“வ யஸ்தஃப்தூனக்க ஃபிந்நிஸாஇ குலில்லாஹு யுஃப்தீக்கும் ஃபீஹின்ன” (பெண்கள் விஷயமாக அவர்கள் உம்மிடம் மார்க்கத் தீர்ப்புக் கேட்கிறார்கள். கூறுங்கள்: அல்லாஹ் அவர்கள் விஷயத்தில் உங்களுக்குத் தீர்ப்பளிக்கிறான்) என்பது முதல் “வதர்கபூன அன் தன்கிஹூஹுன்ன” (அவர்களை நீங்கள் மணமுடிக்க விரும்புகிறீர்கள்) என்பது வரையிலான இறைவசனமானது, ஓர் அநாதைப் பெண்ணைத் தம் பொறுப்பில் வைத்திருக்கும் ஒரு மனிதரைப் பற்றி அருளப்பட்டது. அவர் அப்பெண்ணின் பொறுப்பாளராகவும் வாரிசுதாரராகவும் இருக்கிறார். அப்பெண், ஒரு பேரீச்ச மரம் உட்பட அவருடைய செல்வம் (அனைத்திலும்) அவருடன் கூட்டாளியாக இருக்கிறாள். ஆனால், அவர் அவளை மணமுடிக்க விரும்புவதில்லை; அதே சமயம் அவளை வேறொரு ஆணுக்கு மணமுடித்துக் கொடுக்கவும் விரும்புவதில்லை; (அவ்வாறு செய்து கொடுத்தால்) அவள் தன்னுடன் கூட்டாக இருப்பதைப் போன்று, அவரும் (அந்த அந்நிய கணவரும்) தம் செல்வத்தில் கூட்டாகிவிடுவார் (என்பதனால் அதை வெறுக்கிறார்). எனவே அவர் அவளை (திருமணம் ஆகவிடாமல்) தடுத்து விடுகிறார். ஆகவே இந்த வசனம் அருளப்பட்டது.
"இது, ஒரு மனிதனிடம் இருக்கும் அநாதைப் பெண்ணைப் பற்றியதாகும். ஒருவேளை அவள் அவனது செல்வத்தில் அவனுக்குப் பங்காளியாக இருக்கலாம். மேலும் அவள் மீது அவனுக்கே அதிக உரிமை உண்டு. ஆனால் அவளை மணக்க அவன் விரும்புவதில்லை. எனவே, அவளது செல்வத்தில் வேறொருவர் தன்னுடன் கூட்டாவதை வெறுத்து, அவளது செல்வத்திற்காக அவளை (வேறு எவரும் மணக்காதவாறு) தடுத்து விடுகிறான்; மேலும் அவளைத் தனக்கு அல்லாத வேறு எவருக்கும் மணம் முடித்து வைப்பதில்லை."
ஆயிஷா (ரலி) அவர்கள், **"வயஸ்தஃப்தூனக்க ஃபிந் நிஸாஇ குலில்லாஹு யுஃப்தீக்கும் ஃபீஹின்ன"** ("பெண்களைப் பற்றி அவர்கள் உம்மிடம் மார்க்கத் தீர்ப்புக் கேட்கிறார்கள். கூறுவீராக: அல்லாஹ் அவர்களுக்குரிய தீர்ப்பை உங்களுக்கு வழங்குகிறான்") என்ற (திருக்குர்ஆன் 04:127) இறைவசனம் குறித்துக் கூறியதாவது:
"இது ஒரு மனிதரின் பராமரிப்பில் இருக்கும் அநாதைப் பெண்ணைப் பற்றியதாகும். அவள் அவனது செல்வத்தில், (எதுவரை எனில்) ஒரு பேரீச்ச மரத்தில்கூட அவனுக்குப் பங்காளியாக இருப்பாள். அவன் அவளை மணந்துகொள்ளவும் விரும்பமாட்டான்; அதே சமயம் அவளை வேறொரு ஆணுக்கு மணமுடித்துக் கொடுக்கவும் விரும்பமாட்டான்; (வேறொருவன் அவளை மணந்தால்) அவன் தனது செல்வத்தில் பங்காளியாகிவிடுவான் (என்பதே அதற்குக் காரணம்). ஆகவே அவன் அவளை (திருமணம் செய்யவிடாமல்) தடுத்து வைத்திருக்கிறான்."