حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم نَهَى عَنِ الشِّغَارِ، وَالشِّغَارُ أَنْ يُزَوِّجَ الرَّجُلُ ابْنَتَهُ عَلَى أَنْ يُزَوِّجَهُ الآخَرُ ابْنَتَهُ، لَيْسَ بَيْنَهُمَا صَدَاقٌ.
இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அஷ்-ஷிகார் என்பதைத் தடை செய்தார்கள். அஷ்-ஷிகார் என்பதன் பொருளாவது, ஒருவர் தம் மகளை மற்றொருவருக்கு மணமுடித்துக் கொடுப்பதும், அம்மற்றொருவர் தம் மகளை இவருக்கு மஹர் எதுவும் கொடுக்காமல் மணமுடித்துக் கொடுப்பதும் ஆகும்.