அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ ‘அத்வா’ (தொற்றுநோய்) இல்லை; துர்ச்சகுனம் இல்லை; ‘ஹாமா’ இல்லை; ‘ஸஃபர்’ இல்லை. மேலும், சிங்கத்திடமிருந்து (தப்பி) ஓடுவதைப் போன்று தொழுநோயாளியிடமிருந்து நீ ஓடுவாயாக.”
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தொற்று நோய் என்பது கிடையாது, ஹாமா என்பதும் கிடையாது, நட்சத்திரத்தால் மழை பொழியும் என்பதும் கிடையாது, ஸஃபர் என்பதும் கிடையாது.
حَدَّثَنَا الْقَعْنَبِيُّ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ، - يَعْنِي ابْنَ مُحَمَّدٍ - عَنِ الْعَلاَءِ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم لاَ عَدْوَى وَلاَ هَامَةَ وَلاَ نَوْءَ وَلاَ صَفَرَ .
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தொற்றுநோய் கிடையாது, ஹாமஹ் என்பதும் இல்லை, நட்சத்திரங்களால் மழை பொழியும் என்பதும் இல்லை, மேலும் பசித்த வயிற்றில் பாம்பு என்பதும் இல்லை.