وعن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال: "الناس معادن كمعادن الذهب والفضة، خيارهم في الجاهلية خيارهم في الإسلام إذا فقهوا، والأرواح جنود مجندة، فما تعارف منها ائتلف، وما تناكر منها اختلف" ((رواه مسلم؟)).
((وروى البخاري)) قوله: "الأرواح" من رواية عائشة رضي الله عنها
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "மக்கள் தங்கம் மற்றும் வெள்ளிச் சுரங்கங்களைப் போன்றவர்கள்; அவர்களில் ஜாஹிலிய்யா (இஸ்லாத்திற்கு முந்தைய அறியாமைக் காலம்) காலத்தில் சிறந்தவர்களாக இருந்தவர்கள், மார்க்க ஞானம் பெற்றால் இஸ்லாத்திலும் சிறந்தவர்கள் ஆவார்கள். மேலும், ஆன்மாக்கள் ஒன்று திரட்டப்பட்ட படைவீரர்களைப் போன்றவை; அவற்றில் (ஒன்றுக்கொன்று) அறிமுகமானவை ஒன்றிவிடுகின்றன; அறிமுகம் இல்லாதவை வேறுபட்டுவிடுகின்றன".
(நூல்: முஸ்லிம்)
மேலும் புகாரீ (ரஹ்) அவர்கள், "ஆன்மாக்கள்" எனும் (பிற்பகுதி) கூற்றை ஆயிஷா (ரழி) அவர்களின் அறிவிப்பாகப் பதிவு செய்துள்ளார்கள்.