حَدَّثَنَا مُسَدَّدٌ، عَنْ عَبْدِ الْوَارِثِ، عَنِ الْجَعْدِ، عَنْ أَبِي رَجَاءٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ مَنْ كَرِهَ مِنْ أَمِيرِهِ شَيْئًا فَلْيَصْبِرْ، فَإِنَّهُ مَنْ خَرَجَ مِنَ السُّلْطَانِ شِبْرًا مَاتَ مِيتَةً جَاهِلِيَّةً .
இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், "யார் தன்னுடைய ஆட்சியாளரிடமிருந்து அவர் விரும்பாத ஒன்றைக் காண்கிறாரோ அவர் பொறுமையாக இருக்கட்டும். ஏனெனில், எவர் ஆட்சியாளருக்கு சிறிதளவேனும் (சிறிதளவு = ஒரு சாண்) கீழ்ப்படியாமல் போகிறாரோ, அவர் இஸ்லாத்திற்கு முந்தைய அறியாமைக் காலத்தில் இறந்தவர்களைப் போன்று இறப்பார். (அதாவது கீழ்ப்படியாத பாவிகளாக)."
حَدَّثَنَا أَبُو النُّعْمَانِ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنِ الْجَعْدِ أَبِي عُثْمَانَ، حَدَّثَنِي أَبُو رَجَاءٍ الْعُطَارِدِيُّ، قَالَ سَمِعْتُ ابْنَ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ مَنْ رَأَى مِنْ أَمِيرِهِ شَيْئًا يَكْرَهُهُ فَلْيَصْبِرْ عَلَيْهِ، فَإِنَّهُ مَنْ فَارَقَ الْجَمَاعَةَ شِبْرًا فَمَاتَ، إِلاَّ مَاتَ مِيتَةً جَاهِلِيَّةً .
இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், "எவரேனும் தமது ஆட்சியாளரிடமிருந்து தாம் விரும்பாத ஏதேனும் ஒன்றைக் கண்டால், அவர் பொறுமையாக இருக்கட்டும். ஏனெனில், எவரொருவர் முஸ்லிம்களின் கூட்டமைப்பிலிருந்து ஒரு சாண் அளவேனும் பிரிந்து, பின்னர் (அந்த நிலையில்) மரணமடைந்தால், அவர் இஸ்லாத்திற்கு முந்தைய அறியாமைக் காலத்தில் (கலகக்காரர்களான பாவிகளாக) மரணித்தவர்களைப் போன்று மரணிப்பார். (ஃபத்ஹுல் பாரி பக்கம் 112, பாகம் 16)"
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், "யாராவது ஒருவர் தனது முஸ்லிம் ஆட்சியாளர் தனக்கு பிடிக்காத ஒன்றைச் செய்வதைக் கண்டால், அவர் பொறுமையாக இருக்க வேண்டும், ஏனெனில், யாராவது முஸ்லிம் ஜமாஅத்திலிருந்து ஒரு சாண் அளவு பிரிந்து சென்று பின்னர் மரணித்தால், அவர் இஸ்லாத்திற்கு முந்தைய அறியாமைக் காலத்தில் (கலகக்கார பாவிகளாக) இறந்தவர்களைப் போன்று மரணிப்பார்." (ஹதீஸ் எண் 176 மற்றும் 177 பார்க்கவும்)