حَدَّثَنَا أَبُو النُّعْمَانِ، حَدَّثَنَا الْمُعْتَمِرُ بْنُ سُلَيْمَانَ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي عُثْمَانَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي بَكْرٍ ـ رضى الله عنهما ـ قَالَ كُنَّا مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم ثَلاَثِينَ وَمِائَةً فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " هَلْ مَعَ أَحَدٍ مِنْكُمْ طَعَامٌ ". فَإِذَا مَعَ رَجُلٍ صَاعٌ مِنْ طَعَامٍ أَوْ نَحْوُهُ، فَعُجِنَ ثُمَّ جَاءَ رَجُلٌ مُشْرِكٌ مُشْعَانٌّ طَوِيلٌ بِغَنَمٍ يَسُوقُهَا، فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " بَيْعًا أَمْ عَطِيَّةً ـ أَوْ قَالَ ـ أَمْ هِبَةً ". قَالَ لاَ، بَلْ بَيْعٌ. فَاشْتَرَى مِنْهُ شَاةً، فَصُنِعَتْ وَأَمَرَ النَّبِيُّ صلى الله عليه وسلم بِسَوَادِ الْبَطْنِ أَنْ يُشْوَى، وَايْمُ اللَّهِ مَا فِي الثَّلاَثِينَ وَالْمِائَةِ إِلاَّ قَدْ حَزَّ النَّبِيُّ صلى الله عليه وسلم لَهُ حُزَّةً مِنْ سَوَادِ بَطْنِهَا، إِنْ كَانَ شَاهِدًا أَعْطَاهَا إِيَّاهُ، وَإِنْ كَانَ غَائِبًا خَبَأَ لَهُ، فَجَعَلَ مِنْهَا قَصْعَتَيْنِ، فَأَكَلُوا أَجْمَعُونَ، وَشَبِعْنَا، فَفَضَلَتِ الْقَصْعَتَانِ، فَحَمَلْنَاهُ عَلَى الْبَعِيرِ. أَوْ كَمَا قَالَ.
அப்துர் ரஹ்மான் பின் அபீ பக்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் நூற்றமுப்பது பேர் இருந்தோம். நபி (ஸல்) அவர்கள், "உங்கள் எவரிடமேனும் உணவு உள்ளதா?" என்று கேட்டார்கள். ஒரு மனிதரிடம் ஒரு 'ஸாவு' அளவு அல்லது அதைப் போன்ற அளவு உணவுப் பொருள் இருந்தது. உடனே அது (மாவாகப்) பிசையப்பட்டது.
அப்போது தலைவிரி கோலத்துடன், நெடிய உருவம் கொண்ட ஓர் இணைவைப்பாளர் ஆடுகளை ஓட்டிக்கொண்டு வந்தார். நபி (ஸல்) அவர்கள் அவரிடம், "விற்பனைக்கா? அல்லது நன்கொடையா? -அல்லது அன்பளிப்பா?-" என்று கேட்டார்கள். அதற்கு அவர், "இல்லை; விற்பனைக்குத்தான்" என்றார். அவரிடமிருந்து ஓர் ஆட்டை நபி (ஸல்) அவர்கள் விலைக்கு வாங்கினார்கள். அது சமைக்கப்பட்டது.
நபி (ஸல்) அவர்கள் அதன் ஈரலை (வயிற்றுப் பகுதியை) வாட்டும்படி கட்டளையிட்டார்கள். அல்லாஹ்வின் மீது ஆணையாக! அந்த நூற்று முப்பது பேரில் ஒவ்வொருவருக்கும் நபி (ஸல்) அவர்கள் அந்த ஈரலிலிருந்து ஒரு துண்டை வெட்டிக் கொடுக்காமல் விடவில்லை. அங்கிருந்தவருக்குக் கொடுத்தார்கள்; வராதவருக்கு எடுத்து வைத்தார்கள்.
பிறகு, அதிலிருந்து இரண்டு பெரிய பாத்திரங்களில் (உணவை) வைத்தார்கள். அனைவரும் உண்டோம்; வயிறு நிரம்பினோம். இரண்டு பாத்திரங்களிலும் உணவு மீதமிருந்தது. அதை ஒட்டகத்தின் மீது ஏற்றினோம். (அல்லது அது போன்ற கருத்தைக் கூறினார்கள்).
حَدَّثَنَا مُوسَى، حَدَّثَنَا مُعْتَمِرٌ، عَنْ أَبِيهِ، قَالَ وَحَدَّثَ أَبُو عُثْمَانَ، أَيْضًا عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي بَكْرٍ ـ رضى الله عنهما ـ قَالَ كُنَّا مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم ثَلاَثِينَ وَمِائَةً، فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " هَلْ مَعَ أَحَدٍ مِنْكُمْ طَعَامٌ ". فَإِذَا مَعَ رَجُلٍ صَاعٌ مِنْ طَعَامٍ أَوْ نَحْوُهُ، فَعُجِنَ، ثُمَّ جَاءَ رَجُلٌ مُشْرِكٌ مُشْعَانٌّ طَوِيلٌ بِغَنَمٍ يَسُوقُهَا فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " أَبَيْعٌ أَمْ عَطِيَّةٌ أَوْ ـ قَالَ ـ هِبَةٌ ". قَالَ لاَ بَلْ بَيْعٌ. قَالَ فَاشْتَرَى مِنْهُ شَاةً فَصُنِعَتْ، فَأَمَرَ نَبِيُّ اللَّهِ صلى الله عليه وسلم بِسَوَادِ الْبَطْنِ يُشْوَى، وَايْمُ اللَّهِ مَا مِنَ الثَّلاَثِينَ وَمِائَةٍ إِلاَّ قَدْ حَزَّ لَهُ حُزَّةً مِنْ سَوَادِ بَطْنِهَا، إِنْ كَانَ شَاهِدًا أَعْطَاهَا إِيَّاهُ، وَإِنْ كَانَ غَائِبًا خَبَأَهَا لَهُ، ثُمَّ جَعَلَ فِيهَا قَصْعَتَيْنِ فَأَكَلْنَا أَجْمَعُونَ وَشَبِعْنَا، وَفَضَلَ فِي الْقَصْعَتَيْنِ، فَحَمَلْتُهُ عَلَى الْبَعِيرِ. أَوْ كَمَا قَالَ.
அப்துர் ரஹ்மான் பின் அபூபக்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் நூற்று முப்பது பேர் நபி (ஸல்) அவர்களுடன் இருந்தோம். நபி (ஸல்) அவர்கள், "உங்களில் எவரிடமேனும் உணவு உள்ளதா?" என்று கேட்டார்கள். ஒருவரிடம் ஒரு ஸாவு உணவு அல்லது அதைப் போன்ற ஒன்று இருந்தது. உடனே அது (மாவாகப்) பிசையப்பட்டது. பிறகு தலைமுடி கலைந்த, உயரமான ஓர் இணைவைப்பாளர் ஆடுகளை ஓட்டிக்கொண்டு வந்தார். நபி (ஸல்) அவர்கள், "(இவை) விற்பதற்கா? அல்லது நன்கொடையா? அல்லது அன்பளிப்பா?" என்று கேட்டார்கள். அவர் "இல்லை; விற்பதற்குத்தான்" என்றார். அவரிடமிருந்து ஓர் ஆட்டை வாங்கினார்கள். அது சமைக்கப்பட்டது. நபி (ஸல்) அவர்கள் (ஆட்டின்) ஈரல் உள்ளிட்ட வயிற்றுப் பகுதிகளை வாட்டும்படி உத்தரவிட்டார்கள். அல்லாஹ்வின் மீது ஆணையாக! அந்த நூற்று முப்பது பேரில் எவரும் விடுபடாத வகையில், அதன் ஈரல் உள்ளிட்ட வயிற்றுப் பகுதியிலிருந்து ஒரு துண்டை நபி (ஸல்) அவர்கள் வெட்டிக்கொடுத்தார்கள். அங்கிருந்தவருக்கு (அப்போதே) கொடுத்தார்கள். வராதவருக்கு அவருக்கான பங்கை எடுத்து வைத்தார்கள். பிறகு (சமைக்கப்பட்ட) இறைச்சியை இரண்டு தட்டுகளில் வைத்தார்கள். நாங்கள் அனைவரும் சாப்பிட்டோம்; வயிறு நிரம்பினோம். அந்த இரண்டு தட்டுகளிலும் உணவு மீதமானது. அதை நான் ஒட்டகத்தின் மீது ஏற்றிக்கொண்டேன்.