அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “என் உயிர் எவன் கைவசம் இருக்கிறதோ அவன் மீது சத்தியமாக! நான் விறகுகளைச் சேகரிக்கக் கட்டளையிட்டு, பின்னர் தொழுகைக்காக அதான் சொல்லக் கட்டளையிட்டு, பின்னர் ஒருவரை மக்களுக்கு இமாமத் செய்யக் கட்டளையிட்டு, பின்னர் (ஜமாஅத் தொழுகைக்கு வராத) சில ஆண்களிடம் சென்று, அவர்கள்மீது அவர்களுடைய வீடுகளை எரித்துவிடவும் நான் நாடினேன். என் உயிர் எவன் கைவசம் இருக்கிறதோ அவன் மீது சத்தியமாக! அவர்களில் ஒருவர், நல்ல இறைச்சி போர்த்தப்பட்ட ஒரு எலும்புத் துண்டோ அல்லது (விலா எலும்புகளுக்கு இடையில் உள்ள) இரண்டு நல்ல இறைச்சித் துண்டுகளோ கிடைக்கும் என்று தெரிந்தால், அவர் இஷா தொழுகைக்கு (ஜமாஅத்துடன்) வந்திருப்பார்.”