ஜாபிர் பின் ஸமுரா (ரலி) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம் வந்தார்கள். நாங்கள் தொழுகையில் எங்கள் கைகளை உயர்த்திக் கொண்டிருந்தோம். அவர்கள் கூறினார்கள்: 'இவர்களுக்கு என்ன நேர்ந்தது? தொழுகையில் தங்கள் கைகளை, மிரண்டோடும் குதிரைகளின் வால்களைப் போல (அடிக்கடி அசைத்து, கட்டுப்பாடின்றி) உயர்த்துகின்றனர்! தொழுகையில் அமைதியாக இருங்கள்.'