ஸமுரா பின் ஜுன்துப் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (நரகவாசிகளான) அவர்களில் சிலரை நெருப்பு அவர்களின் கணுக்கால்கள் வரையிலும் பிடிக்கும். அவர்களில் சிலரை நெருப்பு அவர்களின் முழங்கால்கள் வரையிலும் பிடிக்கும். அவர்களில் சிலரை நெருப்பு அவர்களின் இடுப்பு வரையிலும் பிடிக்கும். அவர்களில் சிலரை நெருப்பு அவர்களின் காரை எலும்புகள் வரையிலும் பிடிக்கும்.