நபி (ஸல்) அவர்கள் தமது ஒட்டகத்தின் மீது அமர்ந்திருந்தார்கள்; ஒரு மனிதர் அதன் மூக்கணாங்கயிற்றை - அல்லது லகானை - பிடித்திருந்தார். அப்போது நபி (ஸல்) அவர்கள், "இது எந்த நாள்?" என்று கேட்டார்கள். அதற்குரிய பெயரல்லாத வேறு பெயரை அதற்கு அவர்கள் சூட்டுவார்களோ என்று நாங்கள் எண்ணுமளவுக்கு மௌனமாக இருந்தோம். நபி (ஸல்) அவர்கள், "இது நஹ்ருடைய (குர்பானி கொடுக்கும்) நாள் அல்லவா?" என்று கேட்டார்கள். நாங்கள், "ஆம்" என்று பதிலளித்தோம்.
பிறகு, "இது எந்த மாதம்?" என்று கேட்டார்கள். அதற்குரிய பெயரல்லாத வேறு பெயரை அதற்கு அவர்கள் சூட்டுவார்களோ என்று நாங்கள் எண்ணுமளவுக்கு மௌனமாக இருந்தோம். நபி (ஸல்) அவர்கள், "இது துல்ஹஜ் மாதம் அல்லவா?" என்று கேட்டார்கள். நாங்கள், "ஆம்" என்று பதிலளித்தோம்.
பிறகு அவர்கள் கூறினார்கள்: "நிச்சயமாக, உங்களின் இந்த நகரத்தில் (மக்காவில்), உங்களின் இந்த மாதத்தில் (துல்ஹஜ் மாதத்தில்), உங்களின் இந்த நாள் (நஹ்ருடைய நாள் - துல்ஹஜ் 10) எவ்வாறு புனிதமானதோ, அவ்வாறே உங்கள் இரத்தங்களும், உங்கள் செல்வங்களும், உங்கள் மானங்களும் உங்களுக்குள் புனிதமானவையாகும். (இங்கு) முன்னிலையாகி இருப்பவர், வராதவருக்கு (இச்செய்தியை) எத்திவைக்கட்டும். ஏனெனில், முன்னிலையாகி இருப்பவர், தம்மைவிட (இச்செய்தியை) நன்கு விளங்கிக்கொள்பவரிடம் அதை எத்திவைக்கக்கூடும்."