தான் கேட்கும் ஒரு தீங்கான விஷயத்தைப் பொறுத்துக்கொள்வதில், கண்ணியமிக்க, கம்பீரமான அல்லாஹ்வை விடப் பொறுமையானவர் வேறு யாரும் இல்லை; வேறு எதுவும் இல்லை. அவர்கள் அவனுக்கு ஒரு மகன் இருப்பதாக வாதிடுகிறார்கள், அப்படியிருந்தும் அவன் அவர்களுக்கு சுகமளித்து, வாழ்வாதாரத்தையும் வழங்குகிறான்.