இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

286aஸஹீஹ் முஸ்லிம்
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَأَبُو كُرَيْبٍ قَالاَ حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ نُمَيْرٍ، حَدَّثَنَا هِشَامٌ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، زَوْجِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ يُؤْتَى بِالصِّبْيَانِ فَيُبَرِّكُ عَلَيْهِمْ وَيُحَنِّكُهُمْ فَأُتِيَ بِصَبِيٍّ فَبَالَ عَلَيْهِ فَدَعَا بِمَاءٍ فَأَتْبَعَهُ بَوْلَهُ وَلَمْ يَغْسِلْهُ ‏.‏
தூதர் (ஸல்) அவர்களின் மனைவி ஆயிஷா (ரழி) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (சிறுக்) குழந்தைகள் கொண்டு வரப்படுவார்கள். அவர்கள் (ஸல்) அக்குழந்தைகளுக்காக (பரகத் வேண்டி) துஆச் செய்வார்கள்; மேலும் (பேரீச்சம்பழம் போன்றவற்றை மென்று) அக்குழந்தைகளின் வாயில் பூசி விடுவார்கள். (ஒரு முறை) அவர்களிடம் ஒரு சிறுவன் கொண்டுவரப்பட்டான்; அவன் அவர்கள் மீது சிறுநீர் கழித்துவிட்டான். எனவே, அவர்கள் (ஸல்) தண்ணீர் வரவழைத்து, அதைச் சிறுநீரின் மீது ஊற்றினார்களே தவிர, அதைக் (கசக்கிக்) கழுவவில்லை.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
5106சுனன் அபூதாவூத்
حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ فُضَيْلٍ، ح وَحَدَّثَنَا يُوسُفُ بْنُ مُوسَى، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، رضى الله عنها قَالَتْ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يُؤْتَى بِالصِّبْيَانِ فَيَدْعُو لَهُمْ بِالْبَرَكَةِ - زَادَ يُوسُفُ - وَيُحَنِّكُهُمْ وَلَمْ يَذْكُرْ بِالْبَرَكَةِ ‏.‏
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்:
“அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சிறுவர்கள் கொண்டு வரப்படுவார்கள். அவர்கள் அச்சிறுவர்களுக்காகப் ‘பரக்கத்’ (அருள் வளம்) வேண்டிப் பிரார்த்திப்பார்கள்.”
யூசுஃப் (தம் அறிவிப்பில்), “மேலும் அவர்களுக்குத் தஹ்னீக் செய்வார்கள் (மென்று ஊட்டுவார்கள்)” என்று அதிகப்படுத்தினார். ஆனால் அவர் ‘பரக்கத்’ பற்றி குறிப்பிடவில்லை.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ் (அல்-அல்பானீ)
صحيح (الألباني)