حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ أَبِي الْحُسَيْنِ، حَدَّثَنَا عُمَرُ بْنُ حَفْصٍ، حَدَّثَنَا أَبِي، عَنْ عَاصِمٍ، عَنْ عَامِرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ لاَ أَدْرِي أَنَهَى عَنْهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم مِنْ أَجْلِ أَنَّهُ كَانَ حَمُولَةَ النَّاسِ، فَكَرِهَ أَنْ تَذْهَبَ حَمُولَتُهُمْ، أَوْ حَرَّمَهُ فِي يَوْمِ خَيْبَرَ، لَحْمَ الْحُمُرِ الأَهْلِيَّةِ.
இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
கழுதைகள் மக்களின் சுமை சுமக்கும் பிராணிகளாக இருந்ததனாலும், மக்களின் போக்குவரத்துச் சாதனங்கள் இல்லாமலாகிவிடுவதை நபி (ஸல்) அவர்கள் விரும்பாததனாலும், (தற்காலிகமாக) கழுதை இறைச்சியை உண்பதை அவர்கள் தடைசெய்தார்களா, அல்லது கைபர் தினத்தன்று நிரந்தரமாக அதைத் தடைசெய்தார்களா என்பது எனக்குத் தெரியாது.