وعنه أن النبي صلى الله عليه وسلم : مر عليه حمار قد وُسم في وجهه، فقال: لعن الله الذي وسمه ((رواه مسلم. وفي رواية لمسلم أيضًا: نهى رسول الله صلى الله عليه وسلم عن الضرب في الوجه، وعن الوسم في الوجه)).
இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் கூறினார்கள்:
நபி (ஸல்) அவர்களுக்கு முன்னால் முகத்தில் சூடு போடப்பட்ட ஒரு கழுதை கடந்து சென்றது. அப்போது அவர்கள், "அதற்கு (அதாவது, அந்தக் கழுதையின்) முகத்தில் சூடு போட்டவனை அல்லாஹ் சபிக்கட்டும்" என்று கூறினார்கள்.
(இதை) முஸ்லிம் அறிவித்தார்.
முஸ்லிமில் உள்ள மற்றொரு அறிவிப்பு வருமாறு: "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முகத்தில் அடிப்பதையும், (மிருகங்களின்) முகத்தில் சூடு போடுவதையும் (முற்றிலும்) தடை செய்தார்கள்."