இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

2564 cஸஹீஹ் முஸ்லிம்
حَدَّثَنَا عَمْرٌو النَّاقِدُ، حَدَّثَنَا كَثِيرُ بْنُ هِشَامٍ، حَدَّثَنَا جَعْفَرُ بْنُ بُرْقَانَ، عَنْ يَزِيدَ بْنِ،
الأَصَمِّ عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ ‏ إِنَّ اللَّهَ لاَ يَنْظُرُ إِلَى
صُوَرِكُمْ وَأَمْوَالِكُمْ وَلَكِنْ يَنْظُرُ إِلَى قُلُوبِكُمْ وَأَعْمَالِكُمْ ‏ ‏ ‏.‏
அபூஹுரைரா (ரழி) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக அறிவித்தார்கள்:

நிச்சயமாக அல்லாஹ் உங்கள் தோற்றங்களையும் உங்கள் செல்வங்களையும் பார்ப்பதில்லை; மாறாக அவன் உங்கள் உள்ளங்களையும் உங்கள் செயல்களையும் பார்க்கிறான்.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
4143சுனன் இப்னுமாஜா
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ سِنَانٍ، حَدَّثَنَا كَثِيرُ بْنُ هِشَامٍ، حَدَّثَنَا جَعْفَرُ بْنُ بُرْقَانَ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ الأَصَمِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ، رَفَعَهُ إِلَى النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ قَالَ ‏ ‏ إِنَّ اللَّهَ لاَ يَنْظُرُ إِلَى صُوَرِكُمْ وَأَمْوَالِكُمْ وَلَكِنْ إِنَّمَا يَنْظُرُ إِلَى أَعْمَالِكُمْ وَقُلُوبِكُمْ ‏ ‏ ‏.‏
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள், நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அறிவிக்கிறார்கள்:
“அல்லாஹ் உங்கள் உருவங்களையோ உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை, மாறாக அவன் உங்கள் செயல்களையும் உங்கள் உள்ளங்களையுமே பார்க்கிறான்.”
ஹதீஸ் தரம் : ஸஹீஹ் (தாருஸ்ஸலாம் பதிப்பு)
7ரியாதுஸ் ஸாலிஹீன்
وعن أبي هريرة عبد الرحمن بن صخر رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم‏:‏
‏ ‏ إن الله لا ينظر إلى أجسامكم ، ولا إلى صوركم، ولكن ينظر إلى قلوبكم وأعمالكم‏ ‏ ‏(‏‏(‏رواه مسلم‏)‏‏)‏‏.‏
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "நிச்சயமாக அல்லாஹ் உங்கள் உடல்களையோ, உங்கள் உருவங்களையோ பார்ப்பதில்லை. மாறாக, அவன் உங்கள் உள்ளங்களையும், உங்கள் செயல்களையும் பார்க்கிறான்".

முஸ்லிம்.

1570ரியாதுஸ் ஸாலிஹீன்
وعن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال‏:‏ ‏"‏إياكم والظن، فإن الظن أكذب الحديث، ولا تحسسوا، ولا تجسسوا ولا تنافسوا، ولا تحاسدوا، ولا تباغضوا، ولا تدابروا، وكونوا عباد الله إخوانًا كما أمركم‏.‏ المسلم أخو المسلم، لا يظلمه، ولا يخذله ولا يحقره‏.‏ التقوى ههنا، ‏"‏ ويشير إلى صدره ‏"‏بحسب امرئ من الشر أن يحقر أخاه المسلم، كل المسلم على المسلم حرام‏:‏ دمه، وعرضه، وماله، إن الله لا ينظر إلى أجسادكم، ولا إلى صوركم، ولكن ينظر إلى قلوبكم وأعمالكم‏"‏‏.‏ وفي رواية‏:‏ ‏"‏لا تحاسدوا، ولا تباغضوا، ولا تجسسوا، ولا تحسسوا ولا تناجشوا وكونوا عباد الله إخوانًا‏"‏‏.‏
وفي رواية‏:‏ ‏"‏لا تقاطعوا، ولا تدابروا، ولا تباغضوا ولا تحاسدوا، وكونوا عباد الله إخوانًا‏"‏‏.‏ وفي رواية‏:‏ ‏"‏لا تهاجروا ولا يبع بعضكم على بيع بعض‏"‏‏.‏
‏(‏‏(‏رواه مسلم بكل هذه الروايات، وروى البخاري أكثرها‏)‏‏)‏‏.‏
அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "சந்தேகப்படுவதை விட்டும் உங்களை எச்சரித்துக் கொள்ளுங்கள். ஏனெனில், சந்தேகம் கொள்வது பேச்சுகளிலேயே மிகப் பொய்யானதாகும். (பிறர் குறைகளைத்) துருவித் துருவி ஆராயாதீர்கள்; உளவு பார்க்காதீர்கள்; (உலகாதாய விஷயங்களில்) ஒருவருக்கொருவர் போட்டியிட்டுக் கொள்ளாதீர்கள்; ஒருவர் மீது ஒருவர் பொறாமை கொள்ளாதீர்கள்; ஒருவர் மீது ஒருவர் பகைமை பாராட்டாதீர்கள்; (பிணங்கிக்கொண்டு) ஒருவருக்கொருவர் முகத்தைத் திருப்பிக் கொள்ளாதீர்கள். அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிட்டது போன்று, அல்லாஹ்வின் அடியார்களே! (நீங்கள் அனைவரும்) சகோதரர்களாக இருங்கள்.

ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமின் சகோதரன் ஆவான். அவன் தன் சகோதரனுக்கு அநீதி இழைக்கமாட்டான்; அவனைக் கைவிடமாட்டான்; அவனை இழிவாகக் கருதமாட்டான். இறையச்சம் இங்கே இருக்கிறது! - என்று (தங்களது நெஞ்சை நோக்கி) சுட்டிக்காட்டினார்கள். ஒரு மனிதன் தன் முஸ்லிம் சகோதரனை இழிவாகக் கருதுவதே அவனது தீமைக்குப் போதுமானதாகும். ஒவ்வொரு முஸ்லிமுக்கும் மற்றொரு முஸ்லிமின் இரத்தம், மானம், செல்வம் ஆகியவை (பாதிக்கக் கூடாத) புனிதமானவைகளாகும். நிச்சயமாக அல்லாஹ் உங்கள் உடல்களையோ, உங்கள் தோற்றங்களையோ பார்ப்பதில்லை. மாறாக, உங்கள் உள்ளங்களையும் செயல்களையுமே பார்க்கிறான்."

மற்றொரு அறிவிப்பில்: "ஒருவர் மீது ஒருவர் பொறாமை கொள்ளாதீர்கள்; பகைமை பாராட்டாதீர்கள்; உளவு பார்க்காதீர்கள்; (குறைகளைத்) துருவி ஆராயாதீர்கள்; (பொருட்களின் விலையை ஏற்றும் நோக்கில் பொய்யாக) ஏலம் கேட்காதீர்கள்; அல்லாஹ்வின் அடியார்களே! சகோதரர்களாக இருங்கள்" என்றுள்ளது.

மற்றொரு அறிவிப்பில்: "ஒருவருக்கொருவர் உறவைத் துண்டித்துக்கொள்ளாதீர்கள்; (பிணங்கிக்கொண்டு) முகத்தைத் திருப்பிக் கொள்ளாதீர்கள்; பகைமை பாராட்டாதீர்கள்; பொறாமை கொள்ளாதீர்கள். அல்லாஹ்வின் அடியார்களே! சகோதரர்களாக இருங்கள்" என்றுள்ளது.

வேறொரு அறிவிப்பில்: "ஒருவருக்கொருவர் பேசாமல் விலகி இருக்காதீர்கள். ஒருவர் வியாபாரம் பேசிக்கொண்டிருக்கும்போது மற்றவர் குறுக்கே வியாபாரம் பேசாதீர்கள்" என்றுள்ளது.

(முஸ்லிம் இந்த அனைத்து அறிவிப்புகளையும் பதிவு செய்துள்ளார்கள்; புகாரி இதில் பெரும்பகுதியைப் பதிவு செய்துள்ளார்கள்).