இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

6521ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنَا سَعِيدُ بْنُ أَبِي مَرْيَمَ، أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، قَالَ حَدَّثَنِي أَبُو حَازِمٍ، قَالَ سَمِعْتُ سَهْلَ بْنَ سَعْدٍ، قَالَ سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ ‏ ‏ يُحْشَرُ النَّاسُ يَوْمَ الْقِيَامَةِ عَلَى أَرْضٍ بَيْضَاءَ عَفْرَاءَ كَقُرْصَةِ نَقِيٍّ ‏ ‏‏.‏ قَالَ سَهْلٌ أَوْ غَيْرُهُ لَيْسَ فِيهَا مَعْلَمٌ لأَحَدٍ‏.‏
ஸஹ்ல் பின் ஸஅத் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நான் நபி (ஸல்) அவர்கள், “மக்கள் மறுமை நாளில் செம்மையும் வெண்மையும் கலந்த ஒரு நிலத்தில் ஒன்று திரட்டப்படுவார்கள்; அது தூய்மையான மாவினால் செய்யப்பட்ட ஒரு சுத்தமான ரொட்டியைப் போன்று இருக்கும்” என்று கூறுவதை கேட்டேன்.

ஸஹ்ல் (ரழி) அவர்கள் மேலும் கூறினார்கள்: அந்த நிலத்தில் எவருக்கும் (பயன்படுத்திக் கொள்வதற்கான) எந்த அடையாளங்களும் இருக்காது.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح