் செய்துவிட்டார்கள்' என்று கூறினார்.

நான், 'ஹஃப்ஸா நஷ்டமடைந்தாள்; தோல்வியுற்றாள். இப்படி நடக்கும் என்று நான் முன்பே நினைத்தேன்' என்று கூறினேன். நான் ஆடையை அணிந்துகொண்டு, நபி (ஸல்) அவர்களுடன் ஃபஜ்ர் தொழுதேன். நபி (ஸல்) அவர்கள் (பள்ளிவாசலை அடுத்துள்ள) ஒரு மேல் அறைக்குச் சென்று அதில் தனித்திருந்தார்கள். நான் ஹஃப்ஸாவிடம் சென்றேன்; அவர் அழுதுகொண்டிருந்தார். 'ஏன் அழுகிறாய்? நான் உன்னை (முன்பே) எச்சரிக்கவில்லையா? அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உங்களை விவாகரத்துச் செய்துவிட்டார்களா?' என்று கேட்டேன். அதற்கு அவர், 'எனக்குத் தெரியவில்லை; இதோ அவர்கள் அந்த மேல் அறையில் தனித்திருக்கிறார்கள்' என்றார்.

நான் வெளியே வந்து மிம்பருக்கு அருகில் சென்றேன். அங்கே ஒரு கூட்டத்தார் அழுதுகொண்டு அமர்ந்திருந்தார்கள். அவர்களுடன் சிறிது நேரம் அமர்ந்தேன். பிறகு என் துக்கம் மேலிடவே, நபி (ஸல்) அவர்கள் இருந்த மேல் அறைக்குச் சென்று, அவர்களுக்குப் பணிவிடை செய்யும் ஒரு கருப்பு நிறப் பையனிடம், 'உமருக்காக அனுமதி கேள்' என்று கூறினேன். அவர் உள்ளே சென்று நபி (ஸல்) அவர்களிடம் பேசிவிட்டு வெளியே வந்து, 'நான் உங்களுக்காக அவர்களிடம் கூறினேன்; ஆனால் அவர்கள் மௌனமாக இருந்தார்கள்' என்றார்.

எனவே நான் திரும்பி வந்து, மிம்பருக்கு அருகில் இருந்த கூட்டத்தினருடன் அமர்ந்தேன். மீண்டும் துக்கம் மேலிடவே அந்தப் பையனிடம் வந்து, 'உமருக்காக அனுமதி கேள்' என்றேன். அவரும் (முன்பு போன்றே) அதே பதிலைச் சொன்னார். நான் திரும்பச் செல்லும்போது அந்தப் பையன் என்னை அழைத்து, 'அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உங்களை அனுமதிக்கிறார்கள்' என்றார்.

நான் உள்ளே நுழைந்தேன். நபி (ஸல்) அவர்கள் ஒரு பாயின் மீது சாய்ந்திருந்தார்கள். அவர்களுக்கும் பாய்க்கும் இடையில் விரிக்க எதுவும் இருக்கவில்லை. அவர்களின் விலாப்புறத்தில் பாயின் அச்சு பதிந்திருந்தது. ஈச்சநார் நிரப்பப்பட்ட ஒரு தோல்த் தலையணை மீது அவர்கள் சாய்ந்திருந்தார்கள். நான் ஸலாம் கூறிவிட்டு, நின்றவாறே, 'அல்லாஹ்வின் தூதரே! உங்கள் மனைவியரை விவாகரத்துச் செய்துவிட்டீர்களா?' என்று கேட்டேன். அவர்கள் பார்வையை என் பக்கம் திருப்பி, 'இல்லை' என்றார்கள்.

நான் நின்றுகொண்டே, (சூழலை இலகுவாக்க) மனதைவிட்டுப் பேசலானேன்: 'அல்லாஹ்வின் தூதரே! நாம் குறைஷிக் கூட்டத்தினர்; பெண்களை அடக்கி ஆளக்கூடியவர்களாக இருந்தோம். ஆனால் பெண்கள் தங்கள் கணவர்களை அடக்கி ஆளக்கூடிய ஒரு கூட்டத்தாரிடம் (மதீனாவிற்கு) நாம் வந்தோம்...' என்று (முழு) விஷயத்தையும் கூறினேன். நபி (ஸல்) அவர்கள் புன்னகைத்தார்கள். பிறகு, 'நான் ஹஃப்ஸாவிடம் சென்று, உன் தோழி (ஆயிஷா) உன்னை விட அழகானவராகவும் நபி (ஸல்) அவர்களுக்கு விருப்பமானவராகவும் இருப்பது உன்னை ஏமாற்றிவிட வேண்டாம் என்று கூறினேன்' என்று சொன்னேன். அப்போதும் நபி (ஸல்) அவர்கள் புன்னகைத்தார்கள்.

அவர்கள் சிரிப்பதைக் கண்டவுடன் நான் அமர்ந்தேன். அறையை நோட்டம் விட்டேன். அல்லாஹ்வின் மீதாணையாக! பதப்படுத்தப்படாத மூன்று தோல் துண்டுகளைத் தவிர (குறிப்பிடத்தக்க) எதையும் நான் அங்கே பார்க்கவில்லை. நான், 'அல்லாஹ்வின் தூதரே! உங்கள் சமுதாயத்திற்குச் செல்வ வளம் வழங்க அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள். பாரசீகர்களும் ரோமர்களும் அல்லாஹ்வை வணங்காதவர்களாக இருந்தும் அவர்களுக்குச் செல்வ வளம் வழங்கப்பட்டுள்ளது; அவர்களுக்கு உலகம் கொடுக்கப்பட்டுள்ளது' என்று கூறினேன்.

அப்போது சாய்ந்திருந்த அவர்கள் எழுந்து உட்கார்ந்து, **"இப்னுல் கத்தாபே! நீரும் சந்தேகத்திலா இருக்கிறீர்? அவர்கள், தங்களுடைய நன்மைகளுக்கான கூலியை இவ்வுலக வாழ்விலேயே விரைவாகக் கொடுக்கப்பட்டுவிட்ட கூட்டத்தினர் ஆவர்"** என்று கூறினார்கள். நான், 'அல்லாஹ்வின் தூதரே! எனக்காகப் பாவமன்னிப்புக் கோருங்கள்' என்றேன்.

ஹஃப்ஸா, ஆயிஷாவிடம் அந்த இரகசியத்தைப் பரப்பிய காரணத்தினால், நபி (ஸல்) அவர்கள் கோபமுற்று, ஒரு மாத காலத்திற்குத் தம் மனைவியரிடம் செல்வதில்லை என்று சத்தியம் செய்திருந்தார்கள். அல்லாஹ் அவர்களைக் கண்டித்தபோது அவர்கள் இம்முடிவை எடுத்திருந்தார்கள்.

இருபத்தொன்பது நாட்கள் முடிந்ததும், (முதலில்) ஆயிஷாவிடம் சென்றார்கள். ஆயிஷா (ரலி), 'நீங்கள் ஒரு மாதத்திற்கு எங்களிடம் வருவதில்லை என்று சத்தியம் செய்திருந்தீர்கள்; ஆனால் நாங்கள் இப்போது இருபத்தொன்பது இரவுகளையே அடைந்துள்ளோம்; நான் எண்ணிக்கொண்டிருந்தேன்' என்றார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், **"மாதம் என்பது இருபத்தொன்பது நாட்களாகும்"** என்றார்கள். அந்த மாதம் இருபத்தொன்பது நாட்களைக் கொண்டதாக இருந்தது.

ஆயிஷா (ரலி) கூறினார்கள்: பிறகு (எங்களுக்கு) விருப்பத் தேர்வு அளிக்கும் இறைவசனம் இறங்கியது. நபி (ஸல்) அவர்கள் என்னிடமே முதலில் ஆரம்பித்தார்கள். 'நான் உன்னிடம் ஒரு விஷயத்தைச் சொல்கிறேன்; உன் பெற்றோரிடம் ஆலோசனை கேட்கும் வரை இதில் நீ அவசரப்பட வேண்டாம்' என்றார்கள். என் பெற்றோர் அவர்களைப் பிரியுமாறு எனக்கு ஏவமாட்டார்கள் என்பதை அவர்கள் அறிந்திருந்தார்கள். பிறகு அல்லாஹ் கூறியதாக பின்வரும் வசனத்தை ஓதிக் காட்டினார்கள்:

**"யா அய்யுஹன் நபிய்யு குல் லி அஸ்வாஜிக்க..."**
(பொருள்: நபியே! உம் மனைவியரிடம் கூறும்: நீங்கள் இவ்வுலக வாழ்க்கையையும், இதன் அலங்காரத்தையும் விரும்புவீர்களானால் வாருங்கள்; நான் உங்களுக்கு வசதியளித்து, அழகிய முறையில் உங்களை விடுவித்து விடுகிறேன். அவ்வாறின்றி, நீங்கள் அல்லாஹ்வையும் அவனது தூதரையும் மறுமை வீட்டையும் விரும்புவீர்களானால், உங்களில் நன்மை செய்வோருக்கு அல்லாஹ் மகத்தான நற்கூலியைச் சித்தப்படுத்தியுள்ளான் - அல்குர்ஆன் 33:28-29).

நான், 'இந்த விஷயத்திலா நான் என் பெற்றோரிடம் ஆலோசனை கேட்பேன்? நான் அல்லாஹ்வையும், அவனது தூதரையும், மறுமை வீட்டையுமே விரும்புகிறேன்' என்று கூறினேன். பிறகு நபி (ஸல்) அவர்கள் மற்ற மனைவியருக்கும் விருப்பத் தேர்வு அளித்தார்கள். அவர்களும் ஆயிஷா (ரலி) கூறியவாறே கூறினார்கள்."

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
4913ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ بِلاَلٍ، عَنْ يَحْيَى، عَنْ عُبَيْدِ بْنِ حُنَيْنٍ، أَنَّهُ سَمِعَ ابْنَ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ يُحَدِّثُ أَنَّهُ قَالَ مَكَثْتُ سَنَةً أُرِيدُ أَنْ أَسْأَلَ عُمَرَ بْنَ الْخَطَّابِ عَنْ آيَةٍ، فَمَا أَسْتَطِيعُ أَنْ أَسْأَلَهُ هَيْبَةً لَهُ، حَتَّى خَرَجَ حَاجًّا فَخَرَجْتُ مَعَهُ فَلَمَّا رَجَعْتُ وَكُنَّا بِبَعْضِ الطَّرِيقِ عَدَلَ إِلَى الأَرَاكِ لِحَاجَةٍ لَهُ ـ قَالَ ـ فَوَقَفْتُ لَهُ حَتَّى فَرَغَ سِرْتُ مَعَهُ فَقُلْتُ يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ مَنِ اللَّتَانِ تَظَاهَرَتَا عَلَى النَّبِيِّ صلى الله عليه وسلم مِنْ أَزْوَاجِهِ فَقَالَ تِلْكَ حَفْصَةُ وَعَائِشَةُ‏.‏ قَالَ فَقُلْتُ وَاللَّهِ إِنْ كُنْتُ لأُرِيدُ أَنْ أَسْأَلَكَ عَنْ هَذَا مُنْذُ سَنَةٍ، فَمَا أَسْتَطِيعُ هَيْبَةً لَكَ‏.‏ قَالَ فَلاَ تَفْعَلْ مَا ظَنَنْتَ أَنَّ عِنْدِي مِنْ عِلْمٍ فَاسْأَلْنِي، فَإِنْ كَانَ لِي عِلْمٌ خَبَّرْتُكَ بِهِ ـ قَالَ ـ ثُمَّ قَالَ عُمَرُ وَاللَّهِ إِنْ كُنَّا فِي الْجَاهِلِيَّةِ مَا نَعُدُّ لِلنِّسَاءِ أَمْرًا، حَتَّى أَنْزَلَ اللَّهُ فِيهِنَّ مَا أَنْزَلَ وَقَسَمَ لَهُنَّ مَا قَسَمَ ـ قَالَ ـ فَبَيْنَا أَنَا فِي أَمْرٍ أَتَأَمَّرُهُ إِذْ قَالَتِ امْرَأَتِي لَوْ صَنَعْتَ كَذَا وَكَذَا ـ قَالَ ـ فَقُلْتُ لَهَا مَالَكِ وَلِمَا هَا هُنَا فِيمَا تَكَلُّفُكِ فِي أَمْرٍ أُرِيدُهُ‏.‏ فَقَالَتْ لِي عَجَبًا لَكَ يَا ابْنَ الْخَطَّابِ مَا تُرِيدُ أَنْ تُرَاجَعَ أَنْتَ، وَإِنَّ ابْنَتَكَ لَتُرَاجِعُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم حَتَّى يَظَلَّ يَوْمَهُ غَضْبَانَ‏.‏ فَقَامَ عُمَرُ فَأَخَذَ رِدَاءَهُ مَكَانَهُ حَتَّى دَخَلَ عَلَى حَفْصَةَ فَقَالَ لَهَا يَا بُنَيَّةُ إِنَّكِ لَتُرَاجِعِينَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم حَتَّى يَظَلَّ يَوْمَهُ غَضْبَانَ‏.‏ فَقَالَتْ حَفْصَةُ وَاللَّهِ إِنَّا لَنُرَاجِعُهُ‏.‏ فَقُلْتُ‏.‏ تَعْلَمِينَ أَنِّي أُحَذِّرُكِ عُقُوبَةَ اللَّهِ وَغَضَبَ رَسُولِهِ صلى الله عليه وسلم يَا بُنَيَّةُ لاَ يَغُرَّنَّكِ هَذِهِ الَّتِي أَعْجَبَهَا حُسْنُهَا حُبُّ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم إِيَّاهَا ـ يُرِيدُ عَائِشَةَ ـ قَالَ ثُمَّ خَرَجْتُ حَتَّى دَخَلْتُ عَلَى أُمِّ سَلَمَةَ لِقَرَابَتِي مِنْهَا فَكَلَّمْتُهَا‏.‏ فَقَالَتْ أُمُّ سَلَمَةَ عَجَبًا لَكَ يَا ابْنَ الْخَطَّابِ دَخَلْتَ فِي كُلِّ شَىْءٍ، حَتَّى تَبْتَغِي أَنْ تَدْخُلَ بَيْنَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَأَزْوَاجِهِ‏.‏ فَأَخَذَتْنِي وَاللَّهِ أَخْذًا كَسَرَتْنِي عَنْ بَعْضِ مَا كُنْتُ أَجِدُ، فَخَرَجْتُ مِنْ عِنْدِهَا، وَكَانَ لِي صَاحِبٌ مِنَ الأَنْصَارِ إِذَا غِبْتُ أَتَانِي بِالْخَبَرِ، وَإِذَا غَابَ كُنْتُ أَنَا آتِيهِ بِالْخَبَرِ، وَنَحْنُ نَتَخَوَّفُ مَلِكًا مِنْ مُلُوكِ غَسَّانَ، ذُكِرَ لَنَا أَنَّهُ يُرِيدُ أَنْ يَسِيرَ إِلَيْنَا، فَقَدِ امْتَلأَتْ صُدُورُنَا مِنْهُ، فَإِذَا صَاحِبِي الأَنْصَارِيُّ يَدُقُّ الْبَابَ فَقَالَ افْتَحِ افْتَحْ‏.‏ فَقُلْتُ جَاءَ الْغَسَّانِيُّ فَقَالَ بَلْ أَشَدُّ مِنْ ذَلِكَ‏.‏ اعْتَزَلَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم أَزْوَاجَهُ‏.‏ فَقُلْتُ رَغَمَ أَنْفُ حَفْصَةَ وَعَائِشَةَ‏.‏ فَأَخَذْتُ ثَوْبِيَ فَأَخْرُجُ حَتَّى جِئْتُ فَإِذَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فِي مَشْرُبَةٍ لَهُ يَرْقَى عَلَيْهَا بِعَجَلَةٍ، وَغُلاَمٌ لِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم أَسْوَدُ عَلَى رَأْسِ الدَّرَجَةِ فَقُلْتُ لَهُ قُلْ هَذَا عُمَرُ بْنُ الْخَطَّابِ‏.‏ فَأَذِنَ لِي ـ قَالَ عُمَرُ ـ فَقَصَصْتُ عَلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم هَذَا الْحَدِيثَ، فَلَمَّا بَلَغْتُ حَدِيثَ أُمِّ سَلَمَةَ تَبَسَّمَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَإِنَّهُ لَعَلَى حَصِيرٍ مَا بَيْنَهُ وَبَيْنَهُ شَىْءٌ، وَتَحْتَ رَأْسِهِ وِسَادَةٌ مِنْ أَدَمٍ حَشْوُهَا لِيفٌ، وَإِنَّ عِنْدَ رِجْلَيْهِ قَرَظًا مَصْبُوبًا، وَعِنْدَ رَأْسِهِ أَهَبٌ مُعَلَّقَةٌ فَرَأَيْتُ أَثَرَ الْحَصِيرِ فِي جَنْبِهِ فَبَكَيْتُ فَقَالَ ‏"‏ مَا يُبْكِيكَ ‏"‏‏.‏ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ إِنَّ كِسْرَى وَقَيْصَرَ فِيمَا هُمَا فِيهِ وَأَنْتَ رَسُولُ اللَّهِ‏.‏ فَقَالَ ‏"‏ أَمَا تَرْضَى أَنْ تَكُونَ لَهُمُ الدُّنْيَا وَلَنَا الآخِرَةُ ‏"‏‏.‏
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்களிடம் (அல்குர்ஆனின் அத்தஹ்ரீம் அத்தியாயத்திலுள்ள) ஒரு வசனத்தைப் பற்றிக் கேட்பதற்காக, ஓராண்டாக நான் காத்திருந்தேன். அவர்கள் மீது எனக்கிருந்த மரியாதையின் காரணமாக (அது பற்றிக்) கேட்க எனக்குத் துணிவு வரவில்லை. இறுதியில் அவர்கள் ஹஜ்ஜுக்காகப் புறப்பட்டபோது நானும் அவர்களுடன் சென்றேன். நாங்கள் திரும்பி வரும் வழியில் ஓரிடத்தில், இயற்கை உபாதை கழிப்பதற்காக 'அராக்' மரங்களை நோக்கி அவர்கள் ஒதுங்கினார்கள். அவர்கள் முடித்து வரும் வரை நான் அவர்களுக்காகக் காத்திருந்தேன். பிறகு அவர்களுடன் நடந்து சென்றபோது, "அமீருல் மூமினீன் அவர்களே! நபி (ஸல்) அவர்களுக்கு எதிராகக் கூட்டுச் சேர்ந்துகொண்ட அந்த இரு மனைவியர் யார்?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "அவர்கள் ஹஃப்ஸாவும் ஆயிஷாவும் ஆவர்" என்று பதிலளித்தார்கள்.

உடனே நான், "அல்லாஹ்வின் மீது ஆணையாக! இது பற்றி உங்களிடம் கேட்க ஓராண்டாக நான் விரும்பிக் கொண்டிருந்தேன். ஆனால், உங்கள் மீதிருந்த மரியாதையின் காரணமாக என்னால் கேட்க இயலவில்லை" என்று கூறினேன். அதற்கு அவர்கள், "அப்படிச் செய்யாதீர்கள்; என்னிடம் ஏதேனும் அறிவு இருப்பதாக நீங்கள் கருதினால், என்னிடம் கேளுங்கள். எனக்குத் தெரிந்திருந்தால் அதை நான் உங்களுக்குச் சொல்வேன்" என்றார்கள்.

பிறகு உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்:
"அல்லாஹ்வின் மீது ஆணையாக! நாங்கள் அறியாமைக் காலத்தில் (ஜாஹிலிய்யாவில்) பெண்களை ஒரு பொருட்டாகவே மதிக்க மாட்டோம். இறுதியில் அல்லாஹ் அவர்கள் விஷயத்தில் இறக்கியருள வேண்டியவற்றை இறக்கியருளி, அவர்களுக்குரிய பங்கை நிர்ணயிக்கும் வரை இந்நிலை இருந்தது.

ஒருமுறை நான் ஒரு காரியத்தைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தபோது என் மனைவி, 'நீங்கள் இப்படி இப்படிச் செய்திருக்கலாமே' என்றாள். அதற்கு நான் அவளிடம், 'உனக்கென்ன வந்தது? நான் நாடும் ஒரு விஷயத்தில், நீ ஏன் தலையிட்டுச் சிரமப்பட்டுக்கொள்கிறாய்?' என்று கேட்டேன். அதற்கு அவள், 'கத்தாபின் மகனே! உங்களை நினைத்தால் வியப்பாக உள்ளது! நீங்கள் மறுபேச்சு பேசுவதை விரும்புவதில்லை. ஆனால், உங்கள் மகள் (ஹஃப்ஸா) அல்லாஹ்வின் தூதரிடமே (ஸல்) எதிர்த்துப் பேசுகிறார். அதனால் நபி (ஸல்) அவர்கள் நாள் முழுவதும் கோபத்தலேயே இருக்கிறார்கள்' என்று கூறினாள்.

உடனே உமர் (ரலி) தன் மேலாடையை எடுத்துக்கொண்டு புறப்பட்டு, (தன் மகள்) ஹஃப்ஸாவிடம் சென்று, 'என் அருமை மகளே! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நாள் முழுவதும் கோபத்தில் இருக்கும் அளவுக்கு நீ அவர்களிடம் எதிர்த்துப் பேசுகிறாயாமே?' என்று கேட்டார்கள். அதற்கு ஹஃப்ஸா, 'அல்லாஹ்வின் மீது ஆணையாக! நாங்கள் அவர்களிடம் எதிர்த்துப் பேசவே செய்கிறோம்' என்று கூறினார். நான் அவரிடம், 'அல்லாஹ்வின் தண்டனையையும், அவனது தூதரின் கோபத்தையும் பற்றி உன்னை நான் எச்சரிக்கிறேன் என்பதை நீ அறிந்துகொள். என் மகளே! தன் அழகாலும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தன்மீது கொண்ட அன்பாலும் ஈர்க்கப்பட்ட அந்தப் பெண்ணைப் பார்த்து (அதாவது ஆயிஷாவைப் பார்த்து) நீ ஏமாந்துவிடாதே' என்று கூறினேன்.

பிறகு நான் அங்கிருந்து புறப்பட்டு, எனக்கு உறவினரான (நபி (ஸல்) அவர்களின் மற்றொரு மனைவி) உம்மு ஸலமா (ரலி) அவர்களிடம் சென்று பேசினேன். அதற்கு உம்மு ஸலமா, 'கத்தாபின் மகனே! உங்களை நினைத்தால் வியப்பாக உள்ளது! எல்லாவற்றிலும் நீங்கள் நுழைந்துவிட்டீர்கள்; இப்போது அல்லாஹ்வின் தூதருக்கும் (ஸல்) அவர்களின் மனைவியருக்கும் இடையே நுழையும் அளவுக்கு வந்துவிட்டீர்களா?' என்று கேட்டார். அல்லாஹ்வின் மீது ஆணையாக! அவர் என்னைப் பேச்சால் அப்படி மடக்கிவிட்டார்; என் கோபத்தில் பெரும்பகுதியை அது உடைத்துவிட்டது. எனவே நான் அவரிடமிருந்து வெளியேறினேன்.

அன்சாரிகளில் எனக்கு ஒரு நண்பர் இருந்தார். நான் (நபி (ஸல்) அவர்களின் அவைக்குச் செல்லாமல்) மறைந்திருக்கும் நேரத்தில் அவர் எனக்குச் செய்திகளைக் கொண்டுவருவார்; அவர் வராத நேரத்தில் நான் அவருக்குச் செய்திகளைக் கொண்டுசெல்வேன். அக்காலத்தில் 'கஸ்ஸான்' மன்னர்களில் ஒருவன் எங்கள் மீது படையெடுத்து வரக்கூடும் என்று நாங்கள் அஞ்சிக் கொண்டிருந்தோம். அவன் எங்களை நோக்கிப் புறப்பட விரும்புவதாக எங்களுக்குத் தகவல் கிடைத்தது. எங்கள் நெஞ்சங்கள் அவனைக் குறித்த அச்சத்தால் நிரம்பியிருந்தன.

திடீரென எனது அன்சாரித் தோழர் (ஒருநாள்) வந்து கதவைத் தட்டி, 'திறங்கள், திறங்கள்' என்றார். நான், 'கஸ்ஸான் மன்னன் வந்துவிட்டானா?' என்று கேட்டேன். அதற்கு அவர், 'இல்லை; அதைவிடப் பெரிய விபரீதம் நடந்துவிட்டது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் மனைவியரைத் துறந்து ஒதுங்கிவிட்டார்கள்' என்றார். நான், 'ஹஃப்ஸாவும் ஆயிஷாவும் மூக்கு உடைப்பட்டனர் (நஷ்டமடைந்தனர்)' என்று கூறிக் கொண்டேன்.

பிறகு நான் என் ஆடையை அணிந்துகொண்டு புறப்பட்டுச் சென்றேன். அங்கே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தனக்குரிய ஓர் மேல்மாடி அறையில் இருந்தார்கள். அங்கே ஏணி ஒன்றின் மூலம் ஏறிச் செல்ல முடியும். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் கறுப்பினப் பணியாளர் ஒருவர் படிக்கட்டின் உச்சியில் அமர்ந்திருந்தார். நான் அவரிடம், 'இதோ உமர் பின் அல்கத்தாப் வந்திருக்கிறார் என்று சொல்' என்றேன். நபி (ஸல்) அவர்கள் எனக்கு அனுமதியளித்தார்கள்.

நான் நடந்தவற்றை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் விவரித்தேன். உம்மு ஸலமா (ரலி) கூறியதை நான் எட்டியபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) புன்னகைத்தார்கள். அவர்கள் ஒரு பாயின் மீது படுத்திருந்தார்கள். அவர்களுக்கும் பாய்க்கும் இடையே (விரிப்பு) ஏதுமில்லை. அவர்களின் தலைக்குக் கீழே ஈச்ச நாறுகள் நிரப்பப்பட்ட தோல் தலையணை ஒன்று இருந்தது. அவர்களின் காலடியில் 'கரஸ்' (தோலைப் பதனிட உதவும்) இலைகள் குவிக்கப்பட்டிருந்தன. தலைக்கு மேலே பதனிடப்படாத தோல்கள் தொங்கிக் கொண்டிருந்தன. அவர்களின் விலாப்புறத்தில் பாயின் தடம் பதிந்திருந்ததைக் கண்டு நான் அழுதேன்.

'ஏன் அழுகிறீர்?' என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கு நான், 'அல்லாஹ்வின் தூதரே! கிஸ்ராவும் (பாரசீக மன்னன்), கைஸரும் (ரோமப் பேரரசன்) எத்தனையோ சுகபோகங்களில் திளைக்கிறார்கள். தாங்களோ அல்லாஹ்வின் தூதர் (ஆனால் தங்கள் நிலை இப்படி உள்ளதே)!' என்றேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், 'அவர்களுக்கு இம்மை வாழ்வும், நமக்கு மறுமை வாழ்வும் இருப்பதை நீ விரும்பவில்லையா?' என்று கேட்டார்கள்."

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
5191ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ أَخْبَرَنِي عُبَيْدُ اللَّهِ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي ثَوْرٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ لَمْ أَزَلْ حَرِيصًا أَنْ أَسْأَلَ عُمَرَ بْنَ الْخَطَّابِ عَنِ الْمَرْأَتَيْنِ مِنْ أَزْوَاجِ النَّبِيِّ صلى الله عليه وسلم اللَّتَيْنِ قَالَ اللَّهُ تَعَالَى ‏{‏إِنْ تَتُوبَا إِلَى اللَّهِ فَقَدْ صَغَتْ قُلُوبُكُمَا‏}‏ حَتَّى حَجَّ وَحَجَجْتُ مَعَهُ، وَعَدَلَ وَعَدَلْتُ مَعَهُ بِإِدَاوَةٍ، فَتَبَرَّزَ، ثُمَّ جَاءَ فَسَكَبْتُ عَلَى يَدَيْهِ مِنْهَا فَتَوَضَّأَ فَقُلْتُ لَهُ يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ مَنِ الْمَرْأَتَانِ مِنْ أَزْوَاجِ النَّبِيِّ صلى الله عليه وسلم اللَّتَانِ قَالَ اللَّهُ تَعَالَى ‏{‏إِنْ تَتُوبَا إِلَى اللَّهِ فَقَدْ صَغَتْ قُلُوبُكُمَا‏}‏ قَالَ وَاعَجَبًا لَكَ يَا ابْنَ عَبَّاسٍ، هُمَا عَائِشَةُ وَحَفْصَةُ‏.‏ ثُمَّ اسْتَقْبَلَ عُمَرُ الْحَدِيثَ يَسُوقُهُ قَالَ كُنْتُ أَنَا وَجَارٌ لِي مِنَ الأَنْصَارِ فِي بَنِي أُمَيَّةَ بْنِ زَيْدٍ، وَهُمْ مِنْ عَوَالِي الْمَدِينَةِ، وَكُنَّا نَتَنَاوَبُ النُّزُولَ عَلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَيَنْزِلُ يَوْمًا وَأَنْزِلُ يَوْمًا، فَإِذَا نَزَلْتُ جِئْتُهُ بِمَا حَدَثَ مِنْ خَبَرِ ذَلِكَ الْيَوْمِ مِنَ الْوَحْىِ أَوْ غَيْرِهِ، وَإِذَا نَزَلَ فَعَلَ مِثْلَ ذَلِكَ، وَكُنَّا مَعْشَرَ قُرَيْشٍ نَغْلِبُ النِّسَاءَ، فَلَمَّا قَدِمْنَا عَلَى الأَنْصَارِ إِذَا قَوْمٌ تَغْلِبُهُمْ نِسَاؤُهُمْ، فَطَفِقَ نِسَاؤُنَا يَأْخُذْنَ مِنْ أَدَبِ نِسَاءِ الأَنْصَارِ، فَصَخِبْتُ عَلَى امْرَأَتِي فَرَاجَعَتْنِي فَأَنْكَرْتُ أَنْ تُرَاجِعَنِي قَالَتْ وَلِمَ تُنْكِرُ أَنْ أُرَاجِعَكَ فَوَاللَّهِ إِنَّ أَزْوَاجَ النَّبِيِّ صلى الله عليه وسلم لَيُرَاجِعْنَهُ، وَإِنَّ إِحْدَاهُنَّ لَتَهْجُرُهُ الْيَوْمَ حَتَّى اللَّيْلِ‏.‏ فَأَفْزَعَنِي ذَلِكَ وَقُلْتُ لَهَا وَقَدْ خَابَ مَنْ فَعَلَ ذَلِكَ مِنْهُنَّ‏.‏ ثُمَّ جَمَعْتُ عَلَىَّ ثِيَابِي فَنَزَلْتُ فَدَخَلْتُ عَلَى حَفْصَةَ فَقُلْتُ لَهَا أَىْ حَفْصَةُ أَتُغَاضِبُ إِحْدَاكُنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم الْيَوْمَ حَتَّى اللَّيْلِ قَالَتْ نَعَمْ‏.‏ فَقُلْتُ قَدْ خِبْتِ وَخَسِرْتِ، أَفَتَأْمَنِينَ أَنْ يَغْضَبَ اللَّهُ لِغَضَبِ رَسُولِهِ صلى الله عليه وسلم فَتَهْلِكِي لاَ تَسْتَكْثِرِي النَّبِيَّ صلى الله عليه وسلم وَلاَ تُرَاجِعِيهِ فِي شَىْءٍ، وَلاَ تَهْجُرِيهِ، وَسَلِينِي مَا بَدَا لَكِ، وَلاَ يَغُرَّنَّكِ أَنْ كَانَتْ جَارَتُكِ أَوْضَأَ مِنْكِ، وَأَحَبَّ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم ـ يُرِيدُ عَائِشَةَ ـ قَالَ عُمَرُ وَكُنَّا قَدْ تَحَدَّثْنَا أَنَّ غَسَّانَ تُنْعِلُ الْخَيْلَ لِغَزْوِنَا، فَنَزَلَ صَاحِبِي الأَنْصَارِيُّ يَوْمَ نَوْبَتِهِ، فَرَجَعَ إِلَيْنَا عِشَاءً فَضَرَبَ بَابِي ضَرْبًا شَدِيدًا وَقَالَ أَثَمَّ هُوَ فَفَزِعْتُ فَخَرَجْتُ إِلَيْهِ، فَقَالَ قَدْ حَدَثَ الْيَوْمَ أَمْرٌ عَظِيمٌ‏.‏ قُلْتُ مَا هُوَ، أَجَاءَ غَسَّانُ قَالَ لاَ بَلْ أَعْظَمُ مِنْ ذَلِكَ وَأَهْوَلُ، طَلَّقَ النَّبِيُّ صلى الله عليه وسلم نِسَاءَهُ‏.‏ فَقُلْتُ خَابَتْ حَفْصَةُ وَخَسِرَتْ، قَدْ كُنْتُ أَظُنُّ هَذَا يُوشِكُ أَنْ يَكُونَ، فَجَمَعْتُ عَلَىَّ ثِيَابِي فَصَلَّيْتُ صَلاَةَ الْفَجْرِ مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم فَدَخَلَ النَّبِيُّ صلى الله عليه وسلم مَشْرُبَةً لَهُ، فَاعْتَزَلَ فِيهَا، وَدَخَلْتُ عَلَى حَفْصَةَ فَإِذَا هِيَ تَبْكِي فَقُلْتُ مَا يُبْكِيكِ أَلَمْ أَكُنْ حَذَّرْتُكِ هَذَا أَطَلَّقَكُنَّ النَّبِيُّ صلى الله عليه وسلم قَالَتْ لاَ أَدْرِي هَا هُوَ ذَا مُعْتَزِلٌ فِي الْمَشْرُبَةِ‏.‏ فَخَرَجْتُ فَجِئْتُ إِلَى الْمِنْبَرِ فَإِذَا حَوْلَهُ رَهْطٌ يَبْكِي بَعْضُهُمْ، فَجَلَسْتُ مَعَهُمْ قَلِيلاً ثُمَّ غَلَبَنِي مَا أَجِدُ، فَجِئْتُ الْمَشْرُبَةَ الَّتِي فِيهَا النَّبِيُّ صلى الله عليه وسلم فَقُلْتُ لِغُلاَمٍ لَهُ أَسْوَدَ اسْتَأْذِنْ لِعُمَرَ‏.‏ فَدَخَلَ الْغُلاَمُ فَكَلَّمَ النَّبِيَّ صلى الله عليه وسلم ثُمَّ رَجَعَ فَقَالَ كَلَّمْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم وَذَكَرْتُكَ لَهُ، فَصَمَتَ‏.‏ فَانْصَرَفْتُ حَتَّى جَلَسْتُ مَعَ الرَّهْطِ الَّذِينَ عِنْدَ الْمِنْبَرِ، ثُمَّ غَلَبَنِي مَا أَجِدُ فَجِئْتُ فَقُلْتُ لِلْغُلاَمِ اسْتَأْذِنْ لِعُمَرَ‏.‏ فَدَخَلَ ثُمَّ رَجَعَ فَقَالَ قَدْ ذَكَرْتُكَ لَهُ فَصَمَتَ‏.‏ فَرَجَعْتُ فَجَلَسْتُ مَعَ الرَّهْطِ الَّذِينَ عِنْدَ الْمِنْبَرِ، ثُمَّ غَلَبَنِي مَا أَجِدُ فَجِئْتُ الْغُلاَمَ فَقُلْتُ اسْتَأْذِنْ لِعُمَرَ‏.‏ فَدَخَلَ ثُمَّ رَجَعَ إِلَىَّ فَقَالَ قَدْ ذَكَرْتُكَ لَهُ فَصَمَتَ‏.‏ فَلَمَّا وَلَّيْتُ مُنْصَرِفًا ـ قَالَ ـ إِذَا الْغُلاَمُ يَدْعُونِي فَقَالَ قَدْ أَذِنَ لَكَ النَّبِيُّ صلى الله عليه وسلم فَدَخَلْتُ عَلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَإِذَا هُوَ مُضْطَجِعٌ عَلَى رِمَالِ حَصِيرٍ، لَيْسَ بَيْنَهُ وَبَيْنَهُ فِرَاشٌ، قَدْ أَثَّرَ الرِّمَالُ بِجَنْبِهِ مُتَّكِئًا عَلَى وِسَادَةٍ مِنْ أَدَمٍ حَشْوُهَا لِيفٌ، فَسَلَّمْتُ عَلَيْهِ ثُمَّ قُلْتُ وَأَنَا قَائِمٌ يَا رَسُولَ اللَّهِ أَطَلَّقْتَ نِسَاءَكَ‏.‏ فَرَفَعَ إِلَىَّ بَصَرَهُ فَقَالَ ‏"‏ لاَ ‏"‏‏.‏ فَقُلْتُ اللَّهُ أَكْبَرُ‏.‏ ثُمَّ قُلْتُ وَأَنَا قَائِمٌ أَسْتَأْنِسُ يَا رَسُولَ اللَّهِ لَوْ رَأَيْتَنِي، وَكُنَّا مَعْشَرَ قُرَيْشٍ نَغْلِبُ النِّسَاءَ فَلَمَّا قَدِمْنَا الْمَدِينَةَ إِذَا قَوْمٌ تَغْلِبُهُمْ نِسَاؤُهُمْ، فَتَبَسَّمَ النَّبِيُّ صلى الله عليه وسلم ثُمَّ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ لَوْ رَأَيْتَنِي وَدَخَلْتُ عَلَى حَفْصَةَ فَقُلْتُ لَهَا لاَ يَغُرَّنَّكِ أَنْ كَانَتْ جَارَتُكِ أَوْضَأَ مِنْكِ وَأَحَبَّ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم يُرِيدُ عَائِشَةَ فَتَبَسَّمَ النَّبِيُّ صلى الله عليه وسلم تَبَسُّمَةً أُخْرَى، فَجَلَسْتُ حِينَ رَأَيْتُهُ تَبَسَّمَ، فَرَفَعْتُ بَصَرِي فِي بَيْتِهِ، فَوَاللَّهِ مَا رَأَيْتُ فِي بَيْتِهِ شَيْئًا يَرُدُّ الْبَصَرَ غَيْرَ أَهَبَةٍ ثَلاَثَةٍ، فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ ادْعُ اللَّهَ فَلْيُوَسِّعْ عَلَى أُمَّتِكَ، فَإِنَّ فَارِسًا وَالرُّومَ قَدْ وُسِّعَ عَلَيْهِمْ، وَأُعْطُوا الدُّنْيَا وَهُمْ لاَ يَعْبُدُونَ اللَّهَ‏.‏ فَجَلَسَ النَّبِيُّ صلى الله عليه وسلم وَكَانَ مُتَّكِئًا‏.‏ فَقَالَ ‏"‏ أَوَفِي هَذَا أَنْتَ يَا ابْنَ الْخَطَّابِ، إِنَّ أُولَئِكَ قَوْمٌ عُجِّلُوا طَيِّبَاتِهِمْ فِي الْحَيَاةِ الدُّنْيَا ‏"‏‏.‏ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ اسْتَغْفِرْ لِي‏.‏ فَاعْتَزَلَ النَّبِيُّ صلى الله عليه وسلم نِسَاءَهُ مِنْ أَجْلِ ذَلِكَ الْحَدِيثِ حِينَ أَفْشَتْهُ حَفْصَةُ إِلَى عَائِشَةَ تِسْعًا وَعِشْرِينَ لَيْلَةً وَكَانَ قَالَ ‏"‏ مَا أَنَا بِدَاخِلٍ عَلَيْهِنَّ شَهْرًا ‏"‏‏.‏ مِنْ شِدَّةِ مَوْجِدَتِهِ عَلَيْهِنَّ حِينَ عَاتَبَهُ اللَّهُ، فَلَمَّا مَضَتْ تِسْعٌ وَعِشْرُونَ لَيْلَةً دَخَلَ عَلَى عَائِشَةَ فَبَدَأَ بِهَا فَقَالَتْ لَهُ عَائِشَةُ يَا رَسُولَ اللَّهِ إِنَّكَ كُنْتَ قَدْ أَقْسَمْتَ أَنْ لاَ تَدْخُلَ عَلَيْنَا شَهْرًا، وَإِنَّمَا أَصْبَحْتَ مِنْ تِسْعٍ وَعِشْرِينَ لَيْلَةً أَعُدُّهَا عَدًّا‏.‏ فَقَالَ ‏"‏ الشَّهْرُ تِسْعٌ وَعِشْرُونَ ‏"‏‏.‏ فَكَانَ ذَلِكَ الشَّهْرُ تِسْعًا وَعِشْرِينَ لَيْلَةً‏.‏ قَالَتْ عَائِشَةُ ثُمَّ أَنْزَلَ اللَّهُ تَعَالَى آيَةَ التَّخَيُّرِ فَبَدَأَ بِي أَوَّلَ امْرَأَةٍ مِنْ نِسَائِهِ فَاخْتَرْتُهُ، ثُمَّ خَيَّرَ نِسَاءَهُ كُلَّهُنَّ فَقُلْنَ مِثْلَ مَا قَالَتْ عَائِشَةُ‏.‏
இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:

உமர் பின் அல்கத்தாப் (ரழி) அவர்களிடம், நபி (ஸல்) அவர்களின் மனைவியரில் இருவர் குறித்து அல்லாஹ், ‘{இன் ததூபா இ(ல்)லல்லாஹி ஃபகத் ஸகத் குலூபுகுமா}’ (நீங்கள் இருவரும் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரினால் (நன்று); ஏனெனில், உங்கள் இருவரின் உள்ளங்களும் (அவருக்கு மாறுசெய்வதில்) சாய்ந்துவிட்டன) என்று கூறிய அந்தப் பெண்கள் யார் என்று கேட்பதற்கு நான் நீண்ட நாட்களாக ஆர்வமாக இருந்தேன்.

அவர்கள் ஹஜ்ஜை நிறைவேற்றும் வரை (காத்திருந்தேன்); நானும் அவர்களுடன் ஹஜ் செய்தேன். (வழியில்) அவர்கள் இயற்கைக் கடனை நிறைவேற்றுவதற்காக ஒதுங்கியபோது, நானும் ஒரு பாத்திரத்தில் தண்ணீருடன் ஒதுங்கினேன். அவர்கள் இயற்கைக் கடனை முடித்துவிட்டு வந்தபோது, நான் அவர்களின் கைகளில் தண்ணீர் ஊற்றினேன்; அவர்கள் உளூச் செய்தார்கள்.

அப்போது நான், "முஃமின்களின் தளபதியே! நபி (ஸல்) அவர்களின் மனைவியரில், ‘{இன் ததூபா இ(ல்)லல்லாஹி ஃபகத் ஸகத் குலூபுகுமா}’ என்று அல்லாஹ் கூறிய அந்த இரண்டு பெண்கள் யார்?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "இப்னு அப்பாஸே! உங்களைக் கண்டு நான் ஆச்சரியப்படுகிறேன்! அவர்கள் ஆயிஷாவும் ஹஃப்ஸாவும் ஆவர்" என்று கூறினார்கள்.

பிறகு உமர் (ரழி) அந்தச் சம்பவத்தை விவரிக்கத் தொடங்கினார்கள்: "நானும், மதீனாவின் மேட்டுப்பகுதியான 'அவாலி'யில் வசித்து வந்த பனூ உமைய்யா பின் ஸைத் கிளையைச் சேர்ந்த என் அன்சாரித் தோழர் ஒருவரும் நபி (ஸல்) அவர்களிடம் மாறி மாறிச் சென்று வருவது வழக்கம். ஒரு நாள் அவர் செல்வார்; ஒரு நாள் நான் செல்வேன். நான் செல்லும்போது வஹீ (இறைச்செய்தி) மற்றும் பிற செய்திகள் குறித்து அன்று நிகழ்ந்தவற்றை அவரிடம் தெரிவிப்பேன். அவர் செல்லும்போது அவரும் அவ்வாறே செய்வார்.

நாங்கள் குறைஷியர், பெண்களை அடக்கி ஆள்பவர்களாக இருந்தோம். ஆனால் நாங்கள் அன்சாரிகளிடம் வந்தபோது, அங்கே பெண்கள் ஆண்களை மிகைத்து நடப்பவர்களாக இருக்கக் கண்டோம். எங்கள் பெண்கள் அந்த அன்சாரிப் பெண்களின் பழக்கவழக்கங்களைக் கற்றுக்கொள்ளலானார்கள்.

நான் என் மனைவியிடம் கோபப்பட்டேன். அவள் எனக்குப் பதிலுக்குப் பதில் பேசினாள். அவள் என்னை எதிர்த்துப் பேசுவதை நான் ஆட்சேபித்தேன். அதற்கு அவள், 'நான் உங்களை எதிர்த்துப் பேசுவதை ஏன் மறுக்கிறீர்கள்? அல்லாஹ்வின் மீது ஆணையாக! நபி (ஸல்) அவர்களின் மனைவியர் அவர்களை எதிர்த்துப் பேசுகின்றனர். அவர்களில் ஒருவர் (கோபித்துக்கொண்டு) காலை முதல் இரவு வரை நபி (ஸல்) அவர்களுடன் பேசாமல் கூட இருக்கின்றார்' என்று கூறினாள்.

அது எனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நான் அவளிடம், 'அவர்களில் யார் அப்படிச் செய்தாரோ அவர் நஷ்டமடைந்துவிட்டார்' என்று கூறினேன். பிறகு ஆடையை அணிந்துகொண்டு கீழே இறங்கி (என் மகள்) ஹஃப்ஸாவிடம் சென்றேன். 'ஹஃப்ஸாவே! உங்களில் ஒருவர் நபி (ஸல்) அவர்கள் மீது கோபித்துக்கொண்டு காலை முதல் இரவு வரை பேசாமல் இருப்பதுண்டா?' என்று கேட்டேன். அவர், 'ஆம்' என்றார். 'நீ நஷ்டமடைந்துவிட்டாய்; அழிந்துவிட்டாய்! அல்லாஹ்வின் தூதருடைய கோபத்திற்காக அல்லாஹ் கோபப்படுவதிலிருந்து நீ அச்சமற்று இருக்கிறாயா? (அப்படியாயின்) நீ அழிந்துவிடுவாய்! நபி (ஸல்) அவர்களிடம் அதிகமாக எதையும் கேட்காதே; அவர்களை எதிர்த்துப் பேசாதே; அவர்களுடன் பேசுவதை நிறுத்தாதே. உனக்குத் தேவையானதை என்னிடம் கேள். உன்னுடைய தோழி (சக்களத்தி - அதாவது ஆயிஷா) உன்னை விட அழகானவராகவும், நபி (ஸல்) அவர்களுக்கு விருப்பமானவராகவும் இருப்பது உன்னை ஏமாற்றிவிட வேண்டாம்' என்று கூறினேன்."

உமர் (ரழி) அவர்கள் (தொடர்ந்து) கூறினார்கள்: "ஃகஸ்ஸான் (எனும் மன்னன்) எங்கள் மீது படையெடுக்கத் தன் குதிரைகளைத் தயார்படுத்துவதாக நாங்கள் பேசிக்கொண்டிருந்தோம். இந்நிலையில் (முறைப்படி நபி (ஸல்) அவர்களிடம் சென்றிருந்த) என் அன்சாரித் தோழர், திரும்பி வந்து இரவு நேரத்தில் என் கதவை பலமாகத் தட்டினார். 'அவர் இங்கே உள்ளாரா?' என்று (சத்தமாகக்) கேட்டார். நான் திடுக்கிட்டு அவரிடம் வெளியே வந்தேன். அவர், 'இன்று ஒரு பெரிய விஷயம் நடந்துவிட்டது' என்றார். 'என்ன அது? ஃகஸ்ஸான் வந்துவிட்டானா?' என்று நான் கேட்டேன். அவர், 'இல்லை; அதைவிடப் பெரியதும் பயங்கரமானதுமான ஒன்று நடந்துள்ளது. நபி (ஸல்) அவர்கள் தம் மனைவியரை விவாகரத்துச் செய்துவிட்டார்கள்' என்று கூறினார்.

'ஹஃப்ஸா நஷ்டமடைந்துவிட்டாள்; அழிந்துவிட்டாள். இப்படி ஒன்று நடக்கும் என நான் முன்பே நினைத்தேன்' என்று நான் (எனக்குள்) கூறிக்கொண்டேன். பிறகு ஆடையை அணிந்துகொண்டு (பள்ளிக்குச் சென்று) நபி (ஸல்) அவர்களுடன் ஃபஜ்ருத் தொழுதேன். நபி (ஸல்) அவர்கள் (இல்லத்திற்கு மேலிருந்த) தமது தனி அறைக்குச் (மஷ்ருபா) சென்று ஒதுங்கிக்கொண்டார்கள். நான் ஹஃப்ஸாவிடம் சென்றேன்; அவர் அழுதுகொண்டிருந்தார். 'ஏன் அழுகிறாய்? நான் முன்பே உனக்கு எச்சரிக்கவில்லையா? நபி (ஸல்) அவர்கள் உங்களை விவாகரத்துச் செய்துவிட்டார்களா?' என்று கேட்டேன். அதற்கு அவர், 'எனக்குத் தெரியாது. இதோ அவர்கள் அந்தத் தனி அறையில் ஒதுங்கியிருக்கிறார்கள்' என்றார்.

நான் வெளியே வந்து மிம்பர் (மேடை) அருகே சென்றேன். அங்கே சிலர் அழுதுகொண்டு அமர்ந்திருந்தனர். அவர்களுடன் சிறிது நேரம் அமர்ந்தேன். பிறகு என்னால் துயரத்தைத் தாங்க முடியவில்லை. எனவே நபி (ஸல்) அவர்கள் இருந்த அறைக்குச் சென்று, அவர்களின் கறுப்பு நிறப் பணியாளரிடம், "உமருக்காக அனுமதி கேள்" என்றேன். அவர் உள்ளே சென்று நபி (ஸல்) அவர்களிடம் பேசிவிட்டுத் திரும்பி வந்து, "நான் உங்களுக்காக அனுமதி கேட்டேன்; அவர்கள் மவுனமாக இருந்தார்கள்" என்றார்.

நான் திரும்பி வந்து மிம்பர் அருகே இருந்தவர்களுடன் அமர்ந்தேன். மீண்டும் என்னால் பொறுக்க முடியவில்லை. அந்தப் பணியாளரிடம் வந்து, "உமருக்காக அனுமதி கேள்" என்றேன். அவர் உள்ளே சென்றுவிட்டுத் திரும்பி வந்து, "நான் உங்களுக்காக அனுமதி கேட்டேன்; அவர்கள் மவுனமாக இருந்தார்கள்" என்றார். நான் திரும்பி வந்து மிம்பர் அருகே இருந்தவர்களுடன் அமர்ந்தேன். மீண்டும் என்னால் பொறுக்க முடியவில்லை. அந்தப் பணியாளரிடம் வந்து, "உமருக்காக அனுமதி கேள்" என்றேன். அவர் உள்ளே சென்றுவிட்டுத் திரும்பி வந்து, "நான் உங்களுக்காக அனுமதி கேட்டேன்; அவர்கள் மவுனமாக இருந்தார்கள்" என்றார்.

நான் திரும்பிக்கொண்டிருந்தபோது அந்தப் பணியாளர் என்னை அழைத்து, "நபி (ஸல்) அவர்கள் உங்களுக்கு அனுமதி அளித்துள்ளார்கள்" என்றார். நான் உள்ளே நுழைந்தேன். நபி (ஸல்) அவர்கள் ஈச்சம் பாயின் மீது படுத்திருந்தார்கள். அவர்களுக்கும் பாய்க்கும் இடையே விரிப்பு ஏதுமில்லை. பாயின் தழும்புகள் அவர்களின் விலாவில் பதிந்திருந்தன. ஈச்ச நாரினால் நிரப்பப்பட்ட தோல் தலையணை ஒன்றின் மீது சாய்ந்திருந்தார்கள்.

நான் ஸலாம் கூறிவிட்டு, நின்றவாறே, "அல்லாஹ்வின் தூதரே! உங்கள் மனைவியரை விவாகரத்துச் செய்துவிட்டீர்களா?" என்று கேட்டேன். அவர்கள் தம் பார்வையை என் பக்கம் திருப்பி, "இல்லை" என்றார்கள். நான் "அல்லாஹு அக்பர்!" என்றேன்.

பிறகு நான் நின்றவாறே (அவர்களை மகிழ்விக்க), "அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் குறைஷியர்; பெண்களை அடக்கி ஆள்பவர்களாக இருந்தோம். மதீனாவிற்கு வந்தபோது, அங்கே பெண்கள் ஆண்களை மிகைத்து நடப்பதைக் கண்டோம்..." என்று தொடங்கி (என் மனைவியுடனான சம்பவத்தைச்) சொன்னேன். அதைக் கேட்டு நபி (ஸல்) அவர்கள் புன்னகைத்தார்கள். பிறகு, நான் ஹஃப்ஸாவிடம் சென்று, "உன் தோழி (ஆயிஷா) உன்னை விட அழகானவராகவும், நபி (ஸல்) அவர்களுக்குப் பிரியமானவராகவும் இருப்பது உன்னை ஏமாற்றிவிட வேண்டாம் என்று எச்சரித்தேன்" என்று கூறினேன். நபி (ஸல்) அவர்கள் மீண்டும் புன்னகைத்தார்கள்.

அவர்கள் சிரிப்பதைக் கண்டதும் நான் அமர்ந்தேன். நான் அந்த அறையைச் சுற்றிப் பார்த்தேன். அல்லாஹ்வின் மீது ஆணையாக! பதனிடப்பட்ட மூன்று தோல்களைத் தவிரப் பார்வையை ஈர்க்கக்கூடிய வேறெதையும் நான் அங்கே காணவில்லை. நான், "அல்லாஹ்வின் தூதரே! உங்கள் சமுதாயத்திற்குச் செல்வ வளம் வழங்கும்படி அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள். பாரசீகர்களுக்கும் ரோமானியர்களுக்கும் (இறைவனை வணங்காதிருந்தும்) வளம் வழங்கப்பட்டுள்ளது; அவர்களுக்கு உலகம் கொடுக்கப்பட்டுள்ளது" என்று கூறினேன்.

(அதுவரை) சாய்ந்திருந்த நபி (ஸல்) அவர்கள் (நிமிர்ந்து) அமர்ந்து, "கத்தாபின் மகனே! நீயும் இதே சிந்தனையில்தானா இருக்கிறாய்? அவர்கள், தங்கள் நற்கூலிகள் உலக வாழ்விலேயே அவசரமாகக் கொடுக்கப்பட்டுவிட்ட சமூகத்தினர் ஆவர்" என்று கூறினார்கள். நான், "அல்லாஹ்வின் தூதரே! (என் அறியாமைக்காக) எனக்காகப் பாவமன்னிப்புக் கோருங்கள்" என்றேன்.

ஹஃப்ஸா அந்தச் செய்தியை (ஆயிஷாவிடம்) பரப்பிய காரணத்தால், நபி (ஸல்) அவர்கள் தம் மனைவியரிடம் கோபித்துக்கொண்டு, ஒரு மாதம் அவர்களோடு சேருவதில்லை என்று சத்தியம் செய்திருந்தார்கள். இருபத்தொன்பது நாட்கள் முடிந்ததும் ஆயிஷா (ரழி) அவர்களிடம் சென்றார்கள். ஆயிஷா (ரழி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதரே! ஒரு மாதம் எங்களிடம் வரமாட்டீர்கள் என்று நீங்கள் சத்தியம் செய்திருந்தீர்கள். இன்றோடு இருபத்தொன்பது நாட்கள்தாம் ஆகின்றன; நான் ஒவ்வொரு நாளாக எண்ணிக்கொண்டிருக்கிறேன்" என்றார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "மாதம் என்பது இருபத்தொன்பது நாட்களாகும்" என்றார்கள். அந்த மாதம் இருபத்தொன்பது நாட்களைக் கொண்டதாக இருந்தது.

ஆயிஷா (ரழி) கூறினார்கள்: "பிறகு அல்லாஹ் 'விருப்பத் தேர்வு' (தக்யிர்) குறித்த வசனத்தை அருளினான். நபி (ஸல்) அவர்கள் தம் மனைவியரில் என்னிடம் (கேட்க) ஆரம்பித்தார்கள். நான் அவர்களையே தேர்ந்தெடுத்தேன். பிறகு தம் மற்ற மனைவியருக்கும் விருப்பத் தேர்வை வழங்கினார்கள்; அவர்களும் ஆயிஷா கூறியவாறே கூறினார்கள்."

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
1479 aஸஹீஹ் முஸ்லிம்
حَدَّثَنِي زُهَيْرُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا عُمَرُ بْنُ يُونُسَ الْحَنَفِيُّ، حَدَّثَنَا عِكْرِمَةُ بْنُ عَمَّارٍ، عَنْ سِمَاكٍ أَبِي زُمَيْلٍ، حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ عَبَّاسٍ، حَدَّثَنِي عُمَرُ بْنُ الْخَطَّابِ، قَالَ لَمَّا اعْتَزَلَ نَبِيُّ اللَّهِ صلى الله عليه وسلم نِسَاءَهُ - قَالَ - دَخَلْتُ الْمَسْجِدَ فَإِذَا النَّاسُ يَنْكُتُونَ بِالْحَصَى وَيَقُولُونَ طَلَّقَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم نِسَاءَهُ وَذَلِكَ قَبْلَ أَنْ يُؤْمَرْنَ بِالْحِجَابِ فَقَالَ عُمَرُ فَقُلْتُ لأَعْلَمَنَّ ذَلِكَ الْيَوْمَ قَالَ فَدَخَلْتُ عَلَى عَائِشَةَ فَقُلْتُ يَا بِنْتَ أَبِي بَكْرٍ أَقَدْ بَلَغَ مِنْ شَأْنِكِ أَنْ تُؤْذِي رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَتْ مَا لِي وَمَا لَكَ يَا ابْنَ الْخَطَّابِ عَلَيْكَ بِعَيْبَتِكَ ‏.‏ قَالَ فَدَخَلْتُ عَلَى حَفْصَةَ بِنْتِ عُمَرَ فَقُلْتُ لَهَا يَا حَفْصَةُ أَقَدْ بَلَغَ مِنْ شَأْنِكِ أَنْ تُؤْذِي رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم وَاللَّهِ لَقَدْ عَلِمْتِ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم لاَ يُحِبُّكِ ‏.‏ وَلَوْلاَ أَنَا لَطَلَّقَكِ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏.‏ فَبَكَتْ أَشَدَّ الْبُكَاءِ فَقُلْتُ لَهَا أَيْنَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم قَالَتْ هُوَ فِي خِزَانَتِهِ فِي الْمَشْرُبَةِ ‏.‏ فَدَخَلْتُ فَإِذَا أَنَا بِرَبَاحٍ غُلاَمِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم قَاعِدًا عَلَى أُسْكُفَّةِ الْمَشْرُبَةِ مُدَلٍّ رِجْلَيْهِ عَلَى نَقِيرٍ مِنْ خَشَبٍ وَهُوَ جِذْعٌ يَرْقَى عَلَيْهِ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَيَنْحَدِرُ فَنَادَيْتُ يَا رَبَاحُ اسْتَأْذِنْ لِي عِنْدَكَ عَلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم ‏.‏ فَنَظَرَ رَبَاحٌ إِلَى الْغُرْفَةِ ثُمَّ نَظَرَ إِلَىَّ فَلَمْ يَقُلْ شَيْئًا ثُمَّ قُلْتُ يَا رَبَاحُ اسْتَأْذِنْ لِي عِنْدَكَ عَلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم ‏.‏ فَنَظَرَ رَبَاحٌ إِلَى الْغُرْفَةِ ثُمَّ نَظَرَ إِلَىَّ فَلَمْ يَقُلْ شَيْئًا ثُمَّ رَفَعْتُ صَوْتِي فَقُلْتُ يَا رَبَاحُ اسْتَأْذِنْ لِي عِنْدَكَ عَلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَإِنِّي أَظُنُّ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم ظَنَّ أَنِّي جِئْتُ مِنْ أَجْلِ حَفْصَةَ وَاللَّهِ لَئِنْ أَمَرَنِي رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بِضَرْبِ عُنُقِهَا لأَضْرِبَنَّ عُنُقَهَا ‏.‏ وَرَفَعْتُ صَوْتِي فَأَوْمَأَ إِلَىَّ أَنِ ارْقَهْ فَدَخَلْتُ عَلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَهُوَ مُضْطَجِعٌ عَلَى حَصِيرٍ فَجَلَسْتُ فَأَدْنَى عَلَيْهِ إِزَارَهُ وَلَيْسَ عَلَيْهِ غَيْرُهُ وَإِذَا الْحَصِيرُ قَدْ أَثَّرَ فِي جَنْبِهِ فَنَظَرْتُ بِبَصَرِي فِي خِزَانَةِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَإِذَا أَنَا بِقَبْضَةٍ مِنْ شَعِيرٍ نَحْوِ الصَّاعِ وَمِثْلِهَا قَرَظًا فِي نَاحِيَةِ الْغُرْفَةِ وَإِذَا أَفِيقٌ مُعَلَّقٌ - قَالَ - فَابْتَدَرَتْ عَيْنَاىَ قَالَ ‏"‏ مَا يُبْكِيكَ يَا ابْنَ الْخَطَّابِ ‏"‏ ‏.‏ قُلْتُ يَا نَبِيَّ اللَّهِ وَمَا لِي لاَ أَبْكِي وَهَذَا الْحَصِيرُ قَدْ أَثَّرَ فِي جَنْبِكَ وَهَذِهِ خِزَانَتُكَ لاَ أَرَى فِيهَا إِلاَّ مَا أَرَى وَذَاكَ قَيْصَرُ وَكِسْرَى فِي الثِّمَارِ وَالأَنْهَارِ وَأَنْتَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَصَفْوَتُهُ وَهَذِهِ خِزَانَتُكَ ‏.‏ فَقَالَ ‏"‏ يَا ابْنَ الْخَطَّابِ أَلاَ تَرْضَى أَنْ تَكُونَ لَنَا الآخِرَةُ وَلَهُمُ الدُّنْيَا ‏"‏ ‏.‏ قُلْتُ بَلَى - قَالَ - وَدَخَلْتُ عَلَيْهِ حِينَ دَخَلْتُ وَأَنَا أَرَى فِي وَجْهِهِ الْغَضَبَ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ مَا يَشُقُّ عَلَيْكَ مِنْ شَأْنِ النِّسَاءِ فَإِنْ كُنْتَ طَلَّقْتَهُنَّ فَإِنَّ اللَّهَ مَعَكَ وَمَلاَئِكَتَهُ وَجِبْرِيلَ وَمِيكَائِيلَ وَأَنَا وَأَبُو بَكْرٍ وَالْمُؤْمِنُونَ مَعَكَ وَقَلَّمَا تَكَلَّمْتُ وَأَحْمَدُ اللَّهَ بِكَلاَمٍ إِلاَّ رَجَوْتُ أَنْ يَكُونَ اللَّهُ يُصَدِّقُ قَوْلِي الَّذِي أَقُولُ وَنَزَلَتْ هَذِهِ الآيَةُ آيَةُ التَّخْيِيرِ ‏{‏ عَسَى رَبُّهُ إِنْ طَلَّقَكُنَّ أَنْ يُبْدِلَهُ أَزْوَاجًا خَيْرًا مِنْكُنَّ‏}‏ ‏{‏ وَإِنْ تَظَاهَرَا عَلَيْهِ فَإِنَّ اللَّهَ هُوَ مَوْلاَهُ وَجِبْرِيلُ وَصَالِحُ الْمُؤْمِنِينَ وَالْمَلاَئِكَةُ بَعْدَ ذَلِكَ ظَهِيرٌ‏}‏ وَكَانَتْ عَائِشَةُ بِنْتُ أَبِي بَكْرٍ وَحَفْصَةُ تَظَاهَرَانِ عَلَى سَائِرِ نِسَاءِ النَّبِيِّ صلى الله عليه وسلم فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ أَطَلَّقْتَهُنَّ قَالَ ‏"‏ لاَ ‏"‏ ‏.‏ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ إِنِّي دَخَلْتُ الْمَسْجِدَ وَالْمُسْلِمُونَ يَنْكُتُونَ بِالْحَصَى يَقُولُونَ طَلَّقَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم نِسَاءَهُ أَفَأَنْزِلُ فَأُخْبِرَهُمْ أَنَّكَ لَمْ تُطَلِّقْهُنَّ قَالَ ‏"‏ نَعَمْ إِنْ شِئْتَ ‏"‏ ‏.‏ فَلَمْ أَزَلْ أُحَدِّثُهُ حَتَّى تَحَسَّرَ الْغَضَبُ عَنْ وَجْهِهِ وَحَتَّى كَشَرَ فَضَحِكَ وَكَانَ مِنْ أَحْسَنِ النَّاسِ ثَغْرًا ثُمَّ نَزَلَ نَبِيُّ اللَّهِ صلى الله عليه وسلم وَنَزَلْتُ فَنَزَلْتُ أَتَشَبَّثُ بِالْجِذْعِ وَنَزَلَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم كَأَنَّمَا يَمْشِي عَلَى الأَرْضِ مَا يَمَسُّهُ بِيَدِهِ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ إِنَّمَا كُنْتَ فِي الْغُرْفَةِ تِسْعَةً وَعِشْرِينَ ‏.‏ قَالَ ‏"‏ إِنَّ الشَّهْرَ يَكُونُ تِسْعًا وَعِشْرِينَ ‏"‏ ‏.‏ فقُمْتُ عَلَى بَابِ الْمَسْجِدِ فَنَادَيْتُ بِأَعْلَى صَوْتِي لَمْ يُطَلِّقْ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم نِسَاءَهُ ‏.‏ وَنَزَلَتْ هَذِهِ الآيَةُ ‏{‏ وَإِذَا جَاءَهُمْ أَمْرٌ مِنَ الأَمْنِ أَوِ الْخَوْفِ أَذَاعُوا بِهِ وَلَوْ رَدُّوهُ إِلَى الرَّسُولِ وَإِلَى أُولِي الأَمْرِ مِنْهُمْ لَعَلِمَهُ الَّذِينَ يَسْتَنْبِطُونَهُ مِنْهُمْ‏}‏ فَكُنْتُ أَنَا اسْتَنْبَطْتُ ذَلِكَ الأَمْرَ وَأَنْزَلَ اللَّهُ عَزَّ وَجَلَّ آيَةَ التَّخْيِيرِ ‏.‏
உமர் பின் அல்-கத்தாப் (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது மனைவியரை விட்டும் விலகி இருந்தபோது, நான் பள்ளிவாசலுக்குள் நுழைந்தேன். அப்போது மக்கள் (கவலையுடன்) சிறுகற்களால் தரையைத் தட்டிக் கொண்டிருந்ததைக் கண்டேன். மேலும், 'அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது மனைவியரை விவாகரத்து செய்துவிட்டார்கள்' என்று பேசிக்கொண்டிருந்தார்கள். இது, அவர்கள் ஹிஜாப் அணியும்படி கட்டளையிடப்படுவதற்கு முன்பு நடந்ததாகும்.

உமர் (ரழி) அவர்கள் கூறினார்கள்: இன்று நான் இது குறித்த (உண்மையான நிலையை) அறிந்தாக வேண்டும் என்று (எனக்குள்) சொல்லிக்கொண்டேன். எனவே, நான் ஆயிஷா (ரழி) அவர்களிடம் சென்று, 'அபூபக்ரின் மகளே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குத் தொல்லை கொடுக்கும் அளவிற்கு நீங்கள் சென்றுவிட்டீர்களா?' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், 'கத்தாபின் மகனே, எனக்கும் உமக்கும் என்ன சம்பந்தம்? உமது பொறுப்பில் உள்ளவரை (உமது மகள் ஹஃப்ஸாவை)க் கவனியும்' என்று கூறினார்கள்.

அவர் (உமர்) கூறினார்கள்: நான் ஹஃப்ஸா பின்த் உமர் அவர்களிடம் சென்று, 'ஹஃப்ஸா, நீங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குத் தொல்லை கொடுக்கும் அளவிற்குச் சென்றுவிட்டது எனக்கு எட்டியது. அல்லாஹ்வின் மீது ஆணையாக, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உங்களை நேசிக்கவில்லை என்பது உமக்குத் தெரியும். நான் இல்லாவிடில் அவர்கள் உங்களை விவாகரத்து செய்திருப்பார்கள்' என்று கூறினேன். (இதைக் கேட்டதும்) அவர் கடுமையாக அழுதார். நான் அவரிடம், 'அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்கே?' என்று கேட்டேன். அதற்கு அவர், 'அவர்கள் மாடி அறையில் உள்ள தமது சேமிப்புக் கிடங்கில் இருக்கிறார்கள்' என்றார்.

நான் உள்ளே சென்றபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் பணியாளர் ரபாஹ், அந்த மாடி அறையின் வாசற்படியில் அமர்ந்திருப்பதைக் கண்டேன். அவர் தனது கால்களை, குடையப்பட்ட மரக்கட்டை ஒன்றின் மீது தொங்கவிட்டிருந்தார். அது ஒரு பேரீச்சை மரத்தின் தண்டு; அதன் வழியாகத்தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அறைக்கு) ஏறி இறங்குவார்கள். நான், 'ஓ ரபாஹ், எனக்காக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அனுமதி கேளுங்கள்' என்று சத்தமிட்டேன். ரபாஹ் அறையை ஒருமுறை பார்த்துவிட்டு, பிறகு என்னைப் பார்த்தார், ஆனால் ஒன்றும் கூறவில்லை. நான் மீண்டும், 'ஓ ரபாஹ், எனக்காக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அனுமதி கேளுங்கள்' என்று கூறினேன். ரபாஹ் அறையை நோக்கிப் பார்த்துவிட்டு, பிறகு என்னைப் பார்த்தார், ஆனால் ஒன்றும் கூறவில்லை.

பிறகு நான் என் குரலை உயர்த்தி, 'ஓ ரபாஹ், எனக்காக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அனுமதி கேளுங்கள். நான் ஹஃப்ஸாவுக்காக வந்திருக்கிறேன் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் என நான் கருதுகிறேன். அல்லாஹ்வின் மீது ஆணையாக, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவளுடைய கழுத்தை வெட்டும்படி எனக்குக் கட்டளையிட்டால், நான் நிச்சயமாக அவளுடைய கழுத்தை வெட்டிவிடுவேன்' என்றேன். நான் குரலை உயர்த்தியதும், அவர் (ரபாஹ்) மேலே ஏறி வரும்படி எனக்குச் சைகை காட்டினார்.

நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்றேன், அவர்கள் ஒரு பாயில் சாய்ந்து படுத்திருந்தார்கள். நான் அமர்ந்தேன், அவர்கள் தமது வேட்டியை தம்மீது இழுத்துவிட்டுக் கொண்டார்கள். அவர்கள் மீது வேறு (ஆடை) எதுவும் இருக்கவில்லை. மேலும் அந்தப் பாய் அவர்களின் விலாப்புறங்களில் தடங்களை ஏற்படுத்தியிருந்தது. நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் சேமிப்பறையை என் கண்களால் பார்த்தேன். அங்கே ஒரு 'ஸா' அளவுள்ள ஒரு கைப்பிடி பார்லியும், அதே அளவுள்ள கருவேல இலைகளும் (தோல் பதனிடப் பயன்படுபவை) அறையின் ஒரு மூலையில் வைக்கப்பட்டிருந்தன. மேலும், பதனிடப்படாத ஒரு தோல் பை தொங்கிக் கொண்டிருந்தது. (புனித நபி (ஸல்) அவர்களின் இந்த நிலையைக் கண்டு) என் கண்கள் முந்திக்கொண்டன (எனக்குக் கண்ணீர் வந்துவிட்டது).

அப்போது அவர்கள், 'கத்தாபின் மகனே, உங்களை அழவைத்தது எது?' என்று கேட்டார்கள். நான் கூறினேன்: "அல்லாஹ்வின் நபியே, நான் ஏன் அழக்கூடாது? இந்தப் பாய் உங்கள் விலாப்புறங்களில் தழும்புகளை ஏற்படுத்தியுள்ளது, மேலும் உங்கள் சேமிப்பறையில் நான் பார்ப்பவற்றைத் தவிர வேறு எதையும் காணவில்லையே! சீசரும் (ரோமப் பேரரசர்), கிஸ்ராவும் (பாரசீகப் பேரரசர்) பழங்களிலும் ஆறுகளிலும் (அருட்கொடைகளிலும்) திளைத்திருக்கிறார்கள். நீங்களோ அல்லாஹ்வின் தூதர் (ஸல்), அவனால் தேர்ந்தெடுக்கப்பட்டவர், இதுதான் உங்கள் சேமிப்பறையின் நிலையா!"

அதற்கு அவர்கள், "கத்தாபின் மகனே, நமக்கு மறுமையும், அவர்களுக்கு இவ்வுலகமும் இருப்பதை நீங்கள் பொருந்திக்கொள்ளவில்லையா (திருப்தியடையவில்லையா)?" என்று கேட்டார்கள். நான், 'ஆம் (பொருந்திக்கொண்டேன்)' என்றேன்.

நான் உள்ளே நுழைந்தபோது, அவர்களின் முகத்தில் கோபத்தின் அறிகுறிகளைக் கண்டேன். அதனால் நான், 'அல்லாஹ்வின் தூதரே, உங்கள் மனைவியரிடமிருந்து உங்களுக்கு என்ன சிரமம்? நீங்கள் அவர்களை விவாகரத்து செய்திருந்தாலும், நிச்சயமாக அல்லாஹ் உங்களோடு இருக்கிறான், அவனுடைய வானவர்கள், ஜிப்ரீல், மீக்காயீல், நான், அபூபக்ர் மற்றும் நம்பிக்கையாளர்கள் அனைவரும் உங்களோடு இருக்கிறோம்' என்றேன். நான் எப்போதாவதுதான் பேசுவேன், ஆனால் (அன்று நான் பேசிய) எனது வார்த்தைகளை அல்லாஹ் உறுதிப்படுத்துவான் என்று நம்பி அல்லாஹ்வைப் புகழ்ந்தேன். அவ்வாறே, தேர்ந்தெடுக்கும் உரிமை குறித்த வசனம் (ஆயத் அத்-தக்யீர்) அருளப்பட்டது.

*{அஸா ரப்புஹூ இன் தல்லக்ககுன்ன அன் யுப்திலஹூ அஸ்வாஜன் கைரன் மின்குன்ன...}*

"அவர் உங்களை விவாகரத்து செய்துவிட்டால், அவருடைய இறைவன் உங்களை விடச் சிறந்த மனைவியரை அவருக்குப் பதிலாகக் கொடுக்கக்கூடும்..." (அல்குர்ஆன் 66:5).

*{வ இன் தழாஹரா அலைஹி ஃபஇன்னல்லாஹ ஹுவ மவ்லாஹு வ ஜிப்ரீலு வ ஸாலிஹுல் முஃமினீன வல் மலாயிகத்து பஃத தாலிக ழஹீர்}*

"நீங்கள் இருவரும் அவருக்கு எதிராக ஒருவருக்கொருவர் உதவிக்கொண்டால், நிச்சயமாக அல்லாஹ்வே அவருடைய பாதுகாவலன்; மேலும் ஜிப்ரீலும், நேர்மையான நம்பிக்கையாளர்களும், அதன் பின்னர் வானவர்களும் (அவருக்கு) உதவியாளர்கள் ஆவார்கள்" (அல்குர்ஆன் 66:4).

ஆயிஷா பின்த் அபீ பக்ர் (ரழி) அவர்களும், ஹஃப்ஸா (ரழி) அவர்களும்தான் நபி (ஸல்) அவர்களின் மற்ற மனைவியருக்கு எதிராக ஒருவருக்கொருவர் ஒத்துழைத்து வந்தார்கள்.

நான் கேட்டேன்: "அல்லாஹ்வின் தூதரே, நீங்கள் அவர்களை விவாகரத்து செய்துவிட்டீர்களா?" அதற்கு அவர்கள், 'இல்லை' என்றார்கள். நான் கூறினேன்: "அல்லாஹ்வின் தூதரே, நான் பள்ளிவாசலுக்குள் நுழைந்தேன், அங்கே முஸ்லிம்கள் சிறுகற்களால் தரையைத் தட்டியவாறு, 'அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது மனைவியரை விவாகரத்து செய்துவிட்டார்கள்' என்று பேசிக்கொண்டிருந்தார்கள். நான் கீழே இறங்கிச் சென்று, நீங்கள் அவர்களை விவாகரத்து செய்யவில்லை என்று அவர்களுக்குத் தெரிவிக்கட்டுமா?"

அதற்கு அவர்கள், 'ஆம், நீங்கள் விரும்பினால் (செய்யுங்கள்)' என்றார்கள். நான் அவர்களுடன் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தேன், இறுதியில் அவர்களின் முகத்திலிருந்த கோபத்தின் அறிகுறிகள் மறைந்தன. மேலும் அவர்கள் பற்கள் தெரியும்படி சிரித்தார்கள்; மக்களித்திலேயே மிக அழகான பற்கள் அமைப்பு கொண்டவராக அவர்கள் இருந்தார்கள்.

பிறகு, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கீழே இறங்கினார்கள், நானும் இறங்கினேன். நான் (பயத்தில்) பேரீச்சை மரத்தின் தண்டைப் பிடித்துக்கொண்டே இறங்கினேன். ஆனால் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தரையில் நடப்பதைப் போல (எளிதாக) இறங்கினார்கள், (ஆதரவிற்காக) தங்கள் கையால் எதையும் தொடவில்லை. நான் கூறினேன்: "அல்லாஹ்வின் தூதரே, நீங்கள் உங்கள் அறையில் இருபத்தொன்பது நாட்கள் தங்கியிருந்தீர்கள்." அதற்கு அவர்கள், '(சில சமயங்களில்) மாதம் இருபத்தொன்பது நாட்களைக் கொண்டிருக்கும்' என்றார்கள்.

நான் பள்ளிவாசலின் வாசலில் நின்று, என் உயர்ந்த குரலில், 'அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது மனைவியரை விவாகரத்து செய்யவில்லை' என்று சத்தமாக அறிவித்தேன். மேலும் இந்த வசனம் அருளப்பட்டது:

*{வ இதா ஜாஅஹும் அம்ருன் மினல் அம்னி அவில் கவ்ஃபி அதாஊ பிஹி வலவ் ரத்தூஹு இலர் ரசூலி வ இலா ஊலில் அம்ரி மின்கும் லஅலிமஹுல்லதீன யஸ்தன்பிதூனஹூ மின்கும்...}*

"அமைதி அல்லது அச்சம் சம்பந்தப்பட்ட ஏதேனும் ஒரு செய்தி அவர்களுக்கு எட்டினால், அவர்கள் அதை பரப்பி விடுகிறார்கள்; ஆனால், அதை அவர்கள் தூதரிடமோ அல்லது அவர்களில் அதிகாரம் உடையவர்களிடமோ கொண்டு சென்றிருந்தால், அவர்களிலிருந்து செய்திகளைத் துருவி அறியக்கூடியவர்கள் (அதன் உண்மை நிலையை) அறிந்திருப்பார்கள்..." (அல்குர்ஆன் 4:83).

நான்தான் அந்த விஷயத்தை (துருவி) அறிந்தவன் ஆவேன். மேலும், அல்லாஹ் (கண்ணியம் மிக்கவன்) தேர்ந்தெடுக்கும் உரிமை குறித்த வசனத்தை (ஆயத் அத்-தக்யீர்) அருளினான்.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
1479 e, 1475 bஸஹீஹ் முஸ்லிம்
وَحَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ الْحَنْظَلِيُّ، وَمُحَمَّدُ بْنُ أَبِي عُمَرَ، - وَتَقَارَبَا فِي لَفْظِ الْحَدِيثِ - قَالَ ابْنُ أَبِي عُمَرَ حَدَّثَنَا وَقَالَ، إِسْحَاقُ أَخْبَرَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي ثَوْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ لَمْ أَزَلْ حَرِيصًا أَنْأَسْأَلَ عُمَرَ عَنِ الْمَرْأَتَيْنِ مِنْ أَزْوَاجِ النَّبِيِّ صلى الله عليه وسلم اللَّتَيْنِ قَالَ اللَّهُ تَعَالَى ‏{‏إِنْ تَتُوبَا إِلَى اللَّهِ فَقَدْ صَغَتْ قُلُوبُكُمَا‏}‏ حَتَّى حَجَّ عُمَرُ وَحَجَجْتُ مَعَهُ فَلَمَّا كُنَّا بِبَعْضِ الطَّرِيقِ عَدَلَ عُمَرُ وَعَدَلْتُ مَعَهُ بِالإِدَاوَةِ فَتَبَرَّزَ ثُمَّ أَتَانِي فَسَكَبْتُ عَلَى يَدَيْهِ فَتَوَضَّأَ فَقُلْتُ يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ مَنِ الْمَرْأَتَانِ مِنْ أَزْوَاجِ النَّبِيِّ صلى الله عليه وسلم اللَّتَانِ قَالَ اللَّهُ عَزَّ وَجَلَّ لَهُمَا ‏{‏ إِنْ تَتُوبَا إِلَى اللَّهِ فَقَدْ صَغَتْ قُلُوبُكُمَا‏}‏ قَالَ عُمَرُ وَاعَجَبًا لَكَ يَا ابْنَ عَبَّاسٍ - قَالَ الزُّهْرِيُّ كَرِهَ وَاللَّهِ مَا سَأَلَهُ عَنْهُ وَلَمْ يَكْتُمْهُ - قَالَ هِيَ حَفْصَةُ وَعَائِشَةُ ‏.‏ ثُمَّ أَخَذَ يَسُوقُ الْحَدِيثَ قَالَ كُنَّا مَعْشَرَ قُرَيْشٍ قَوْمًا نَغْلِبُ النِّسَاءَ فَلَمَّا قَدِمْنَا الْمَدِينَةَ وَجَدْنَا قَوْمًا تَغْلِبُهُمْ نِسَاؤُهُمْ فَطَفِقَ نِسَاؤُنَا يَتَعَلَّمْنَ مِنْ نِسَائِهِمْ - قَالَ - وَكَانَ مَنْزِلِي فِي بَنِي أُمَيَّةَ بْنِ زَيْدٍ بِالْعَوَالِي فَتَغَضَّبْتُ يَوْمًا عَلَى امْرَأَتِي فَإِذَا هِيَ تُرَاجِعُنِي فَأَنْكَرْتُ أَنْ تُرَاجِعَنِي ‏.‏ فَقَالَتْ مَا تُنْكِرُ أَنْ أُرَاجِعَكَ فَوَاللَّهِ إِنَّ أَزْوَاجَ النَّبِيِّ صلى الله عليه وسلم لَيُرَاجِعْنَهُ وَتَهْجُرُهُ إِحْدَاهُنَّ الْيَوْمَ إِلَى اللَّيْلِ ‏.‏ فَانْطَلَقْتُ فَدَخَلْتُ عَلَى حَفْصَةَ فَقُلْتُ أَتُرَاجِعِينَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَتْ نَعَمْ ‏.‏ فَقُلْتُ أَتَهْجُرُهُ إِحْدَاكُنَّ الْيَوْمَ إِلَى اللَّيْلِ قَالَتْ نَعَمْ ‏.‏ قُلْتُ قَدْ خَابَ مَنْ فَعَلَ ذَلِكَ مِنْكُنَّ وَخَسِرَ أَفَتَأْمَنُ إِحْدَاكُنَّ أَنْ يَغْضَبَ اللَّهُ عَلَيْهَا لِغَضَبِ رَسُولِهِ صلى الله عليه وسلم فَإِذَا هِيَ قَدْ هَلَكَتْ لاَ تُرَاجِعِي رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم وَلاَ تَسْأَلِيهِ شَيْئًا وَسَلِينِي مَا بَدَا لَكِ وَلاَ يَغُرَّنَّكِ أَنْ كَانَتْ جَارَتُكِ هِيَ أَوْسَمَ وَأَحَبَّ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم مِنْكِ - يُرِيدُ عَائِشَةَ - قَالَ وَكَانَ لِي جَارٌ مِنَ الأَنْصَارِ فَكُنَّا نَتَنَاوَبُ النُّزُولَ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَيَنْزِلُ يَوْمًا وَأَنْزِلُ يَوْمًا فَيَأْتِينِي بِخَبَرِ الْوَحْىِ وَغَيْرِهِ وَآتِيهِ بِمِثْلِ ذَلِكَ وَكُنَّا نَتَحَدَّثُ أَنَّ غَسَّانَ تُنْعِلُ الْخَيْلَ لِتَغْزُوَنَا فَنَزَلَ صَاحِبِي ثُمَّ أَتَانِي عِشَاءً فَضَرَبَ بَابِي ثُمَّ نَادَانِي فَخَرَجْتُ إِلَيْهِ فَقَالَ حَدَثَ أَمْرٌ عَظِيمٌ ‏.‏ قُلْتُ مَاذَا أَجَاءَتْ غَسَّانُ قَالَ لاَ بَلْ أَعْظَمُ مِنْ ذَلِكَ وَأَطْوَلُ طَلَّقَ النَّبِيُّ صلى الله عليه وسلم نِسَاءَهُ ‏.‏ فَقُلْتُ قَدْ خَابَتْ حَفْصَةُ وَخَسِرَتْ قَدْ كُنْتُ أَظُنُّ هَذَا كَائِنًا حَتَّى إِذَا صَلَّيْتُ الصُّبْحَ شَدَدْتُ عَلَىَّ ثِيَابِي ثُمَّ نَزَلْتُ فَدَخَلْتُ عَلَى حَفْصَةَ وَهْىَ تَبْكِي فَقُلْتُ أَطَلَّقَكُنَّ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَتْ لاَ أَدْرِي هَا هُوَ ذَا مُعْتَزِلٌ فِي هَذِهِ الْمَشْرُبَةِ ‏.‏ فَأَتَيْتُ غُلاَمًا لَهُ أَسْوَدَ فَقُلْتُ اسْتَأْذِنْ لِعُمَرَ ‏.‏ فَدَخَلَ ثُمَّ خَرَجَ إِلَىَّ فَقَالَ قَدْ ذَكَرْتُكَ لَهُ فَصَمَتَ فَانْطَلَقْتُ حَتَّى انْتَهَيْتُ إِلَى الْمِنْبَرِ فَجَلَسْتُ فَإِذَا عِنْدَهُ رَهْطٌ جُلُوسٌ يَبْكِي بَعْضُهُمْ فَجَلَسْتُ قَلِيلاً ثُمَّ غَلَبَنِي مَا أَجِدُ ثُمَّ أَتَيْتُ الْغُلاَمَ فَقُلْتُ اسْتَأْذِنْ لِعُمَرَ ‏.‏ فَدَخَلَ ثُمَّ خَرَجَ إِلَىَّ ‏.‏ فَقَالَ قَدْ ذَكَرْتُكَ لَهُ فَصَمَتَ ‏.‏ فَوَلَّيْتُ مُدْبِرًا فَإِذَا الْغُلاَمُ يَدْعُونِي فَقَالَ ادْخُلْ فَقَدْ أَذِنَ لَكَ فَدَخَلْتُ فَسَلَّمْتُ عَلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَإِذَا هُوَ مُتَّكِئٌ عَلَى رَمْلِ حَصِيرٍ قَدْ أَثَّرَ فِي جَنْبِهِ فَقُلْتُ أَطَلَّقْتَ يَا رَسُولَ اللَّهِ نِسَاءَكَ فَرَفَعَ رَأْسَهُ إِلَىَّ وَقَالَ ‏"‏ لاَ ‏"‏ ‏.‏ فَقُلْتُ اللَّهُ أَكْبَرُ لَوْ رَأَيْتَنَا يَا رَسُولَ اللَّهِ وَكُنَّا مَعْشَرَ قُرَيْشٍ قَوْمًا نَغْلِبُ النِّسَاءَ فَلَمَّا قَدِمْنَا الْمَدِينَةَ وَجَدْنَا قَوْمًا تَغْلِبُهُمْ نِسَاؤُهُمْ فَطَفِقَ نِسَاؤُنَا يَتَعَلَّمْنَ مِنْ نِسَائِهِمْ فَتَغَضَّبْتُ عَلَى امْرَأَتِي يَوْمًا فَإِذَا هِيَ تُرَاجِعُنِي فَأَنْكَرْتُ أَنْ تُرَاجِعَنِي ‏.‏ فَقَالَتْ مَا تُنْكِرُ أَنْ أُرَاجِعَكَ فَوَاللَّهِ إِنَّ أَزْوَاجَ النَّبِيِّ صلى الله عليه وسلم لَيُرَاجِعْنَهُ وَتَهْجُرُهُ إِحْدَاهُنَّ الْيَوْمَ إِلَى اللَّيْلِ ‏.‏ فَقُلْتُ قَدْ خَابَ مَنْ فَعَلَ ذَلِكَ مِنْهُنَّ وَخَسِرَ أَفَتَأْمَنُ إِحْدَاهُنَّ أَنْ يَغْضَبَ اللَّهُ عَلَيْهَا لِغَضَبِ رَسُولِهِ صلى الله عليه وسلم فَإِذَا هِيَ قَدْ هَلَكَتْ فَتَبَسَّمَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ قَدْ دَخَلْتُ عَلَى حَفْصَةَ فَقُلْتُ لاَ يَغُرَّنَّكِ أَنْ كَانَتْ جَارَتُكِ هِيَ أَوْسَمُ مِنْكِ وَأَحَبُّ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم مِنْكِ ‏.‏ فَتَبَسَّمَ أُخْرَى فَقُلْتُ أَسْتَأْنِسُ يَا رَسُولَ اللَّهِ ‏.‏ قَالَ ‏"‏ نَعَمْ ‏"‏ ‏.‏ فَجَلَسْتُ فَرَفَعْتُ رَأْسِي فِي الْبَيْتِ فَوَاللَّهِ مَا رَأَيْتُ فِيهِ شَيْئًا يَرُدُّ الْبَصَرَ إِلاَّ أُهُبًا ثَلاَثَةً فَقُلْتُ ادْعُ اللَّهَ يَا رَسُولَ اللَّهِ أَنْ يُوَسِّعَ عَلَى أُمَّتِكَ فَقَدْ وَسَّعَ عَلَى فَارِسَ وَالرُّومِ وَهُمْ لاَ يَعْبُدُونَ اللَّهَ فَاسْتَوَى جَالِسًا ثُمَّ قَالَ ‏"‏ أَفِي شَكٍّ أَنْتَ يَا ابْنَ الْخَطَّابِ أُولَئِكَ قَوْمٌ عُجِّلَتْ لَهُمْ طَيِّبَاتُهُمْ فِي الْحَيَاةِ الدُّنْيَا ‏"‏ ‏.‏ فَقُلْتُ اسْتَغْفِرْ لِي يَا رَسُولَ اللَّهِ ‏.‏ وَكَانَ أَقْسَمَ أَنْ لاَ يَدْخُلَ عَلَيْهِنَّ شَهْرًا مِنْ شِدَّةِ مَوْجِدَتِهِ عَلَيْهِنَّ ‏.‏ حَتَّى عَاتَبَهُ اللَّهُ عَزَّ وَجَلَّ ‏.‏
قَالَ الزُّهْرِيُّ فَأَخْبَرَنِي عُرْوَةُ، عَنْ عَائِشَةَ، قَالَتْ لَمَّا مَضَى تِسْعٌ وَعِشْرُونَ لَيْلَةً دَخَلَ عَلَىَّ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بَدَأَ بِي فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ إِنَّكَ أَقْسَمْتَ أَنْ لاَ تَدْخُلَ عَلَيْنَا شَهْرًا وَإِنَّكَ دَخَلْتَ مِنْ تِسْعٍ وَعِشْرِينَ أَعُدُّهُنَّ ‏.‏ فَقَالَ ‏"‏ إِنَّ الشَّهْرَ تِسْعٌ وَعِشْرُونَ - ثُمَّ قَالَ - يَا عَائِشَةُ إِنِّي ذَاكِرٌ لَكِ أَمْرًا فَلاَ عَلَيْكِ أَنْ لاَ تَعْجَلِي فِيهِ حَتَّى تَسْتَأْمِرِي أَبَوَيْكِ ‏"‏ ‏.‏ ثُمَّ قَرَأَ عَلَىَّ الآيَةَ ‏{‏ يَا أَيُّهَا النَّبِيُّ قُلْ لأَزْوَاجِكَ‏}‏ حَتَّى بَلَغَ ‏{‏ أَجْرًا عَظِيمًا‏}‏ قَالَتْ عَائِشَةُ قَدْ عَلِمَ وَاللَّهِ أَنَّ أَبَوَىَّ لَمْ يَكُونَا لِيَأْمُرَانِي بِفِرَاقِهِ قَالَتْ فَقُلْتُ أَوَفِي هَذَا أَسْتَأْمِرُ أَبَوَىَّ فَإِنِّي أُرِيدُ اللَّهَ وَرَسُولَهُ وَالدَّارَ الآخِرَةَ ‏.‏ قَالَ مَعْمَرٌ فَأَخْبَرَنِي أَيُّوبُ أَنَّ عَائِشَةَ قَالَتْ لاَ تُخْبِرْ نِسَاءَكَ أَنِّي اخْتَرْتُكَ فَقَالَ لَهَا النَّبِيُّ صلى الله عليه وسلم ‏"‏ إِنَّ اللَّهَ أَرْسَلَنِي مُبَلِّغًا وَلَمْ يُرْسِلْنِي مُتَعَنِّتًا ‏"‏ ‏.‏ قَالَ قَتَادَةُ صَغَتْ قُلُوبُكُمَا مَالَتْ قُلُوبُكُمَا‏.‏
இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் மனைவியரில் இரு பெண்கள் குறித்து உமர் (ரழி) அவர்களிடம் நான் எப்போதும் கேட்க ஆவலாக இருந்தேன், அந்த இரு பெண்களைக் குறித்து உயர்ந்தவனான அல்லாஹ் கூறினான்: "நீங்கள் இருவரும் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரினால், நிச்சயமாக உங்கள் இதயங்கள் (இதன்பால்) சாய்ந்துவிட்டன" (திருக்குர்ஆன் 66:4), உமர் (ரழி) அவர்கள் ஹஜ்ஜுக்குப் புறப்படும் வரை நானும் அவர்களுடன் சென்றேன்.

நாங்கள் ஒரு பாதையில் சென்று கொண்டிருந்தபோது, உமர் (ரழி) அவர்கள் ஒதுங்கிச் சென்றார்கள், நானும் அவர்களுடன் ஒரு (தண்ணீர்) குவளையுடன் ஒதுங்கிச் சென்றேன். அவர்கள் இயற்கை உபாதையை முடித்துவிட்டு, பின்னர் என்னிடம் வந்தார்கள், நான் அவர்கள் கைகளில் தண்ணீர் ஊற்றினேன், அவர்கள் உளூச் செய்தார்கள். நான் கூறினேன்: நம்பிக்கையாளர்களின் தளபதியே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் மனைவியரில் அந்த இரு பெண்கள் யார், அவர்களைக் குறித்து உயர்ந்தவனும் மகத்துவமிக்கனுமான அல்லாஹ் கூறினான்: 'நீங்கள் இருவரும் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரினால், நிச்சயமாக உங்கள் இதயங்கள் அதன்பால் சாய்ந்துவிட்டன'? உமர் (ரழி) அவர்கள் கூறினார்கள்: இப்னு அப்பாஸ் அவர்களே, இது உங்களுக்கு எவ்வளவு ஆச்சரியமாக இருக்கிறது! (ஸுஹ்ரி அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வின் மீது ஆணையாக, அவர் கேட்டதைப் பற்றி அவர் விரும்பவில்லை, ஆனால் அதை இரகசியமாக வைத்திருக்கவில்லை.) அவர் (உமர் (ரழி) அவர்கள்) கூறினார்கள்: அவர்கள் ஹஃப்ஸா (ரழி) அவர்களும் ஆயிஷா (ரழி) அவர்களும் ஆவார்கள்; பின்னர் அவர் ஹதீஸை விவரிக்கத் தொடங்கி கூறினார்கள்: நாங்கள் குறைஷிகளில் பெண்களை அடக்கி ஆளும் மக்களாக இருந்தோம், நாங்கள் மதீனாவை அடைந்தபோது, அங்கு தங்கள் பெண்களால் அடக்கி ஆளப்படும் மக்களைக் கண்டோம், எங்கள் பெண்களும் அவர்களின் பெண்களின் (பழக்கவழக்கங்களை) கற்றுக்கொள்ள ஆரம்பித்தார்கள்.

அவர் மேலும் கூறினார்கள்: எனது வீடு மதீனாவின் புறநகரில் பனூ உமைய்யா பின் ஸைத் கோத்திரத்தில் அமைந்திருந்தது. ஒரு நாள் நான் என் மனைவியிடம் கோபமடைந்தேன், அவள் எனக்குப் பதிலடி கொடுத்தாள். அவள் எனக்குப் பதிலடி கொடுப்பதை நான் விரும்பவில்லை. அவள் சொன்னாள்: நான் உங்களுக்குப் பதிலடி கொடுப்பதை நீங்கள் விரும்பவில்லையா? அல்லாஹ்வின் மீது ஆணையாக, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் மனைவியர் அவருக்குப் பதிலடி கொடுக்கிறார்கள், அவர்களில் ஒருவர் பகல் முதல் இரவு வரை அவரை விட்டுப் பிரிந்துவிடுகிறார். எனவே நான் (உமர் (ரழி) அவர்கள்) வெளியே சென்று ஹஃப்ஸா (ரழி) அவர்களைச் சந்தித்துக் கேட்டேன்: நீங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குப் பதிலடி கொடுக்கிறீர்களா? அவர்கள் ஆம் என்றார்கள். நான் கேட்டேன்; உங்களில் யாராவது பகல் முதல் இரவு வரை அவரை விட்டுப் பிரிந்து இருக்கிறீர்களா? அவர்கள் ஆம் என்றார்கள். அவர் (உமர் (ரழி) அவர்கள்) கூறினார்கள்: உங்களில் அவ்வாறு செய்தவர் உண்மையில் தோல்வியடைந்து நஷ்டத்தை அடைந்தார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் கோபத்தின் காரணமாக அவள் மீது அல்லாஹ்வின் கோபம் ஏற்படும் என்று உங்களில் ஒவ்வொருவரும் பயப்படவில்லையா, (அதன் விளைவாக) அவள் அழிந்துவிடக்கூடும்? எனவே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குப் பதிலடி கொடுக்காதீர்கள், அவரிடம் எதையும் கேட்காதீர்கள், ஆனால் நீங்கள் விரும்புவதை என்னிடம் கேளுங்கள். உங்கள் தோழி (அதாவது ஆயிஷா (ரழி) அவர்கள்) உங்களை விட அழகானவராகவும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு பிரியமானவராகவும் இருந்தால், (அவருடைய) வெளிப்படையான நடத்தை உங்களைத் தவறாக வழிநடத்த வேண்டாம்.

அவர் (ஹள்ரத் உமர் (ரழி) அவர்கள் மேலும்) கூறினார்கள்: எனக்கு அன்ஸாரைச் சேர்ந்த ஒரு தோழர் இருந்தார், நாங்கள் முறைவைத்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் சமூகத்தில் இருப்போம். அவர் ஒரு நாள் அங்கே இருப்பார், நான் மறுநாள் அங்கே இருப்பேன், அவர் எனக்கு வஹீ (இறைச்செய்தி) மற்றும் பிற (விஷயங்கள்) பற்றிய செய்திகளைக் கொண்டு வருவார், நானும் அவருக்கு இது போன்ற (செய்திகளை) கொண்டு வருவேன். கஸ்ஸானியர்கள் நம்மீது தாக்குதல் நடத்த குதிரைகளுக்கு லாடம் அடித்துக் கொண்டிருப்பதாக நாங்கள் பேசிக்கொண்டோம். ஒருமுறை என் தோழர் (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை) சந்தித்துவிட்டு, இரவில் என்னிடம் வந்து என் கதவைத் தட்டி என்னை அழைத்தார், நான் அவரிடம் வெளியே வந்தேன், அவர் கூறினார்: மிக முக்கியமான ஒரு விஷயம் நடந்துவிட்டது. நான் கேட்டேன்: அது என்ன? கஸ்ஸானியர்கள் வந்துவிட்டார்களா? அவர் கூறினார்: இல்லை, ஆனால் அதைவிட மிகவும் தீவிரமானதும், மிக முக்கியமானதுமான ஒன்று: நபி (ஸல்) அவர்கள் தம் மனைவியரை விவாகரத்து செய்துவிட்டார்கள். நான் கூறினேன்: ஹஃப்ஸா (ரழி) அவர்கள் தோல்வியடைந்து நஷ்டத்தை அடைந்துவிட்டார், அது நடக்கும் என்று நான் பயந்தேன். விடிந்ததும் நான் ஃபஜ்ர் தொழுகையை நிறைவேற்றி, என் ஆடையை அணிந்துகொண்டு, பின்னர் அங்கே (நபி (ஸல்) அவர்களின் வீட்டில்) வந்து ஹஃப்ஸா (ரழி) அவர்களைச் சந்தித்தேன், அவர்கள் அழுதுகொண்டிருந்தார்கள். நான் கேட்டேன்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உங்களை (எல்லோரையும்) விவாகரத்து செய்துவிட்டார்களா? அவர்கள் கூறினார்கள்: எனக்குத் தெரியாது. இருப்பினும், அவர் தம் மாடி அறையில் தம்மைத் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்கள். நான் ஒரு கறுப்பு நிற ஊழியரிடம் சென்று அவரிடம் கூறினேன்: உமருக்காக அனுமதி கேள். அவர் உள்ளே சென்று பின்னர் என்னிடம் வந்து கூறினார்: நான் உங்களைப் பற்றி அவரிடம் குறிப்பிட்டேன், ஆனால் அவர் அமைதியாக இருந்தார்கள். பின்னர் நான் மிம்பருக்குச் சென்று அங்கே அமர்ந்தேன், அங்கே ஒரு கூட்டம் மக்கள் அதன் அருகே அமர்ந்திருந்தார்கள், அவர்களில் சிலர் அழுதுகொண்டிருந்தார்கள். நான் சிறிது நேரம் அங்கே அமர்ந்திருந்தேன், என் மனதில் இருந்த (அந்த எண்ணத்தால்) நான் மேற்கொள்ளப்படும் வரை. பின்னர் நான் அந்தச் சிறுவனிடம் திரும்பிச் சென்று அவனிடம் கூறினேன்: உமருக்காக அனுமதி கேள். அவன் உள்ளே சென்று என்னிடம் வந்து கூறினான்: நான் உங்களைப் பற்றி அவரிடம் குறிப்பிட்டேன், ஆனால் அவர் அமைதியாக இருந்தார்கள். நான் திரும்பிச் செல்லவிருந்தபோது அந்தச் சிறுவன் என்னை அழைத்துச் சொன்னான்: உள்ளே செல்லுங்கள்; உங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நான் உள்ளே சென்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு ஸலாம் கூறினேன், அவர்கள் ஒரு பாயால் ஆன சாய்வு மஞ்சத்தின் மீது சாய்ந்திருந்தார்கள், அது அவர்கள் விலாவில் அதன் அடையாளங்களை ஏற்படுத்தியிருந்தது. நான் கேட்டேன்: அல்லாஹ்வின் தூதரே, நீங்கள் உங்கள் மனைவியரை விவாகரத்து செய்துவிட்டீர்களா? அவர்கள் என் பக்கம் தலையை உயர்த்தி, இல்லை என்றார்கள். நான் கூறினேன்: அல்லாஹ் மிகப் பெரியவன். அல்லாஹ்வின் தூதரே, குறைஷிகளாகிய நாங்கள் பெண்களை எப்படி அடக்கி ஆண்டோம் என்பதை நீங்கள் பார்த்திருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன், ஆனால் நாங்கள் மதீனாவுக்கு வந்தபோது, தங்கள் பெண்களால் அடக்கி ஆளப்படும் மக்களைக் கண்டோம். அதனால் எங்கள் பெண்கள் அவர்களின் பெண்களிடமிருந்து கற்றுக்கொள்ள ஆரம்பித்தார்கள். ஒரு நாள் நான் என் மனைவியிடம் கோபமடைந்தேன், அவள் எனக்குப் பதிலடி கொடுக்க ஆரம்பித்தாள். அவள் எனக்குப் பதிலடி கொடுப்பதை நான் விரும்பவில்லை. அவள் சொன்னாள்: நான் உங்களுக்குப் பதிலடி கொடுப்பதை நீங்கள் விரும்பவில்லை, ஆனால், அல்லாஹ்வின் மீது ஆணையாக, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் மனைவியர் அவருக்குப் பதிலடி கொடுக்கிறார்கள், அவர்களில் எவரேனும் ஒருவர் பகல் முதல் இரவு வரை அவரை விட்டுப் பிரிந்துவிடுகிறார். நான் கூறினேன்: அவர்களில் அவ்வாறு செய்தவர் உண்மையில் தோல்வியடைந்து நஷ்டத்தை அடைந்தார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் கோபத்தின் காரணமாக அவள் மீது அல்லாஹ்வின் கோபம் ஏற்படும் என்பதிலிருந்து அவர்களில் எவரேனும் பாதுகாப்பாக உணர்கிறாரா, அவள் நிச்சயமாக அழிந்துவிட்டாள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் புன்னகைத்தார்கள், நான் கூறினேன்: அல்லாஹ்வின் தூதரே, நான் ஹஃப்ஸா (ரழி) அவர்களைச் சந்தித்துச் சொன்னேன்: உங்கள் தோழியின் ('ஆயிஷா (ரழி) அவர்களின்) (நடத்தை) உங்களைத் தவறாக வழிநடத்த வேண்டாம், அவர் உங்களை விட அழகானவராகவும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு பிரியமானவராகவும் இருந்தால். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இரண்டாவது முறையாக புன்னகைத்தார்கள். நான் கூறினேன்: அல்லாஹ்வின் தூதரே, நான் உங்களிடம் இனிமையான விஷயங்களைப் பற்றி பேசலாமா? அவர்கள் ஆம் என்றார்கள். நான் அமர்ந்து வீட்டை (பொருட்களைப் பார்க்க) என் தலையை உயர்த்தினேன், அல்லாஹ்வின் மீது ஆணையாக, மூன்று பதனிடப்பட்ட தோல்களைத் தவிர வேறு எதையும் நான் காணவில்லை. நான் கூறினேன்: அல்லாஹ்வின் தூதரே, உங்கள் உம்மத்திற்கு (வாழ்க்கையை) வளமாக்க வேண்டும் என்று அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்யுங்கள், ஏனெனில் அவன் பாரசீகம் மற்றும் ரோம் மக்களுக்கு (அவர்கள் உயர்ந்தவனும் மகத்துவமிக்கனுமான அல்லாஹ்வை வணங்காத போதிலும்) ஏராளமாக வழங்கியுள்ளான். அதன்பேரில் அவர் (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்) சாய்ந்திருந்த இடத்திலிருந்து எழுந்து அமர்ந்து, "கத்தாபின் மகனே! அவர்கள் இவ்வுலக வாழ்க்கையில் தங்கள் நன்மைகள் முன்கூட்டியே வழங்கப்பட்டுவிட்ட ஒரு கூட்டத்தினர் என்பதில் உமக்குச் சந்தேகமா?" என்று கேட்டார்கள். நான் கூறினேன்: அல்லாஹ்வின் தூதரே! எனக்காக மன்னிப்புக் கோருங்கள். மேலும் அவர் (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்) அவர்களுடன் மிகுந்த எரிச்சலின் காரணமாக ஒரு மாதத்திற்கு அவர்களைச் சந்திக்க மாட்டேன் என்று சத்தியம் செய்திருந்தார்கள், அல்லாஹ் அவரிடம் (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம்) தன் அதிருப்தியைக் காட்டும் வரை.

ஸுஹ்ரி அவர்கள் கூறினார்கள்: உர்வா அவர்கள் எனக்கு அறிவித்தார்கள், ஆயிஷா (ரழி) அவர்கள் கூறினார்கள்: இருபத்தொன்பது இரவுகள் முடிந்ததும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னைச் சந்திக்க வந்தார்கள், அவர்கள் (தங்கள் வருகையை) என்னுடன் ஆரம்பித்தார்கள். நான் கூறினேன்: அல்லாஹ்வின் தூதரே, நீங்கள் ஒரு மாதத்திற்கு எங்களைச் சந்திக்க மாட்டீர்கள் என்று சத்தியம் செய்திருந்தீர்கள், ஆனால் நான் இருபத்தொன்பது (இரவுகளை) மட்டுமே கணக்கிட்ட பிறகு நீங்கள் வந்துள்ளீர்கள். அதன்பேரில் அவர்கள் கூறினார்கள்: மாதம் இருபத்தொன்பது (நாட்களாகவும்) இருக்கலாம். பின்னர் அவர்கள் கூறினார்கள்: ஆயிஷா (ரழி) அவர்களே, நான் உங்களிடம் ஒரு விஷயத்தைப் பற்றிப் பேசப் போகிறேன், அதில் நீங்கள் உங்கள் பெற்றோரை ஆலோசிக்கும் வரை அவசரப்பட வேண்டாம் (உங்கள் இறுதி முடிவைக் கொடுக்காதீர்கள்). பின்னர் அவர்கள் இந்த வசனத்தை எனக்கு ஓதிக் காட்டினார்கள்: "நபியே, உம் மனைவியரிடம் கூறுவீராக" என்பதிலிருந்து "மகத்தான வெகுமதி" (33:28) என்பதை அடையும் வரை. ஆயிஷா (ரழி) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வின் மீது ஆணையாக, என் பெற்றோர் என்னை அவரிடமிருந்து பிரிய அனுமதிக்க மாட்டார்கள் என்று அவருக்குத் தெரியும். நான் கூறினேன்: இந்த விஷயத்தில் என் பெற்றோரை ஆலோசிக்க வேண்டிய அவசியம் உள்ளதா? நான் உண்மையில் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் மறுமையின் இருப்பிடத்தையும் தேர்ந்தெடுக்கிறேன். மஃமர் அவர்கள் கூறினார்கள்: அய்யூப் அவர்கள் எனக்கு அறிவித்தார்கள், ஆயிஷா (ரழி) அவர்கள் கூறினார்கள்: நான் உங்களைத் தேர்ந்தெடுத்துள்ளேன் என்று உங்கள் (மற்ற) மனைவியருக்குத் தெரிவிக்காதீர்கள், அதன்பேரில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நிச்சயமாக அல்லாஹ் என்னை ஒரு செய்தியைத் தெரிவிப்பவனாக அனுப்பியுள்ளான், அவன் என்னை (மற்றவர்களுக்கு) சிரமத்தை ஏற்படுத்துபவனாக அனுப்பவில்லை. கதாதா அவர்கள் கூறினார்கள்: "ஸகத் குலூபுகும்" என்றால் "உங்கள் இதயங்கள் சாய்ந்துவிட்டன."

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
3180ஜாமிஉத் திர்மிதீ
حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلاَنَ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، أَخْبَرَنِي أَبِي، عَنْ عَائِشَةَ، قَالَتْ لَمَّا ذُكِرَ مِنْ شَأْنِي الَّذِي ذُكِرَ وَمَا عَلِمْتُ بِهِ قَامَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فِيَّ خَطِيبًا فَتَشَهَّدَ وَحَمِدَ اللَّهَ وَأَثْنَى عَلَيْهِ بِمَا هُوَ أَهْلُهُ ثُمَّ قَالَ ‏"‏ أَمَّا بَعْدُ أَشِيرُوا عَلَىَّ فِي أُنَاسٍ أَبَنُوا أَهْلِي وَاللَّهِ مَا عَلِمْتُ عَلَى أَهْلِي مِنْ سُوءٍ قَطُّ وَأَبَنُوا بِمَنْ وَاللَّهِ مَا عَلِمْتُ عَلَيْهِ مِنْ سُوءٍ قَطُّ وَلاَ دَخَلَ بَيْتِي قَطُّ إِلاَّ وَأَنَا حَاضِرٌ وَلاَ غِبْتُ فِي سَفَرٍ إِلاَّ غَابَ مَعِي فَقَامَ سَعْدُ بْنُ مُعَاذٍ رَضِيَ اللَّهُ عَنْهُ فَقَالَ ائْذَنْ لِي يَا رَسُولَ اللَّهِ أَنْ أَضْرِبَ أَعْنَاقَهُمْ ‏.‏ وَقَامَ رَجُلٌ مِنَ الْخَزْرَجِ وَكَانَتْ أُمُّ حَسَّانَ بْنِ ثَابِتٍ مِنْ رَهْطِ ذَلِكَ الرَّجُلِ فَقَالَ كَذَبْتَ أَمَا وَاللَّهِ أَنْ لَوْ كَانُوا مِنَ الأَوْسِ مَا أَحْبَبْتَ أَنْ تُضْرَبَ أَعْنَاقُهُمْ حَتَّى كَادَ أَنْ يَكُونَ بَيْنَ الأَوْسِ وَالْخَزْرَجِ شَرٌّ فِي الْمَسْجِدِ وَمَا عَلِمْتُ بِهِ فَلَمَّا كَانَ مَسَاءُ ذَلِكَ الْيَوْمِ خَرَجْتُ لِبَعْضِ حَاجَتِي وَمَعِي أُمُّ مِسْطَحٍ فَعَثَرَتْ فَقَالَتْ تَعِسَ مِسْطَحٌ فَقُلْتُ لَهَا أَىْ أَمَّ تَسُبِّينَ ابْنَكِ فَسَكَتَتْ ثُمَّ عَثَرَتِ الثَّانِيَةَ فَقَالَتْ تَعِسَ مِسْطَحٌ فَقُلْتُ لَهَا أَىْ أَمَّ تَسُبِّينَ ابْنَكِ فَسَكَتَتْ ثُمَّ عَثَرَتِ الثَّالِثَةَ فَقَالَتْ تَعِسَ مِسْطَحٌ فَانْتَهَرْتُهَا فَقُلْتُ لَهَا أَىْ أُمَّ تَسُبِّينَ ابْنَكِ فَقَالَتْ وَاللَّهِ مَا أَسُبُّهُ إِلاَّ فِيكِ ‏.‏ فَقُلْتُ فِي أَىِّ شَيْءٍ قَالَتْ فَبَقَرَتْ إِلَىَّ الْحَدِيثَ قُلْتُ وَقَدْ كَانَ هَذَا قَالَتْ نَعَمْ ‏.‏ وَاللَّهِ لَقَدْ رَجَعْتُ إِلَى بَيْتِي وَكَأَنَّ الَّذِي خَرَجْتُ لَهُ لَمْ أَخْرُجْ لاَ أَجِدُ مِنْهُ قَلِيلاً وَلاَ كَثِيرًا وَوُعِكْتُ فَقُلْتُ لِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم أَرْسِلْنِي إِلَى بَيْتِ أَبِي فَأَرْسَلَ مَعِي الْغُلاَمَ فَدَخَلْتُ الدَّارَ فَوَجَدْتُ أُمَّ رُومَانَ فِي السُّفْلِ وَأَبُو بَكْرٍ فَوْقَ الْبَيْتِ يَقْرَأُ فَقَالَتْ أُمِّي مَا جَاءَ بِكِ يَا بُنَيَّةُ قَالَتْ فَأَخْبَرْتُهَا وَذَكَرْتُ لَهَا الْحَدِيثَ فَإِذَا هُوَ لَمْ يَبْلُغْ مِنْهَا مَا بَلَغَ مِنِّي قَالَتْ يَا بُنَيَّةُ خَفِّفِي عَلَيْكِ الشَّأْنَ فَإِنَّهُ وَاللَّهِ لَقَلَّمَا كَانَتِ امْرَأَةٌ حَسْنَاءُ عِنْدَ رَجُلٍ يُحِبُّهَا لَهَا ضَرَائِرُ إِلاَّ حَسَدْنَهَا وَقِيلَ فِيهَا فَإِذَا هِيَ لَمْ يَبْلُغْ مِنْهَا مَا بَلَغَ مِنِّي قَالَتْ قُلْتُ وَقَدْ عَلِمَ بِهِ أَبِي قَالَتْ نَعَمْ ‏.‏ قُلْتُ وَرَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم قَالَتْ نَعَمْ ‏.‏ وَاسْتَعْبَرْتُ وَبَكَيْتُ فَسَمِعَ أَبُو بَكْرٍ صَوْتِي وَهُوَ فَوْقَ الْبَيْتِ يَقْرَأُ فَنَزَلَ فَقَالَ لأُمِّي مَا شَأْنُهَا قَالَتْ بَلَغَهَا الَّذِي ذُكِرَ مِنْ شَأْنِهَا ‏.‏ فَفَاضَتْ عَيْنَاهُ فَقَالَ أَقْسَمْتُ عَلَيْكِ يَا بُنَيَّةُ إِلاَّ رَجَعْتِ إِلَى بَيْتِكِ ‏.‏ فَرَجَعْتُ وَلَقَدْ جَاءَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بَيْتِي فَسَأَلَ عَنِّي خَادِمَتِي فَقَالَتْ لاَ وَاللَّهِ مَا عَلِمْتُ عَلَيْهَا عَيْبًا إِلاَّ أَنَّهَا كَانَتْ تَرْقُدُ حَتَّى تَدْخُلَ الشَّاةُ فَتَأْكُلَ خَمِيرَتَهَا أَوْ عَجِينَتَهَا وَانْتَهَرَهَا بَعْضُ أَصْحَابِهِ فَقَالَ أَصْدِقِي رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم حَتَّى أَسْقَطُوا لَهَا بِهِ فَقَالَتْ سُبْحَانَ اللَّهِ وَاللَّهِ مَا عَلِمْتُ عَلَيْهَا إِلاَّ مَا يَعْلَمُ الصَّائِغُ عَلَى تِبْرِ الذَّهَبِ الأَحْمَرِ فَبَلَغَ الأَمْرُ ذَلِكَ الرَّجُلَ الَّذِي قِيلَ لَهُ فَقَالَ سُبْحَانَ اللَّهِ وَاللَّهِ مَا كَشَفْتُ كَنَفَ أُنْثَى قَطُّ قَالَتْ عَائِشَةُ فَقُتِلَ شَهِيدًا فِي سَبِيلِ اللَّهِ قَالَتْ وَأَصْبَحَ أَبَوَاىَ عِنْدِي فَلَمْ يَزَالاَ عِنْدِي حَتَّى دَخَلَ عَلَىَّ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَقَدْ صَلَّى الْعَصْرَ ثُمَّ دَخَلَ وَقَدِ اكْتَنَفَنِي أَبَوَاىَ عَنْ يَمِينِي وَعَنْ شِمَالِي فَتَشَهَّدَ النَّبِيُّ صلى الله عليه وسلم فَحَمِدَ اللَّهَ وَأَثْنَى عَلَيْهِ بِمَا هُوَ أَهْلُهُ ثُمَّ قَالَ ‏"‏ أَمَّا بَعْدُ يَا عَائِشَةُ إِنْ كُنْتِ قَارَفْتِ سُوءًا أَوْ ظَلَمْتِ فَتُوبِي إِلَى اللَّهِ فَإِنَّ اللَّهَ يَقْبَلُ التَّوْبَةَ عَنْ عِبَادِهِ ‏"‏ ‏.‏ قَالَتْ وَقَدْ جَاءَتِ امْرَأَةٌ مِنَ الأَنْصَارِ وَهِيَ جَالِسَةٌ بِالْبَابِ فَقُلْتُ أَلاَ تَسْتَحِي مِنْ هَذِهِ الْمَرْأَةِ أَنْ تَذْكُرَ شَيْئًا ‏.‏ فَوَعَظَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَالْتَفَتُّ إِلَى أَبِي فَقُلْتُ أَجِبْهُ ‏.‏ قَالَ فَمَاذَا أَقُولُ فَالْتَفَتُّ إِلَى أُمِّي فَقُلْتُ أَجِيبِيهِ ‏.‏ قَالَتْ أَقُولُ مَاذَا قَالَتْ فَلَمَّا لَمْ يُجِيبَا تَشَهَّدْتُ فَحَمِدْتُ اللَّهَ وَأَثْنَيْتُ عَلَيْهِ بِمَا هُوَ أَهْلُهُ ثُمَّ قُلْتُ أَمَا وَاللَّهِ لَئِنْ قُلْتُ لَكُمْ إِنِّي لَمْ أَفْعَلْ وَاللَّهُ يَشْهَدُ إِنِّي لَصَادِقَةٌ مَا ذَاكَ بِنَافِعِي عِنْدَكُمْ لِي لَقَدْ تَكَلَّمْتُمْ وَأُشْرِبَتْ قُلُوبُكُمْ وَلَئِنْ قُلْتُ إِنِّي قَدْ فَعَلْتُ وَاللَّهُ يَعْلَمُ أَنِّي لَمْ أَفْعَلْ لَتَقُولُنَّ إِنَّهَا قَدْ بَاءَتْ بِهِ عَلَى نَفْسِهَا وَإِنِّي وَاللَّهِ مَا أَجِدُ لِي وَلَكُمْ مَثَلاً قَالَتْ وَالْتَمَسْتُ اسْمَ يَعْقُوبَ فَلَمْ أَقْدِرْ عَلَيْهِ إِلاَّ أَبَا يُوسُفَ حِينَ قَالََ ‏:‏ ‏(‏فصبْرٌ جَمِيلٌ وَاللَّهُ الْمُسْتَعَانُ عَلَى مَا تَصِفُونَ ‏)‏ قَالَتْ وَأُنْزِلَ عَلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم مِنْ سَاعَتِهِ فَسَكَتْنَا فَرُفِعَ عَنْهُ وَإِنِّي لأَتَبَيَّنُ السُّرُورَ فِي وَجْهِهِ وَهُوَ يَمْسَحُ جَبِينَهُ وَيَقُولُ ‏"‏ الْبُشْرَى يَا عَائِشَةُ فَقَدْ أَنْزَلَ اللَّهُ بَرَاءَتَكِ ‏"‏ ‏.‏ قَالَتْ وَكُنْتُ أَشَدَّ مَا كُنْتُ غَضَبًا فَقَالَ لِي أَبَوَاىَ قُومِي إِلَيْهِ ‏.‏ فَقُلْتُ لاَ وَاللَّهِ لاَ أَقُومُ إِلَيْهِ وَلاَ أَحْمَدُهُ وَلاَ أَحْمَدُكُمَا وَلَكِنْ أَحْمَدُ اللَّهَ الَّذِي أَنْزَلَ بَرَاءَتِي لَقَدْ سَمِعْتُمُوهُ فَمَا أَنْكَرْتُمُوهُ وَلاَ غَيَّرْتُمُوهُ وَكَانَتْ عَائِشَةُ تَقُولُ أَمَّا زَيْنَبُ بِنْتُ جَحْشٍ فَعَصَمَهَا اللَّهُ بِدِينِهَا فَلَمْ تَقُلْ إِلاَّ خَيْرًا وَأَمَّا أُخْتُهَا حَمْنَةُ فَهَلَكَتْ فِيمَنْ هَلَكَ وَكَانَ الَّذِي يَتَكَلَّمُ فِيهِ مِسْطَحٌ وَحَسَّانُ بْنُ ثَابِتٍ وَالْمُنَافِقُ عَبْدُ اللَّهِ بْنُ أُبَىٍّ ابْنُ سَلُولَ وَهُوَ الَّذِي كَانَ يَسُوسُهُ وَيَجْمَعُهُ وَهُوَ الَّذِي تَوَلَّى كِبْرَهُ مِنْهُمْ هُوَ وَحَمْنَةُ قَالَتْ فَحَلَفَ أَبُو بَكْرٍ أَنْ لاَ يَنْفَعَ مِسْطَحًا بِنَافِعَةٍ أَبَدًا فَأَنْزَلَ اللَّهُ تَعَالَى هَذِهِ الآيَةَ ‏:‏ ‏(‏ولاَ يَأْتَلِ أُولُو الْفَضْلِ مِنْكُمْ وَالسَّعَةِ ‏)‏ إِلَى آخِرِ الآيَةِ يَعْنِي أَبَا بَكْرٍ ‏:‏ ‏(‏أنْ يُؤْتُوا أُولِي الْقُرْبَى وَالْمَسَاكِينَ وَالْمُهَاجِرِينَ فِي سَبِيلِ اللَّهِ ‏)‏ يَعْنِي مِسْطَحًا إِلَى قَوْلِهِ ‏:‏ ‏(‏ألاَ تُحِبُّونَ أَنْ يَغْفِرَ اللَّهُ لَكُمْ وَاللَّهُ غَفُورٌ رَحِيمٌ ‏)‏ قَالَ أَبُو بَكْرٍ بَلَى وَاللَّهِ يَا رَبَّنَا إِنَّا لَنُحِبُّ أَنْ تَغْفِرَ لَنَا وَعَادَ لَهُ بِمَا كَانَ يَصْنَعُ ‏.‏ قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ غَرِيبٌ مِنْ حَدِيثِ هِشَامِ بْنِ عُرْوَةَ ‏.‏ وَقَدْ رَوَاهُ يُونُسُ بْنُ يَزِيدَ وَمَعْمَرٌ وَغَيْرُ وَاحِدٍ عَنِ الزُّهْرِيِّ عَنْ عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ وَسَعِيدِ بْنِ الْمُسَيَّبِ وَعَلْقَمَةَ بْنِ وَقَّاصٍ اللَّيْثِيِّ وَعُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ عَنْ عَائِشَةَ هَذَا الْحَدِيثَ أَطْوَلَ مِنْ حَدِيثِ هِشَامِ بْنِ عُرْوَةَ وَأَتَمَّ ‏.‏
ஆயிஷா (ரழி) அவர்கள் கூறினார்கள்:

"என்னைப்பற்றி (வதந்திகள்) பேசப்பட்டவை பேசப்பட்ட நிலையில், நான் அது பற்றி ஏதும் அறியாதிருந்தேன். (இந்நிலையில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களிடையே உரையாற்ற எழுந்தார்கள். அவர்கள் தஷஹ்ஹுத் ஓதி, அல்லாஹ்வுக்குத் தகுதியான புகழைக் கொண்டு அவனைப் புகழ்ந்தார்கள். பிறகு கூறினார்கள்: 'அம்மா பஃது (இறைவாழ்த்துரைக்குப் பின்), என் குடும்பத்தார் மீது அவதூறு கற்பித்த சில மனிதர்கள் விஷயத்தில் எனக்கு ஆலோசனை கூறுங்கள். அல்லாஹ்வின் மீது ஆணையாக! என் குடும்பத்தாரிடம் எந்தத் தீமையையும் நான் அறியவில்லை. அவர்கள் (என் மனைவியை) ஒரு மனிதருடன் தொடர்புபடுத்திப் பேசுகிறார்கள்; அந்த மனிதரிடமும் நான் எந்தத் தீமையையும் அறியவில்லை. நான் வீட்டில் இருக்கும் போதே தவிர அவர் என் வீட்டிற்குள் நுழைந்ததில்லை. நான் பயணமாகச் சென்றால் அவரும் என்னுடனேயே பயணிப்பார்.'

உடனே ஸஅத் பின் முஆத் (ரழி) அவர்கள் எழுந்து, 'அல்லாஹ்வின் தூதரே! அவர்களின் கழுத்துகளை வெட்ட எனக்கு அனுமதியுங்கள்' என்றார்கள். அப்போது கஸ்ரஜ் குலத்தைச் சேர்ந்த ஒரு மனிதர் எழுந்தார் - ஹஸ்ஸான் பின் ஸாபித் அவர்களின் தாயார் அந்த மனிதரின் குடும்பத்தைச் சேர்ந்தவர் - அவர் (ஸஅத் பின் முஆத் அவர்களைப் பார்த்து), 'நீர் பொய் சொல்கிறீர்! அல்லாஹ்வின் மீது ஆணையாக! அவர்கள் அவ்ஸ் குலத்தைச் சேர்ந்தவர்களாக இருந்திருந்தால் அவர்களின் கழுத்துகளை வெட்ட நீர் விரும்பியிருக்க மாட்டீர்' என்றார். மஸ்ஜிதுக்குள் அவ்ஸ் மற்றும் கஸ்ரஜ் குலத்தினரிடையே சண்டை மூளும் நிலை உருவானது; ஆனால் நான் அதை அறிந்திருக்கவில்லை.

அன்றைய தினம் மாலையில், நான் எனது சில தேவைகளுக்காக (இயற்கை உபாதையை கழிக்க) வெளியே சென்றேன். என்னுடன் உம்மு மிஸ்தஹ் அவர்களும் வந்தார்கள். (வழியில்) அவர்கள் தடுமாறினார்கள். அப்போது, 'மிஸ்தஹ் நாசமாகட்டும்!' என்று கூறினார்கள். நான் அவரிடம், 'தாயே! உங்கள் மகனையா ஏசுகிறீர்கள்?' என்று கேட்டேன். அவர் மௌனமாக இருந்தார். பிறகு இரண்டாவது முறையாகத் தடுமாறியபோதும், 'மிஸ்தஹ் நாசமாகட்டும்!' என்றார். நான், 'தாயே! உங்கள் மகனையா ஏசுகிறீர்கள்?' என்று கேட்டேன். அவர் மௌனமாக இருந்தார். மூன்றாவது முறையும் தடுமாறியபோது, 'மிஸ்தஹ் நாசமாகட்டும்!' என்றார். நான் அவரை அதட்டி, 'தாயே! உங்கள் மகனையா ஏசுகிறீர்கள்?' என்று கேட்டேன். அதற்கு அவர், 'அல்லாஹ்வின் மீது ஆணையாக! உன்னை முன்னிட்டே தவிர நான் அவரை ஏசவில்லை' என்றார்.

நான், 'எந்த விஷயத்தில்?' என்று கேட்டேன். உடனே அவர் நடந்த விபரத்தை எனக்குத் தெரிவித்தார். நான், 'இது உண்மையிலேயே நடந்துவிட்டதா?' என்று கேட்டேன். அவர், 'ஆம்' என்றார். அல்லாஹ்வின் மீது ஆணையாக! நான் எதற்காக வெளியே வந்தேனோ, அந்தத் தேவை நிறைவேறாதது போன்ற நிலையில் நான் என் வீட்டிற்குத் திரும்பினேன். எனக்குக் காய்ச்சல் ஏற்பட்டது. நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், 'என்னை என் தந்தையின் வீட்டிற்கு அனுப்பி வையுங்கள்' என்று கேட்டேன். அவர்கள் என்னுடன் ஒரு பையனை அனுப்பி வைத்தார்கள்.

நான் வீட்டுக்குள் நுழைந்தேன். என் தாயார் உம்மு ரூமான் வீட்டின் கீழ்தளத்திலும், என் தந்தை அபூபக்ர் (ரழி) மேல்தளத்தில் குர்ஆன் ஓதிக்கொண்டும் இருந்தார்கள். என் தாயார், 'மகளே! உன்னை இங்கு வரவழைத்தது எது?' என்று கேட்டார். நான் அவரிடம் நடந்த செய்தியைக் கூறினேன். ஆனால் அந்தச் செய்தி என்னைப் பாதித்த அளவுக்கு அவரைப் பாதிக்கவில்லை. அவர், 'மகளே! உன் மீது (இவ்விஷயத்தை) இலகுவாக்கிக்கொள். அல்லாஹ்வின் மீது ஆணையாக, தன் கணவனால் நேசிக்கப்படுபவளாகவும், சக்களத்திகள் இருப்பவளாகவும் உள்ள ஓர் அழகான பெண், அவர்கள் அவள் மீது பொறாமை கொள்ளாமலும், அவளைப் பற்றி (குறைகள்) பேசப்படாமலும் இருப்பது அரிது' என்று கூறினார். நான், 'என் தந்தைக்கும் இது தெரியுமா?' என்று கேட்டேன். அவர் 'ஆம்' என்றார். 'அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கும் தெரியுமா?' என்று கேட்டேன். அதற்கும் அவர் 'ஆம்' என்றார்.

என் கண்கள் கலங்கி நான் அழுதேன். மேல்தளத்தில் ஓதிக்கொண்டிருந்த அபூபக்ர் (ரழி) என் குரலைக் கேட்டு இறங்கி வந்து, என் தாயாரிடம், 'அவளுக்கு என்ன நேர்ந்தது?' என்று கேட்டார். தாயார், 'தன்னைப் பற்றிப் பேசப்படும் செய்தியை அவள் அறிந்துவிட்டாள்' என்றார். என் தந்தை அழுதுகொண்டே, 'மகளே! நான் உன்னிடம் சத்தியமிட்டுக் கேட்கிறேன், நீ உன் வீட்டிற்குத் திரும்பிச் செல்' என்றார். எனவே நான் (என் கணவர் வீட்டிற்குத்) திரும்பினேன்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என் வீட்டிற்கு வந்து, என் பணிப்பெண்ணிடம் என்னைப் பற்றி விசாரித்தார்கள். அதற்கு அந்தப் பணிப்பெண், 'இல்லை, அல்லாஹ்வின் மீது ஆணையாக! அவர் (வயது முதிராத சிறுமியாக இருப்பதால்) உறங்கிவிடுவார்; ஆடு உள்ளே நுழைந்து அவர் பிசைந்து வைத்திருக்கும் மாவை தின்றுவிடும். இந்தக் குறையைத் தவிர அவர் மீது நான் எந்தக் குறையையும் அறியவில்லை' என்றார். நபித்தோழர்களில் சிலர் அப்பெண்ணை அதட்டி, 'அல்லாஹ்வின் தூதரிடம் உண்மையைச் சொல்' என்றார்கள். அப்பெண் நடந்த விபரத்தை அறிந்ததும், 'சுப்ஹானல்லாஹ்! (தூய) தங்கத்தைப் பற்றி ஒரு பொற்கொல்லர் அறிவதை விட அதிகமாக நான் அவரைப் பற்றி அறியவில்லை (அவர் அவ்வளவு தூயவர்)' என்று கூறினார்.

(என் மீது குற்றம் சாட்டப்பட்ட) அந்த மனிதருக்கும் செய்தி எட்டியது. அவர், 'சுப்ஹானல்லாஹ்! அல்லாஹ்வின் மீது ஆணையாக, நான் எந்தப் பெண்ணின் ஆடையையும் (தவறான நோக்கத்தில்) விலக்கியதில்லை' என்று கூறினார்."

ஆயிஷா (ரழி) அவர்கள் கூறினார்கள்: "(பிற்காலத்தில்) அந்த மனிதர் அல்லாஹ்வின் பாதையில் ஷஹீத் (உயிர் தியாகி) ஆனார்."

(ஆயிஷா (ரழி) அவர்கள் தொடர்ந்தார்கள்): "மறுநாள் காலை என் பெற்றோர் என்னிடம் வந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அஸர் தொழுதுவிட்டு என்னிடம் வரும் வரை அவர்கள் இருவரும் என்னுடனேயே இருந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் வந்தபோது என் பெற்றோர் எனக்கு வலப்புறமும் இடப்புறமும் அமர்ந்திருந்தனர். நபி (ஸல்) அவர்கள் தஷஹ்ஹுத் ஓதி, அல்லாஹ்வை அவனுக்குரிய தகுதியோடு புகழ்ந்துவிட்டு, 'அம்மா பஃது! ஆயிஷாவே! நீ ஏதேனும் தவறு செய்திருந்தாலோ, அல்லது அநீதி இழைத்திருந்தாலோ அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கேள். நிச்சயமாக அல்லாஹ் தன் அடியார்களின் பாவமன்னிப்பை ஏற்றுக்கொள்கிறான்' என்றார்கள்.

அப்போது அன்சாரிப் பெண்மணி ஒருவர் வந்து வாசலில் அமர்ந்திருந்தார். நான் (நபி (ஸல்) அவர்களிடம்), 'இந்தப் பெண்மணியிடம் (இத்தகைய விஷயத்தைக் கூறுவதற்கு) தாங்கள் வெட்கப்படவில்லையா?' என்று கேட்டேன். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பொதுவான) அறிவுரை வழங்கினார்கள்.

நான் என் தந்தையிடம் திரும்பி, 'இவருக்குப் பதிலளியுங்கள்' என்றேன். அவர், 'நான் என்ன சொல்வது?' என்றார். பிறகு என் தாயாரிடம் திரும்பி, 'இவருக்குப் பதிலளியுங்கள்' என்றேன். அவரும், 'நான் என்ன சொல்வது?' என்றார். அவர்கள் இருவரும் பதிலளிக்காதபோது, நான் தஷஹ்ஹுத் ஓதி, அல்லாஹ்வை அவனுக்குரிய தகுதியோடு புகழ்ந்துவிட்டுப் பின்வருமாறு கூறினேன்:

'அல்லாஹ்வின் மீது ஆணையாக! நான் (இக்குற்றத்தைச்) செய்யவில்லை என்று உங்களிடம் கூறினால் - நான் உண்மை சொல்கிறேன் என்று அல்லாஹ் அறிகிறான் - ஆனால் அது உங்களுக்குப் பயனளிக்காது; ஏனெனில் நீங்கள் (வதந்திகளைப்) பேசியிருக்கிறீர்கள்; உங்கள் உள்ளங்களில் அது பதிந்துவிட்டது. நான் (இக்குற்றத்தைச்) செய்தேன் என்று உங்களிடம் கூறினால் - நான் அதைச் செய்யவில்லை என்று அல்லாஹ் நன்கறிவான் - உடனே நீங்கள், 'அவள் தன் குற்றத்தை ஒப்புக்கொண்டாள்' என்று சொல்வீர்கள். அல்லாஹ்வின் மீது ஆணையாக! எனக்கும் உங்களுக்கும் யஃகூப் (அலை) அவர்களின் பெயரை என்னால் நினைவுபடுத்த முடியவில்லை - யூசுஃபுடைய தந்தை கூறியதைத் தவிர வேறு உதாரணத்தை நான் காணவில்லை:

**"ஃபஸப்ருன் ஜமீல், வல்லாஹுல் முஸ்தஆனு அலா மா தஸிஃபூன்" (எனக்குத் தேவை) அழகிய பொறுமையே. நீங்கள் புனையும் விஷயத்தில் அல்லாஹ்விடமே உதவி தேட வேண்டும்** (12:18).'"

ஆயிஷா (ரழி) அவர்கள் கூறினார்கள்: "அந்த நேரத்தில்தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு வஹீ (இறைச்செய்தி) அருளப்பட்டது. நாங்கள் மௌனமானோம். வஹீ நிலை அவர்களை விட்டு விலகியபோது, அவர்கள் தங்கள் நெற்றியைத் துடைத்துக்கொண்டே, 'ஆயிஷாவே! நற்செய்தி! அல்லாஹ் உன் நிரபராதித் தன்மையை இறக்கிவைத்துவிட்டான்' என்று கூறினார்கள். அவர்களின் முகத்தில் மகிழ்ச்சியை நான் கண்டேன்.

அப்போது நான் மிகுந்த கோபத்தில் இருந்தேன். என் பெற்றோர் என்னிடம், 'எழுந்து அவரிடம் செல்' என்றார்கள். நான், 'அல்லாஹ்வின் மீது ஆணையாக! நான் அவரிடம் செல்லமாட்டேன்; அவரையும் புகழமாட்டேன், உங்கள் இருவரையும் புகழமாட்டேன். என் நிரபராதித் தன்மையை இறக்கிவைத்த அல்லாஹ்வையே புகழ்வேன். நீங்கள் (வதந்திகளைக்) கேட்டும் அதை மறுக்கவில்லை; (என்னைக் காக்க) அதை மாற்றவுமில்லை' என்று கூறினேன்."

ஆயிஷா (ரழி) அவர்கள் கூறினார்கள்: "ஜைனப் பின்த் ஜஹ்ஷ் (ரழி) அவர்களைப் பொறுத்தவரை, அல்லாஹ் அவரைத் தன் மார்க்கப்பற்றின் காரணமாகப் பாதுகாத்தான்; அவர் (என்னைப்பற்றி) நல்லதைத் தவிர வேறெதுவும் சொல்லவில்லை. ஆனால் அவரின் சகோதரி ஹம்னா, நாசமானவர்களுடன் சேர்ந்து நாசமானார். மிஸ்தஹ், ஹஸ்ஸான் பின் ஸாபித், நயவஞ்சகன் அப்துல்லாஹ் பின் உபை பின் சலூல் ஆகியோர் (இவ்வவதூறைப்) பேசிக்கொண்டிருந்தனர். அவன்தான் (அப்துல்லாஹ் பின் உபை) இதைத் தூண்டிவிட்டு, திரட்டி, அவர்களில் முக்கியப் பங்காற்றினான். அவனும் ஹம்னாவும் இதில் (ஈடுபாடு) கொண்டிருந்தனர்.

அபூபக்ர் (ரழி) அவர்கள், 'இனி ஒருபோதும் மிஸ்தஹுக்கு எந்த உதவியும் செய்யமாட்டேன்' என்று சத்தியம் செய்தார்கள். அப்போது அல்லாஹ் உன்னதமானவன் இந்த வசனத்தை இறக்கிவைத்தான்:

**(நபியே!) உங்களில் செல்வாக்கும் வசதியும் உடையவர்கள், உறவினர்களுக்கும், ஏழைகளுக்கும், அல்லாஹ்வின் பாதையில் ஹிஜ்ரத் செய்தவர்களுக்கும் (எதுவும்) கொடுக்கமாட்டேன் என்று சத்தியம் செய்ய வேண்டாம்...** (மிஸ்தஹ் விஷயத்தில் அபூபக்ர் (ரழி) சத்தியம் செய்ததைக் குறித்து இவ்வசனம் இறங்கியது)... **அல்லாஹ் உங்களை மன்னிக்க வேண்டும் என்று நீங்கள் விரும்ப மாட்டீர்களா? அல்லாஹ் மிக மன்னிப்பவன்; மிக்க கிருபையுடையவன்** (24:22).

இதைக் கேட்ட அபூபக்ர் (ரழி), 'ஆம், அல்லாஹ்வின் மீது ஆணையாக! எங்கள் இறைவா! நீ எங்களை மன்னிக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்' என்று கூறிவிட்டு, மிஸ்தஹுக்கு முன்பு செய்து கொண்டிருந்த உதவியைத் தொடர்ந்தார்கள்."

ஹதீஸ் தரம் : ஸஹீஹ் (தாருஸ்ஸலாம் பதிப்பு)