இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

2517ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ يُونُسَ، حَدَّثَنَا عَاصِمُ بْنُ مُحَمَّدٍ، قَالَ حَدَّثَنِي وَاقِدُ بْنُ مُحَمَّدٍ، قَالَ حَدَّثَنِي سَعِيدٌ ابْنُ مَرْجَانَةَ، صَاحِبُ عَلِيِّ بْنِ حُسَيْنٍ قَالَ لِي أَبُو هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم ‏ ‏ أَيُّمَا رَجُلٍ أَعْتَقَ امْرَأً مُسْلِمًا اسْتَنْقَذَ اللَّهُ بِكُلِّ عُضْوٍ مِنْهُ عُضْوًا مِنْهُ مِنَ النَّارِ ‏ ‏‏.‏ قَالَ سَعِيدٌ ابْنُ مَرْجَانَةَ فَانْطَلَقْتُ إِلَى عَلِيِّ بْنِ حُسَيْنٍ فَعَمَدَ عَلِيُّ بْنُ حُسَيْنٍ ـ رضى الله عنهما ـ إِلَى عَبْدٍ لَهُ قَدْ أَعْطَاهُ بِهِ عَبْدُ اللَّهِ بْنُ جَعْفَرٍ عَشَرَةَ آلاَفِ دِرْهَمٍ ـ أَوْ أَلْفَ دِينَارٍ ـ فَأَعْتَقَهُ‏.‏
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "எந்த ஒரு மனிதர் ஒரு முஸ்லிம் மனிதரை (அடிமையிலிருந்து) விடுதலை செய்கிறாரோ, அல்லாஹ் (அந்த அடிமையின்) ஒவ்வொரு உறுப்புக்கும் பகரமாக இவருடைய ஒவ்வொரு உறுப்பையும் நரகத்திலிருந்து விடுவிப்பான்."

(அறிவிப்பாளர்) ஸயீத் பின் மர்ஜானா (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:
நான் (இச்செய்தியைச் சொல்வதற்காக) அலீ பின் ஹுஸைன் (ரலி) அவர்களிடம் சென்றேன். உடனே அலீ பின் ஹுஸைன் (ரலி) அவர்கள், அப்துல்லாஹ் பின் ஜஃபர் அவர்கள் பத்தாயிரம் திர்ஹம்கள் -அல்லது ஓராயிரம் தீனார்கள்- கொடுத்துக் கேட்டிருந்த தம் அடிமையை நோக்கிச் சென்று, அவரை விடுதலை செய்தார்கள்.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
1418அன்-நவவியின் 40 ஹதீஸ்கள்
عَنْ أَبِي هُرَيْرَةَ ‏- رضى الله عنه ‏- قَالَ: قَالَ رَسُولُ اَللَّهِ ‏- صلى الله عليه وسلم ‏-{ أَيُّمَا امْرِئٍ مُسْلِمٍ أَعْتَقَ اِمْرَأً مُسْلِماً, اِسْتَنْقَذ َ [1]‏ اَللَّهُ بِكُلِّ عُضْوٍ مِنْهُ عُضْوًا مِنْهُ مِنَ النَّارِ } مُتَّفَقٌ عَلَيْهِ .‏ [2]‏ .‏
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

“எந்தவொரு முஸ்லிம், மற்றொரு முஸ்லிம் ஆண் அடிமையை விடுதலை செய்கிறாரோ, அல்லாஹ் அந்த (விடுதலை செய்யப்பட்ட) அடிமையின் ஒவ்வொரு உறுப்புக்கும் ஈடாக, விடுதலை செய்தவருடைய ஒவ்வோர் உறுப்பையும் நரக நெருப்பிலிருந்து விடுதலை செய்வான்.”

ஒப்புக்கொள்ளப்பட்டது.