அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள் என தாம் கேட்டதாக: “நிச்சயமாக ஓர் அடியார் ஒரு வார்த்தையை, (அது நல்லதா கெட்டதா என) ஆராய்ந்து பார்க்காமல் பேசிவிடுவார். அதன் காரணமாக அவர், கிழக்குக்கும் (மேற்குக்கும்) இடைப்பட்ட தூரத்தை விடவும் அதிகமான தூரத்தில் நரகில் சறுக்கி விழுவார்.”
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுவதாக அறிவித்தார்கள்:
"நிச்சயமாக ஓர் அடியான் (நன்மை தீமை பற்றித்) தெளிவுபடுத்திக் கொள்ளாமல் ஒரு வார்த்தையைப் பேசுகிறான். அதன் காரணமாக, அவன் நரக நெருப்பில் கிழக்குக்கும் மேற்குக்கும் இடைப்பட்ட தூரத்தை விட அதிக தொலைவிற்கு வீழ்ந்துவிடுகிறான்."