ஆயிஷா (ரழி) அவர்கள் கூறியதாவது:
'அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘யாரது கணக்கு (மிக நுணுக்கமாக) விசாரிக்கப்படுகிறதோ, அவர் நாசமடைவார்’ என்று கூற நான் கேட்டேன். நான், 'அல்லாஹ்வின் தூதரே! நிச்சயமாக அல்லாஹ் தஆலா: "(ஃபஅம்மா மன் ஊதிய கிதாபஹு பியமீனிஹி ஃபஸவ்ஃப யுஹாஸபு ஹிஸாபன் யஸீரா)" (எவர் தனது பதிவேட்டை வலது கையில் பெறுகிறாரோ, அவர் இலகுவான கணக்கு விசாரிக்கப்படுவார்) என்று கூறுகிறானே?' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், 'அது (செயல்களின் பதிவேடு) சமர்ப்பிக்கப்படுவதுதான் (அதாவது, செயல்கள் அவருக்கு காட்டப்படும், ஆனால் கேள்வி கேட்கப்படாது)' என்று கூறினார்கள்.