இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக அறிவித்தார்கள்:
கண் திருஷ்டி (என்பது) உண்மையாகும். விதியை முந்திக்கொண்டு (ஏதேனும்) செல்ல முடியுமானால், கண் திருஷ்டி அதனை முந்திச் சென்றிருக்கும். மேலும், (கண் திருஷ்டிக்கு உள்ளானவருக்காக உங்கள் உடல் உறுப்புகளைக்) கழுவித் தரும்படி நீங்கள் கோரப்பட்டால், அவ்வாறே கழுவிக் கொடுங்கள்.