அனஸ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: "உக்ல் (கோத்திரத்தைச் சேர்ந்த) எட்டு பேர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தார்கள்." (இந்த அறிவிப்பாளர்) இதே போன்ற (முழுமையான) ஒரு செய்தியை, "(நபி (ஸல்) அவர்கள்) அவர்களுக்குச் சூடு போடவில்லை" என்ற வார்த்தைகள் வரை குறிப்பிட்டார். மேலும் (அறிவிப்பாளர்) கூறினார்: "அவர்கள் மேய்ப்பாளரைக் கொன்றார்கள்."