அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
'சுவர்க்கமும் நரகமும் தர்க்கம் செய்தன. சுவர்க்கம் கூறியது: 'பலவீனர்களும் ஏழைகளும் எனக்குள் நுழைவார்கள்.' நரகம் கூறியது: 'கொடுங்கோலர்களும் பெருமையடிப்பவர்களும் எனக்குள் நுழைவார்கள்.' எனவே அல்லாஹ் நரகத்திடம் கூறினான்: 'நீ எனது வேதனை (தண்டனை), நான் நாடியவர்களை உன் மூலம் தண்டிப்பேன் (பழிவாங்குவேன்).' மேலும் அல்லாஹ் சுவர்க்கத்திடம் கூறினான்: 'நீ எனது கருணை, நான் நாடியவர்களுக்கு உன் மூலம் கருணை காட்டுவேன்.'
وعن أبي سعيد الخدري رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال: احتجت الجنة والنار فقالت النار: في الجبارون والمتكبرون، وقالت الجنة: في ضعفاء الناس ومساكينهم، فقضى الله بينهما: إنك الجنة رحمتي أرحم بك من أشاء، وإنك النار أعذب بك من أشاء، ولكليكما علي ملؤها ((رواه مسلم)).
அபூ ஸயீத் அல்குத்ரீ (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: சொர்க்கமும் நரகமும் தர்க்கித்துக்கொண்டன. நரகம், "என்னில் அடக்குமுறையாளர்களும் பெருமை அடிப்பவர்களும் உள்ளனர்" என்றது. சொர்க்கம், "என்னில் மக்களில் பலவீனமானவர்களும் ஏழைகளும் உள்ளனர்" என்றது. அல்லாஹ் அவ்விரண்டிற்கும் மத்தியில் தீர்ப்பளித்தான். (சொர்க்கத்தை நோக்கி) "நீயே எனது கருணை; உன்னைக் கொண்டு நான் நாடியவர்களுக்கு அருள்புரிவேன்" என்றான். மேலும் (நரகத்தை நோக்கி) "உன்னைக் கொண்டு நான் நாடியவரை தண்டிப்பேன்" (ஆகவே நீயே எனது தண்டனை) என்றான். "உங்கள் இருவரையும் நிரப்புவது என் மீதான பொறுப்பாகும்".
(முஸ்லிம்)