இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

2128 bஸஹீஹ் முஸ்லிம்
حَدَّثَنِي زُهَيْرُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ سُهَيْلٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ
قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ ‏ صِنْفَانِ مِنْ أَهْلِ النَّارِ لَمْ أَرَهُمَا قَوْمٌ مَعَهُمْ سِيَاطٌ
كَأَذْنَابِ الْبَقَرِ يَضْرِبُونَ بِهَا النَّاسَ وَنِسَاءٌ كَاسِيَاتٌ عَارِيَاتٌ مُمِيلاَتٌ مَائِلاَتٌ رُءُوسُهُنَّ
كَأَسْنِمَةِ الْبُخْتِ الْمَائِلَةِ لاَ يَدْخُلْنَ الْجَنَّةَ وَلاَ يَجِدْنَ رِيحَهَا وَإِنَّ رِيحَهَا لَتُوجَدُ مِنْ مَسِيرَةِ
كَذَا وَكَذَا ‏ ‏ ‏.‏
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"நரகவாசிகளில் இரண்டு வகையினர் உள்ளனர்; அவர்களை நான் (இதுவரை) கண்டதில்லை. (அவர்களில் ஒரு வகையினரிடம்) மாட்டின் வாலைப் போன்ற சாட்டைகள் இருக்கும்; அவற்றைக் கொண்டு அவர்கள் மக்களை அடிப்பார்கள். (இரண்டாவது வகையினர்) பெண்கள்; ஆடை அணிந்தும் நிர்வாணமாக இருப்பார்கள்; (பிறரைத் தவறான வழியின் பால்) சாய்ப்பார்கள், (தாம் தவறான வழியின் பால்) சாய்ந்திருப்பார்கள்; அவர்களுடைய தலைகள், சாய்ந்திருக்கும் ஒட்டகங்களின் திமில்களைப் போன்று இருக்கும். அவர்கள் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்கள்; அதன் வாடையைக்கூட நுகர மாட்டார்கள். நிச்சயமாக அதன் வாடையோ, இவ்வளவு இவ்வளவு பயணத் தொலைவிலிருந்து உணரப்படும்."
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح