இவர்கள் அனைவரும் ஷுஅபா (ரஹ்) அவர்கள் வழியாக இதே அறிவிப்பாளர் தொடரில் அறிவிக்கின்றனர். வஹ்ப் பின் ஜரீர் (ரஹ்) அவர்களின் ஹதீஸில், '(ஆயத்துல் ஃபராயிள் – இஸ்லாமிய பரம்பரைச் சட்டங்களை விளக்கும்) பாகப்பிரிவினைக்கான வசனம் அருளப்பெற்றது' என்றுள்ளது. நழ்ர் (ரஹ்) மற்றும் அல்கதீ (ரஹ்) ஆகியோரின் ஹதீஸில், '(ஆயத்துல் ஃபர்ள் – கடமையாக்கப்பட்ட) வசனம் அருளப்பெற்றது' என்றுள்ளது. இவர்கள் எவருடைய அறிவிப்பிலும், 'ஷுஅபா (ரஹ்) அவர்கள் இப்னு முன்கதிர் (ரஹ்) அவர்களிடம் கூறியது' எனும் குறிப்பு இடம்பெறவில்லை.