இவர்கள் அனைவரும் ஸுஹ்ரி (ரஹ்) அவர்களிடமிருந்து இதே அறிவிப்பாளர் தொடர் வழியாகவே அறிவிக்கின்றனர். ஸாலிஹ் (ரஹ்) அவர்களின் அறிவிப்பில், ''பிறகு அல்லாஹ் (நபி (ஸல்) அவர்களின் உயிரைக்) கைப்பற்றும் வரை அவர்கள் தொழவில்லை'' எனும் தகவல் மேலதிகமாக இடம்பெற்றுள்ளது.
அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
(இந்த ஹதீஸ் யஹ்யா அவர்கள் மாலிக் வழியாக அறிவித்த) ஹதீஸைப் போன்றே அமைந்துள்ளது. இவர்களில் எவருடைய ஹதீஸிலும் "இமாமுடன்" என்ற குறிப்பு இல்லை. உபைதுல்லாஹ்வின் அறிவிப்பில் "அவர் தொழுகை முழுவதையும் அடைந்துகொண்டார்" என்று இடம்பெற்றுள்ளது.
இந்த ஹதீஸ் அஸ்-ஸுஹ்ரீ அவர்களிடமிருந்து மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. யூனுஸ் மற்றும் மஅமர் ஆகியோரின் அறிவிப்பில், "உன் மகன்கள் அனைவருக்கும்...?" என்றும், லைஸ் மற்றும் இப்னு உயைனா ஆகியோரின் அறிவிப்பில், "உன் பிள்ளைகள் அனைவருக்கும்...?" என்றும் இடம்பெற்றுள்ளது. லைஸ் அவர்களின் அறிவிப்பில், "பஷீர் அவர்கள் (தம் மகன்) நும்ானை அழைத்துக் கொண்டு வந்தார்கள்" என்று உள்ளது.
இவர்கள் அனைவரும் ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் வழியாக இதே அறிவிப்பாளர் தொடரில் அறிவிக்கின்றனர். யூனுஸ் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "நாட்டுக் கழுதைகளின் இறைச்சியை உண்பது பற்றியும்" (குறிப்பிடப்பட்டுள்ளது).
ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் வழியாகவே மற்றவர்களும் மாலிக் (ரஹ்) அவர்களின் அறிவிப்புத் தொடரில், அவரைப் போன்றே அறிவிக்கின்றனர். ஆனால் “இவர் புறக்கணிப்பார்; அவர் புறக்கணிப்பார்” என்று மாலிக் (ரஹ்) கூறியதற்கு மாற்றமாக, மற்றவர்கள் அனைவரும் தங்கள் அறிவிப்பில் “இவர் முகத்தைத் திருப்பிக்கொள்வார்; அவர் முகத்தைத் திருப்பிக்கொள்வார்” என்றே கூறியுள்ளனர்.