الحادي عشر: عنه عن النبي صلى الله عليه وسلم قال: لقد رأيت رجلا يتقلب في الجنة في شجرة قطعها من ظهر الطريق كانت تؤذى المسلمين .((رواه مسلم)).
وفي رواية: مر رجل بغصن شجرة على ظهر طريق فقال: والله لأنحين هذا عن المسلمين لا يؤذيهم، فأدخل الجنة .
وفي رواية لهما: بينما رجل يمشى بطريق وجد غصن شوك على الطريق، فأخره فشكره الله له، فغفر له .
அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "ஒரு மனிதர் சொர்க்கத்தில் (இன்பங்களை அனுபவித்தவராகப்) புரண்டு கொண்டிருப்பதை நான் கண்டேன். முஸ்லிம்களுக்குத் தொல்லை தந்து கொண்டிருந்த ஒரு மரத்தை பாதையின் நடுவிலிருந்து அவர் வெட்டி அகற்றியதே அதற்குக் காரணமாகும்."
(நூல்: முஸ்லிம்)
மற்றொரு அறிவிப்பில்: "ஒரு மனிதர் பாதையின் நடுவே (கிடந்த) ஒரு மரக்கிளையைக் கடந்து சென்றார். அப்போது அவர், 'அல்லாஹ்வின் மீது ஆணையாக! முஸ்லிம்களுக்கு இது தொல்லை தராதிருக்க, இதை அவர்களின் பாதையிலிருந்து நான் நிச்சயமாக அகற்றுவேன்' என்று கூறினார். (அதை அகற்றியதால்) அவர் சொர்க்கத்தில் நுழைவிக்கப்பட்டார்."
புகாரீ மற்றும் முஸ்லிமில் உள்ள அறிவிப்பில்: "ஒரு மனிதர் பாதையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, பாதையில் ஒரு முட்செடியின் கிளையைக் கண்டார். உடனே அதை (பாதையிலிருந்து) அகற்றி வைத்தார். அல்லாஹ் அவனது செயலை அங்கீகரித்து, அவனை மன்னித்தான்."