அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
“மக்களின் செயல்கள் ஒவ்வொரு வாரமும் (அதாவது, ஒவ்வொரு ஏழு நாட்களிலும்) திங்கள் மற்றும் வியாழன் என இரண்டு முறை (அல்லாஹ்விடம்) சமர்ப்பிக்கப்படுகின்றன. அப்போது, தன் சகோதரனுக்கும் தனக்கும் இடையில் பகைமை கொண்ட ஓர் அடியானைத் (மனிதனைத்) தவிர, நம்பிக்கை கொண்ட ஒவ்வொரு அடியானும் (மனிதனும்) மன்னிக்கப்படுகிறான். ‘இவ்விருவரும் சமாதானமாகும் வரை இவர்களை விட்டுவிடுங்கள்; அல்லது இவ்விருவரும் சமாதானமாகும் வரை இவர்களைத் தாமதப்படுத்துங்கள்’ என்று (வானவர்களிடம்) கூறப்படுகிறது.”