அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"யார் தம் எஜமானர்களின் (அல்லது ஆதரவாளர்களின்) அனுமதியின்றி (அவர்களுடனான 'வலா' உறவை முறித்துக்கொண்டு) வேறு ஒரு கூட்டத்தாரிடம் (ஆதரவு தேடி) தம்மை இணைத்துக்கொள்கிறாரோ, அவர் மீது அல்லாஹ்வின் சாபமும், வானவர்களின் சாபமும், மக்கள் அனைவரின் சாபமும் உண்டாகும். மறுமை நாளில் அவரிடமிருந்து கடமையானதோ அல்லது உபரியானதோ (எந்த வணக்கமும்) ஏற்றுக்கொள்ளப்படாது."