அபூ ஸயீத் (ரழி) மற்றும் அபூ ஹுரைரா (ரழி) ஆகியோர் அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "(சுவனத்தில்) ஒரு அழைப்பாளர் அழைப்பார்: 'நிச்சயமாக உங்களுக்கு வாழ்வு உண்டு, நீங்கள் ஒருபோதும் மரணிக்க மாட்டீர்கள்; நிச்சயமாக உங்களுக்கு ஆரோக்கியம் உண்டு, நீங்கள் ஒருபோதும் நோய்வாய்ப்பட மாட்டீர்கள்; நிச்சயமாக உங்களுக்கு இளமை உண்டு, நீங்கள் ஒருபோதும் முதுமையடைய மாட்டீர்கள்; நிச்சயமாக உங்களுக்கு அருட்கொடை உண்டு, நீங்கள் ஒருபோதும் துன்பத்தை அனுபவிக்க மாட்டீர்கள்.'"
அதுவே உயர்ந்தோனாகிய அல்லாஹ்வின் கூற்றாகும்:
(وَ تِلْكَ الْجَنَّةُ الَّتِي أُورِثْتُمُوهَا بِمَا كُنْتُمْ تَعْمَلُونَ)
"நீங்கள் செய்து கொண்டிருந்த (நற்)செயல்களின் காரணமாக நீங்கள் வாரிசாக ஆக்கப்பட்ட சுவர்க்கம் இதுவே." (குர்ஆன் 43:72)