அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற தாம் கேட்டதாக: 'நிச்சயமாக ஓர் அடியான் ஒரு வார்த்தையை, (அது நல்லதா கெட்டதா என) ஆராய்ந்து பார்க்காமல் பேசிவிடுவான். அதன் காரணமாக அவன், கிழக்குக்கும் (மேற்குக்கும்) இடைப்பட்ட தூரத்தை விடவும் அதிகமான தூரத்தில் நரகில் சறுக்கி விழுவான்.'
நிச்சயமாக ஓர் அடியான் ஒரு வார்த்தையை (அதன் விளைவுகளைப் பற்றி சிந்திக்காமல்) பேசுகிறான். அதன் காரணமாக அவன், கிழக்கிற்கும் மேற்கிற்கும் இடையிலுள்ள தூரத்தை விட அதிக தூரத்திற்கு நரக நெருப்பில் விழுகிறான்.