أَخْبَرَنَا وَهْبُ بْنُ بَيَانٍ، قَالَ حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، قَالَ حَدَّثَنَا عَمْرٌو، قَالَ حَدَّثَنَا بُكَيْرٌ، قَالَ حَدَّثَنِي عَبْدُ الرَّحْمَنِ بْنُ الْقَاسِمِ، أَنَّ أَبَاهُ، حَدَّثَهُ عَنْ عَائِشَةَ، أَنَّهَا نَصَبَتْ سِتْرًا فِيهِ تَصَاوِيرُ فَدَخَلَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَنَزَعَهُ فَقَطَعَتْهُ وِسَادَتَيْنِ . قَالَ رَجُلٌ فِي الْمَجْلِسِ حِينَئِذٍ يُقَالُ لَهُ رَبِيعَةُ بْنُ عَطَاءٍ أَنَا سَمِعْتُ أَبَا مُحَمَّدٍ - يَعْنِي الْقَاسِمَ - عَنْ عَائِشَةَ قَالَتْ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَرْتَفِقُ عَلَيْهِمَا .
ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவித்ததாவது:
அவர்கள் உருவங்கள் உள்ள ஒரு திரைச்சீலையைத் தொங்கவிட்டிருந்தார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (வீட்டிற்குள்) நுழைந்து அதை அகற்றிவிட்டார்கள். ஆகவே, அவர்கள் அதை வெட்டி இரண்டு தலையணைகளைச் செய்தார்கள்.
அப்போது அந்தச் சபையில் இருந்த ரபீஆ பின் அதா என்று சொல்லப்படுபவர் கூறினார்: "அபூ முஹம்மது - அதாவது அல்-காசிம் - அவர்கள், ஆயிஷா (ரழி) அவர்கள் வாயிலாக, 'அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவ்விரண்டின் மீதும் சாய்ந்து கொள்பவர்களாக இருந்தார்கள்' என்று கூறியதாக அறிவிக்க நான் கேட்டேன்."