அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“நரகவாசிகளில் இரண்டு வகையினரை நான் (இன்னும்) கண்டதில்லை. ஒரு வகையினர், மாடுகளின் வால்களைப் போன்ற சாட்டைகளைத் தம்முடன் வைத்திருப்பார்கள்; அவற்றால் மக்களை அடிப்பார்கள். மற்றொரு வகையினர் பெண்கள்; அவர்கள் ஆடை அணிந்திருந்தும் நிர்வாணமாகத் தோற்றமளிப்பார்கள்; பிறரைச் சாயச் செய்பவர்கள் (தீயவற்றின்பால்); (தாங்களே நேர்வழியிலிருந்து) சாய்ந்திருப்பவர்கள். அவர்களுடைய தலைகள் ஒருபக்கம் சாய்ந்திருக்கும் ‘பக்த்’ ஒட்டகத்தின் திமில்களைப் போல இருக்கும். அவர்கள் சொர்க்கத்தில் நுழையவும் மாட்டார்கள்; அதன் வாசனையை நுகரவும் மாட்டார்கள். நிச்சயமாக, அதன் வாசனையோ இவ்வளவு இவ்வளவு தொலைவிலிருந்து வீசக்கூடும்.”