حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ لاَ يَنْظُرُ اللَّهُ يَوْمَ الْقِيَامَةِ إِلَى مَنْ جَرَّ إِزَارَهُ بَطَرًا .
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள், "பெருமையினாலும் அகங்காரத்தினாலும் தனது இசாரை (தரையில்) இழுத்துச் செல்பவனை மறுமை நாளில் அல்லாஹ் (கருணையுடன்) பார்க்க மாட்டான்."
இப்னு உமர் (ரலி) அவர்கள் வாயிலாக நபி (ஸல்) அவர்களிடமிருந்து (முந்தைய ஹதீஸைப் போன்றே) இது அறிவிக்கப்பட்டுள்ளது. அபூயூனுஸ் அவர்கள் முஸ்லிம் (பின் யன்னாக்) வழியாக அறிவிக்கும் அறிவிப்பில், (முஸ்லிம் பின் யன்னாக்கின் குறிப்புப் பெயரான) 'அபுல் ஹஸன்' என்பது இடம்பெற்றுள்ளது. மேலும் (மேற்கூறப்பட்ட) அவர்கள் அனைவரின் அறிவிப்பிலும் "யார் தனது கீழாடையை (இஸாரை) இழுத்துச் செல்கிறாரோ..." என்றே இடம்பெற்றுள்ளது. "தனது ஆடையை (தௌபை)..." என்று அவர்கள் கூறவில்லை.