இப்னு உமர் (ரழி) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பின்வருமாறு) கூறியதாக அறிவித்தார்கள்:
விவசாய நிலத்தைக் காப்பதற்கோ, கால்நடை மந்தைகளைக் காப்பதற்கோ, அல்லது வேட்டையாடுவதற்கோ (பயன்படுத்தும் நாய்) அல்லாமல் (வேறு நோக்கத்திற்காக) ஒரு நாயை வைத்திருப்பவர், ஒவ்வொரு நாளும் (அல்லாஹ்விடம் அவருக்குக் கிடைக்கும்) தனது நற்கூலியிலிருந்து ஒரு கீராத் அளவு இழப்பார்.
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"யார் வேட்டைக்காகவோ, விவசாயத்திற்காகவோ (பயிர்களைக் காப்பதற்காகவோ) அல்லது கால்நடைகளை மேய்ப்பதற்காகவோ அன்றி நாய் வளர்க்கிறாரோ, அவருடைய நற்செயல்களில் இருந்து ஒவ்வொரு நாளும் ஒரு கிராத் குறைக்கப்படும்."