இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

799 aஸஹீஹ் முஸ்லிம்
حَدَّثَنَا هَدَّابُ بْنُ خَالِدٍ، حَدَّثَنَا هَمَّامٌ، حَدَّثَنَا قَتَادَةُ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ لأُبَىٍّ ‏"‏ إِنَّ اللَّهَ أَمَرَنِي أَنْ أَقْرَأَ عَلَيْكَ ‏"‏ ‏.‏ قَالَ آللَّهُ سَمَّانِي لَكَ قَالَ ‏"‏ اللَّهُ سَمَّاكَ لِي ‏"‏ ‏.‏ قَالَ فَجَعَلَ أُبَىٌّ يَبْكِي ‏.‏
அனஸ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உபை (ரழி) அவர்களிடம், "நான் உமக்கு ஓதிக் காட்டுமாறு அல்லாஹ் எனக்குக் கட்டளையிட்டான்" என்று கூறினார்கள்.
அவர், "அல்லாஹ் என் பெயரைத் தங்களிடம் குறிப்பிட்டானா?" என்று கேட்டார்.
அதற்கு நபி (ஸல்) அவர்கள், "அல்லாஹ் உமது பெயரை என்னிடம் குறிப்பிட்டான்" என்று கூறினார்கள்.
இதைக் கேட்டு உபை (ரழி) அவர்கள் அழுதார்கள்.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
5367சுனனுந் நஸாயீ
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ مَعْمَرٍ، قَالَ حَدَّثَنَا حَبَّانُ، قَالَ حَدَّثَنَا هَمَّامٌ، قَالَ حَدَّثَنَا قَتَادَةُ، قَالَ حَدَّثَنَا أَنَسٌ، أَنَّ نَعْلَ، رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ لَهَا قِبَالاَنِ ‏.‏
அனஸ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் காலணிகளுக்கு இரண்டு வார்ப்பட்டைகள் இருந்தன.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ் (தாருஸ்ஸலாம் பதிப்பு)
4060சுனன் அபூதாவூத்
حَدَّثَنَا هُدْبَةُ بْنُ خَالِدٍ الأَزْدِيُّ، حَدَّثَنَا هَمَّامٌ، عَنْ قَتَادَةَ، قَالَ قُلْنَا لأَنَسٍ - يَعْنِي ابْنَ مَالِكٍ - أَىُّ اللِّبَاسِ كَانَ أَحَبَّ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم أَوْ أَعْجَبَ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ الْحِبَرَةُ ‏.‏
கதாதா அவர்கள் அறிவித்தார்கள்:

நாங்கள் அனஸ் இப்னு மாலிக் (ரழி) அவர்களிடம், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு மிகவும் விருப்பமான ஆடை எது? அல்லது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அணிய விரும்பிய ஆடை எது?” என்று கேட்டோம். அதற்கு அவர்கள், “கோடுகளுடைய சால்வைகளே (ஹிப்ரா)” என்று பதிலளித்தார்கள்.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ் (அல்-அல்பானீ)
صحيح (الألباني)