அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தங்கள் படுக்கைக்குச் செல்லும் போது, கூறினார்கள்: எங்களுக்கு உணவளித்து, எங்களுக்குப் புகட்டி, எங்களுக்குப் போதுமானதை வழங்கி, எங்களுக்குப் புகலிடம் அளித்த அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும். அவர்களுக்குப் போதுமானதை வழங்குவதற்கோ, அல்லது புகலிடம் அளிப்பதற்கோ யாருமில்லாத எத்தனையோ பேர் இருக்கிறார்கள்.
وعن أنس رضي الله عنه، أن النبي صلى الله عليه وسلم، كان إذا أوى فراشه قال: الحمد لله الذي أطعمنا وسقانا، وكفانا وآوانا، فكم ممن لا كافي له ولا مئوي ((رواه مسلم)).
அனஸ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்கள் உறங்கச் செல்லும்போதெல்லாம், "அல்ஹம்து லில்லாஹி-ல்லதீ அத்அமனா வ ஸகானா, வ கஃபானா வ ஆவானா, ஃபகம் மிம்மன் லா காஃபிய லஹு வ லா முஃவிய (எங்களுக்கு உணவளித்து, பானம் புகட்டி, எங்கள் தேவைகளை நிறைவேற்றி, எங்களுக்கு அடைக்கலம் தந்த அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் உரியது. தேவைகளை நிறைவேற்றிக்கொடுப்பவரும், அடைக்கலம் கொடுப்பவரும் இல்லாத எத்தனையோ பேர் இருக்கிறார்கள்)" என்று கூறுவார்கள்.