இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

6410ஸஹீஹ் முஸ்லிம்
وَحَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، وَمُحَمَّدُ بْنُ عَبْدِ الْمَلِكِ الأُمَوِيُّ، قَالاَ حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، ح
وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، وَابْنُ، بَشَّارٍ قَالاَ حَدَّثَنَا مُعَاذُ بْنُ هِشَامٍ، حَدَّثَنَا أَبِي كِلاَهُمَا، عَنْ
قَتَادَةَ، عَنْ زُرَارَةَ بْنِ أَوْفَى، عَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم بِهَذَا
الْحَدِيثِ ‏"‏ خَيْرُ هَذِهِ الأُمَّةِ الْقَرْنُ الَّذِينَ بُعِثْتُ فِيهِمْ ثُمَّ الَّذِينَ يَلُونَهُمْ ‏"‏ ‏.‏ زَادَ فِي حَدِيثِ أَبِي
عَوَانَةَ قَالَ وَاللَّهُ أَعْلَمُ أَذَكَرَ الثَّالِثَ أَمْ لاَ ‏.‏ بِمِثْلِ حَدِيثِ زَهْدَمٍ عَنْ عِمْرَانَ وَزَادَ فِي حَدِيثِ
هِشَامٍ عَنْ قَتَادَةَ ‏"‏ وَيَحْلِفُونَ وَلاَ يُسْتَحْلَفُونَ ‏"‏ ‏.‏
இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "இந்தச் சமுதாயத்தில் சிறந்த தலைமுறையினர், நான் எந்தத் தலைமுறையினரிடையே அனுப்பப்பட்டேனோ அவர்கள் ஆவர். பிறகு அவர்களைத் தொடர்ந்து வருபவர்கள் ஆவர்."

(அறிவிப்பாளர்களில் ஒருவரான) அபூஅவானா (ரஹ்) அவர்களின் அறிவிப்பில் கூடுதலாக இடம்பெற்றுள்ளது: "(நபி (ஸல்) அவர்கள்) மூன்றாவது (தலைமுறையைக்) குறிப்பிட்டர்களா, இல்லையா என்பதை அல்லாஹ்வே நன்கறிவான்." (இந்த அறிவிப்பு) ஸஹ்தம் (ரஹ்) அவர்கள் இம்ரான் (ரலி) அவர்களிடமிருந்து அறிவித்த ஹதீஸைப் போன்றே அமைந்துள்ளது.

மேலும், ஹிஷாம் (ரஹ்) அவர்கள் கத்தாதா (ரஹ்) அவர்களிடமிருந்து அறிவித்த ஹதீஸில் கூடுதலாக இடம்பெற்றுள்ளது: "அவர்கள் சத்தியம் செய்யும்படி கேட்கப்படாமலேயே சத்தியம் செய்வார்கள்."
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح