ஹிஷாம் பின் ஹகீம் பின் ஹிஸாம் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அவர் ஷாம் (சிரியா) தேசத்தில் சில மக்களைக் கடந்து சென்றார். அவர்கள் வெயிலில் நிற்க வைக்கப்பட்டிருந்தனர்; மேலும் அவர்களின் தலைகளில் எண்ணெய் ஊற்றப்பட்டிருந்தது. அவர், "இது என்ன?" என்று கேட்டார். அதற்கு, "கராஜ் (வரி) விஷயத்தில் இவர்கள் தண்டிக்கப்படுகிறார்கள்" என்று கூறப்பட்டது. அப்போது அவர் கூறினார்: "அறிந்துகொள்ளுங்கள்! நிச்சயமாக இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டுள்ளேன்: 'இவ்வுலகில் (மக்களைத்) துன்புறுத்துபவர்களை நிச்சயமாக அல்லாஹ் தண்டிப்பான்'."
ஹிஷாம் இப்னு ஹகீம் (ரழி) அவர்கள், ஜிஸ்யா வரி பாக்கிக்காக சில நபதீயர்களை வெயிலில் நிறுத்தித் தண்டித்துக் கொண்டிருந்த (ஹிம்ஸ் பகுதி ஆட்சியாளராக இருந்த) ஒருவரைக் கண்டார்கள். அவர் (ஹிஷாம்) கேட்டார்கள்: “இது என்ன? நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுவதைக் கேட்டேன்: ‘அல்லாஹ், இவ்வுலகில் மக்களைத் துன்புறுத்தும் நபர்களை வேதனை செய்வான்.’”
ஹிஷாம் இப்னு ஹகீம் இப்னு ஹிஸாம் (ரழி) அவர்கள், ஜிஸ்யா (வரி) செலுத்துவது தொடர்பாக ‘நபதி’ இன மக்களில் சிலரை வெயிலில் நிறுத்தி வைத்திருந்த ஹிம்ஸ் பகுதி ஆளுநரைக் கண்டார்கள். அப்போது அவர்கள், “என்ன இது? ‘இவ்வுலகில் மக்களை வேதனை செய்பவர்களை நிச்சயமாக அல்லாஹ் வேதனை செய்வான்’ என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டிருக்கிறேன்” என்று கூறினார்கள்.