அப்துல் மலிக் பின் மர்வான் அவர்கள், உம்மு தர்தா அவர்களுக்குத் தன் தரப்பிலிருந்து வீட்டு அலங்காரப் பொருட்கள் சிலவற்றை அனுப்பி வைத்தார். ஓர் இரவில் அப்துல் மலிக் எழுந்து தன் பணியாளரை அழைத்தார். அவர் (வருவதற்குத்) தாமதமானதால் அவரைச் சபித்தார். பொழுது விடிந்ததும் உம்மு தர்தா அவர்கள் அவரிடம், "இன்றிரவு நீர் உம்முடைய பணியாளரை அழைத்தபோது அவரைச் சபித்ததை நான் கேட்டேன்" என்று கூறினார்.
பிறகு அவர், "அபூ தர்தா (ரழி) அவர்கள் சொல்லக் கேட்டுள்ளேன்: 'அதிகம் சபிப்பவர்கள் மறுமை நாளில் பரிந்துரையாளர்களாகவோ, சாட்சிகளாகவோ இருக்கமாட்டார்கள்' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்" என்று தெரிவித்தார்.
அபுத்தர்தா (ரழி) அவர்கள் கூறினார்கள்:
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறக்கேட்டேன்: அதிகமாகச் சபிப்பவர்கள் சாட்சியாளர்களாகவோ பரிந்துரைப்பவர்களாகவோ இருக்க மாட்டார்கள்.
وعن أبي الدرداء رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم : لا يكون اللعانون شفعاء، ولا شهداء يوم القيامة ((رواه مسلم)).
அபுத் தர்தா (ரழி) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "அதிகமாகச் சபிப்பவர்கள், மறுமை நாளில் பரிந்துரை செய்பவர்களாகவோ, சாட்சியாளர்களாகவோ இருக்க மாட்டார்கள்."