நபி (ஸல்) அவர்களின் மனைவியான ஆயிஷா (ரழி) அவர்கள் கூறினார்கள்:
"எங்களிடம் ஒரு திரை இருந்தது; அதில் பறவையின் உருவம் இருந்தது. ஒருவர் (வீட்டிற்குள்) நுழையும்போது அவருக்கு எதிர்ப்படும் விதத்தில் அது இருந்தது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், 'ஆயிஷா! இதை மாற்றிவிடு. ஏனெனில் நான் உள்ளே வந்து அதைப் பார்க்கும் ஒவ்வொரு முறையும், அது எனக்கு இவ்வுலகை நினைவூட்டுகிறது' என்று கூறினார்கள்."
மேலும் அவர்கள் கூறினார்கள்: "எங்களிடம் கரையுடைய ஒரு மென்மையான போர்வை இருந்தது. அதை நாங்கள் அணிந்து வந்தோம்; அதை நாங்கள் வெட்டவில்லை."