`அப்துல்லாஹ் பின் `அப்துல்லாஹ் அவர்கள் அறிவித்தார்கள்:
`அப்துல்லாஹ் பின் `உமர் (ரழி) அவர்கள் தொழுகையில் அமரும்போது சம்மணமிட்டு அமர்வதை நான் கண்டேன். அக்காலத்தில் நான் வயது குறைந்தவனாக இருந்ததால் நானும் அவ்வாறே செய்தேன்.
`அப்துல்லாஹ் பின் `உமர் (ரழி) அவர்கள் என்னைத் தடுத்தார்கள். மேலும், "வலது காலை நட்டு வைத்து இடது காலை மடக்குவதே தொழுகையின் சுன்னத் ஆகும்" என்று கூறினார்கள்.
அதற்கு நான், "தாங்கள் அவ்வாறு செய்கிறீர்களே!" என்று கேட்டேன்.
அதற்கு அவர்கள், "என் கால்கள் என்னைத் தாங்குவதில்லை" என்று கூறினார்கள்.