حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ، عَنْ سُهَيْلٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي،
سَعِيدٍ عَنْ أَبِيهِ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ إِذَا تَثَاوَبَ أَحَدُكُمْ فَلْيُمْسِكْ بِيَدِهِ
فَإِنَّ الشَّيْطَانَ يَدْخُلُ .
அபூ சயீத் அல்-குத்ரீ (ரழி) அவர்களின் மகன் தம் தந்தையார் (அபூ சயீத் அல்-குத்ரீ (ரழி) அவர்கள்) வாயிலாக, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், 'உங்களில் ஒருவர் கொட்டாவி விட்டால், அவர் தமது கையால் அதைத் தடுக்க முயலட்டும், ஏனெனில் அதன் வழியாக ஷைத்தான் நுழைகிறான்' எனக் கூறினார்கள் என்று அறிவித்தார்.
அபூ சயீத் அல்குத்ரீ (ரழி) அவர்களின் மகன் தம் தந்தையிடமிருந்து அறிவித்தார்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்:
உங்களில் ஒருவர் கொட்டாவி விட்டால், அவர் தம் கையால் அதை அடக்க முயலட்டும்; ஏனெனில், ஷைத்தான் அதனுள் நுழைகிறான்.
وعن أبي سعيد الخدري رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم : إذا تثاءب أحدكم فليمسك بيده علي فيه، فإن الشيطان يدخل ((رواه مسلم)).
அபூ ஸயீத் அல்குத்ரீ (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள், "ஒருவருக்குக் கொட்டாவி வந்தால், அவர் தமது கையை வாயின் மீது வைத்துக்கொள்ளட்டும். இல்லையெனில், ஷைத்தான் உள்ளே நுழைந்துவிடுவான்."