அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபிகள் (ஸல்) அவர்கள் கூறினார்கள், "யாரேனும் ஒரு முஸ்லிம் அடிமையை விடுதலை செய்தால், அல்லாஹ், அவர் அந்த அடிமையின் உடலின் அதற்குரிய பாகங்களை விடுவித்தமைக்காக, இவருடைய உடலின் ஒவ்வொரு பாகத்தையும் நரக நெருப்பிலிருந்து காப்பாற்றுவான்; இவருடைய அந்தரங்க உறுப்புகள் கூட நரக நெருப்பிலிருந்து காப்பாற்றப்படும்) அடிமையின் அந்தரங்க உறுப்புகளை விடுதலை செய்ததன் காரணமாக."
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டேன்: எவர் ஒரு இறைநம்பிக்கை கொண்ட அடிமையை விடுதலை செய்கிறாரோ, அல்லாஹ், அந்த அடிமையின் ஒவ்வொரு உறுப்புக்கு ஈடாக, அவரின் (விடுதலை செய்தவரின்) ஒவ்வொரு உறுப்பையும், அந்த அடிமையின் அந்தரங்க உறுப்புக்கு ஈடாக, அவரின் (விடுதலை செய்தவரின்) அந்தரங்க உறுப்பைக்கூட நரக நெருப்பிலிருந்து விடுதலை செய்வான்.
அபூ ஹுரைரா (ரழி) அறிவித்தார்கள்: "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் செவியுற்றேன்: 'எவர் ஒரு முஃமினான அடிமையை விடுதலை செய்கிறாரோ, அல்லாஹ், அவரின் ஓர் உறுப்பை, அந்த அடிமையின் ஒவ்வோர் உறுப்புக்கு ஈடாக நரக நெருப்பிலிருந்து விடுதலை செய்கிறான்; எந்த அளவிற்கு எனில், அந்த அடிமையின் மறை உறுப்புக்கு ஈடாக, அவரின் மறை உறுப்பையும் அவன் (அல்லாஹ்) விடுதலை செய்கிறான்.'"
وعن أبي هريرة رضي الله عنه قال: قال لي رسول الله صلى الله عليه وسلم : من أعتق رقبة مسلمة أعتق الله بكل عضو منه عضوًا منه من النار حتى فرجه بفرجه ((متفق عليه))
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள், "யார் ஒரு முஸ்லிம் அடிமையை விடுதலை செய்கிறாரோ, அந்த அடிமையின் ஒவ்வொரு உறுப்புக்கும் பகரமாக, விடுதலை செய்தவரின் ஒவ்வொரு உறுப்பையும், அவரது மர்ம உறுப்பு உட்பட, அல்லாஹ் நரக நெருப்பிலிருந்து விடுவிப்பான்."