இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவித்ததாவது: ஒரு மனிதர் தனது மனைவியை விவாகரத்து செய்கிறார். பின்னர் அந்தப் பெண்ணை மற்றொருவர் மணந்து கொள்கிறார். அந்த இரண்டாவது கணவர், அப்பெண்ணுடன் தாம்பத்திய உறவு கொள்வதற்கு முன்பே அவரை விவாகரத்து செய்துவிடுகிறார். (இந்த நிலையில்) அப்பெண் தனது முதல் கணவரிடம் (மீண்டும்) திரும்பலாமா (என்று கேட்கப்பட்டபோது), நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"இல்லை, அவள் (இரண்டாவது கணவருடன்) 'உசைலா'வை (தாம்பத்திய இன்பத்தை) சுவைக்கும் வரை (திரும்ப) முடியாது."