அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"நரகவாசிகளில் இரண்டு வகையினர் உள்ளனர்; அவர்களை நான் (இதுவரை) கண்டதில்லை. (அவர்களில் ஒரு வகையினரிடம்) மாட்டின் வாலைப் போன்ற சாட்டைகள் இருக்கும்; அவற்றைக் கொண்டு அவர்கள் மக்களை அடிப்பார்கள். (இரண்டாவது வகையினர்) பெண்கள்; ஆடை அணிந்தும் நிர்வாணமாக இருப்பார்கள்; (பிறரைத் தவறான வழியின் பால்) சாய்ப்பார்கள், (தாம் தவறான வழியின் பால்) சாய்ந்திருப்பார்கள்; அவர்களுடைய தலைகள், சாய்ந்திருக்கும் ஒட்டகங்களின் திமில்களைப் போன்று இருக்கும். அவர்கள் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்கள்; அதன் வாடையைக்கூட நுகர மாட்டார்கள். நிச்சயமாக அதன் வாடையோ, இவ்வளவு இவ்வளவு பயணத் தொலைவிலிருந்து உணரப்படும்."