சலீம் பின் 'அப்துல்லாஹ் அவர்கள் தனது தந்தை ('அப்துல்லாஹ் (ரழி) அவர்கள்) கூறியதாக அறிவித்தார்கள்:
"அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "கால்நடை மந்தையைக் காக்கும் நாய் அல்லது வேட்டை நாயைத் தவிர வேறு எந்த நாயையும் வளர்ப்பவரின் (நற்)செயல்களிலிருந்து ஒவ்வொரு நாளும் ஒரு கீராத் (அளவு) குறைக்கப்படும்."
'அப்துல்லாஹ் (ரழி) அவர்கள் கூறினார்கள்: "அபூஹுரைரா (ரழி) அவர்கள், 'அல்லது விவசாயத்திற்கான நாய்' என்றும் கூறினார்கள்."