அனஸ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உபை (ரழி) அவர்களிடம், "நான் உமக்கு ஓதிக் காட்டுமாறு அல்லாஹ் எனக்குக் கட்டளையிட்டான்" என்று கூறினார்கள்.
அவர், "அல்லாஹ் என் பெயரைத் தங்களிடம் குறிப்பிட்டானா?" என்று கேட்டார்.
அதற்கு நபி (ஸல்) அவர்கள், "அல்லாஹ் உமது பெயரை என்னிடம் குறிப்பிட்டான்" என்று கூறினார்கள்.
இதைக் கேட்டு உபை (ரழி) அவர்கள் அழுதார்கள்.
حَدَّثَنَا هُدْبَةُ بْنُ خَالِدٍ الأَزْدِيُّ، حَدَّثَنَا هَمَّامٌ، عَنْ قَتَادَةَ، قَالَ قُلْنَا لأَنَسٍ - يَعْنِي ابْنَ مَالِكٍ - أَىُّ اللِّبَاسِ كَانَ أَحَبَّ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم أَوْ أَعْجَبَ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ الْحِبَرَةُ .
கதாதா அவர்கள் அறிவித்தார்கள்:
நாங்கள் அனஸ் இப்னு மாலிக் (ரழி) அவர்களிடம், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு மிகவும் விருப்பமான ஆடை எது? அல்லது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அணிய விரும்பிய ஆடை எது?” என்று கேட்டோம். அதற்கு அவர்கள், “கோடுகளுடைய சால்வைகளே (ஹிப்ரா)” என்று பதிலளித்தார்கள்.