அப்துல்லாஹ் பின் அர்கம் (ரழி) அவர்கள் தனது தோழர்களுக்குத் தொழுகை நடத்துபவர்களாக இருந்தார்கள். ஒரு நாள் தொழுகைக்கான நேரம் வந்தபோது, அவர்கள் (இயற்கைத்) தேவையை நிறைவேற்றச் சென்றுவிட்டு (மலம் கழிக்க), பிறகு திரும்பி வந்து கூறினார்கள்:
"நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், 'உங்களில் ஒருவருக்கு (மலம் கழிக்க வேண்டிய) இயற்கைத் தேவை ஏற்பட்டால், அவர் தொழுவதற்கு முன், முதலில் அதை நிறைவேற்றிக்கொள்ளட்டும்' என்று கூறக் கேட்டேன்."